அடிவயிற்றில் தங்கியுள்ள கொழுப்பை குறைக் க வேண்டுமா? இதோ 10 வழிகள்!


அடிவயிற்றில் தங்கியுள்ள கொழுப்பை குறைக்க வேண்டுமா? இதோ 10 வழிகள்!

combat-obesityஇன்றைய இளைய தலைமுறையாகட்டும், பெரியவர்களாகட்டும் அவர்களுடைய எடையை, குறிப்பாக வயிற்றை குறைக்க படும் பாடுகளை சொல்லி மாளாது. இவ்வாறு வயிற்றுப்பகுதி பெரியதாக இருப்பதை அதை விட பெரிய குறையாக கருதுபவர்கள் பலரும் உண்டு.

இந்த குறையை தீர்க்க ஏதேனும் வழிமுறைகள் உள்ளனவா என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் இதோ நாங்கள் சில குறிப்புகளை கொடுக்கிறோம். படியுங்கள் பயன் பெறுங்கள்.

சரியாக சாப்பிடுதல்

சரியான முறையில் சாப்பிட்டால் 80% கொழுப்பை நிச்சயம் குறைக்க முடியும். ஆரோக்கியமான மற்றும் சீரான உணவு முறையை பின்பற்றும் போது இதை நாம் சாதிக்க முடியும். தேவையான அளவு நுண் மற்றும் பெரும ஊட்டச் சத்துக்களை சாப்பிட்டால் கொழுப்பை குறைக்க முடியும். இடை உணவுகள், துரித உணவுகள் ஆகிய கடைகளில் வாங்கும் உணவுகளை அறவே தவிர்த்தால் தடியான வயிறை தட்டையான வயிறாக மாற்ற முடியும். இயற்கையான காய்கறிகள் மற்றும் பழங்கள், வேக வைத்த உணவு வகைகளை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள்.

தண்ணீர்

தாகம், அயர்ச்சி, பசி ஆகியவற்றைப் பற்றி தெளிவாக உணராத சிலர் பசிக்கும் போது நிறைய சர்க்கரை கொண்ட உணவை உண்டு எடையை தங்களை அறியாமலேயே அதிகப்படுத்திக் கொள்கின்றனர் அல்லது கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவை பசியில் விரைந்து உண்கின்றனர். இது தவறு. எப்போதும் ஒரு தண்ணீர் பாட்டிலை கையில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். குறைந்தது 6 முதல் 8 டம்ப்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும். ஆனால் இது உங்கள் எடை மற்றும் வாழ்க்கை முறையை சார்ந்த விஷயமாக அமைகின்றது. இதை கண்டறிந்து உங்களுக்கு தேவையான தண்ணீரின் அளவை கண்டறிந்து அதை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

உடற்பயிற்சி

பல மணி நேரம் உழைப்பு மற்றும் வெகு தூர ஓட்டப் பயிற்சி ஆகிய இரண்டும் தரும் பலன்களை விட சிறிது நேரம் கடினமான உடற்பயிற்சியில் ஈடுபடும் போது கொழுப்பு அதிகமாக குறையும். உதாரணமாக நீங்கள் திரெட் மில்லில் பயிற்சி மேற்கொள்ளும் போது அவ்வப்போது உங்கள் வேகத்தை கூட்டி சில வினாடிகள் அதை தொடர்ந்து பயிற்சி செய்த பின் மீண்டும் நமது பழைய வேகத்திற்கு திரும்பி வரும் போது சிறந்த அளவில் தொப்பை குறையும்.

சர்க்கரை வேண்டாம்

பொதுவாக நமக்கு கடைகளில் கிடைக்கும் சர்க்கரையை தவிர்ப்பதும் அல்லது குறைப்பதும் நல்லது. இதை தினமும் நமது உணவில் தவிர்த்தால் சிறந்தது. நாம் தினமும் உண்ணும் உணவில் சர்க்கரை நிறைய அளவு ஒளிந்திருக்கும். இதை உணர்ந்து, நாம் உண்ணும் உணவில் சாக்கரையை குறைப்பது நல்லது. இதற்கு பதிலாக தேன், பனங்கற்கண்டு மற்றும் அதிமதுர சாறு ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
சோடியம் உட்கொள்ளுதலை குறைத்தல்
உப்பை கண்டிப்பாக உணவில் சேர்த்து பயன்படுத்தும் இந்த காலத்தில் சோடியம் உப்பை தவிர, பொட்டாசியம் உப்பு, எலுமிச்சை உப்பு மற்றும் கடல் உப்பு ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம். மிளகு மற்றும் இதர மூலிகைகளை பயன்படுத்துவதன் மூலம் உப்பு உட்கொள்ளுவதை தவிர்க்க முடியும்.

வைட்டமின் சி உணவுகள்

உடலில் உள்ள கொழுப்புகளை சக்தியாக மாற்றும் கார்னிடைன் என்ற பொருளை சுரப்பதற்கு உதவும் வைட்டமின் சி மிகவும் அவசியமானதாக உள்ளது. அது மட்டுமல்லாமல் மன அழுத்தத்தால் சுரக்கப்படும் கார்டிசாலையும் வைட்டமின் சி கட்டுப்படுத்துகிறது. இந்த கார்டிசால் தான் வயிற்று கொழுப்பு அதிகரிப்பதற்கு மிக முக்கிய காரணமாகும்.

கொழுப்பை குறைக்கும் இந்திய உணவுகள்

கொழுப்பை குறைப்பதற்கு இயற்கையான வழிகள் பலவும் உள்ளன. பூண்டு, வெங்காயம், இஞ்சி, சிவப்பு மிளகு, கோஸ், தக்காளி, மற்றும் இலவங்கப்பட்டை, கடுகு, கிராம்பு ஆகியவையும் கொழுப்பை கரைக்க உதவுகின்றன. சிறிது கிராம்பு, பச்சை பூண்டு மற்றும் ஒரு அங்குல அளவிற்கு இஞ்சி ஆகியவற்றை கலந்து தினமும் காலை சாப்பிட்டு வந்தால் கொழுப்பை நிச்சயம் கரைக்க முடியும். வெதுவெதுப்பான தண்ணீரில் கொஞ்சம் எலுமிச்சை சாறு மற்றும் தேனை கலந்து, காலையில் வெறும் வயிற்றில் அருந்துவதும் மிகப் பிரபலமான உடல் எடையை குறைக்கும் வழியாக பின்பற்றப்படுகின்றது. இது போன்று பல வழிகள் உண்டு.
தேவையான ஆரோக்கியமூட்டும் கொழுப்புச் சத்தை சேர்த்துக் கொள்ளுதல் கெட்ட அல்லது தேவையற்ற கொழுப்புக்களை குறைக்கும் முயற்சியில் நாம் நல்ல கொழுப்பு வகைகளை சேர்க்க முயல வேண்டும். வெண்ணைய் பழம், ஆலிவ், தேங்காய் ஆகிய பருப்பு வகைகள் நல்ல கொழுப்புகளை கொண்டவையாகும்.

காலை உணவை கண்டிப்பாக சாப்பிடவும்

காலை உணவை தவிர்ப்பது உடல் எடையை குறைக்க உதவும் என்று நிறைய மக்கள் தவறாக நினைப்பதுண்டு. இது உடல் எடையை குறைக்காமல், உடல் வீக்கமடைய காரணமாகிவிடுகிறது. இதனால் வயிறு உப்புசமடைவது அதிகரித்து, பசி அதிகமாவதால் வயிற்றுக் கொழுப்பு மிகவும் அதிகமாகிறது. ஆகவே அவ்வப்போது நாம் சிறிது சிறிதாக உண்ணும் போது நமது உடல் செரிமானத்தை கட்டுப்படுத்தி உடல் எடையை மேம்படுத்த முடிகிறது. ஆகையால் உணவின் அளவை குறைத்து உண்ணும் நேரங்களை அதிகப்படுத்தி ஆரோக்கியமாக உடலை உருவாக்கிக் கொள்ளுங்கள். உலர்ந்த பழங்கள், பழ வகைகள் மற்றும் பச்சை அல்லது வேக வைக்காத காய்கறிகள் ஆகியவற்றை உண்ணலாம்.

தூக்கம்

உடல் எடையை மேம்படுத்த தூக்கம் மிகவும் அவசியமான ஒன்றாகும். அனைவருக்கும் 6 முதல் 8 மணி நேர உறக்கம் தேவைப்படுகிறது. உறங்காமல் இருப்பதும் உடல் எடையை கூட்டுவதாக உள்ளது. இத்தகைய எளிய வழிகளை பின்பற்றினால் வயிற்றுக் கொழுப்பை மட்டுமல்ல, முழு உடல் எடையையும் குறைத்து ஆரோக்கிய வாழ்வை வாழ முடியும். இதை முயற்சி செய்து வித்தியாசத்தை உணருங்கள்



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

Sonia Gandhi’s first lover Italian Footballer Franco Luison’s interview in Gente Magazine


profile_mask2.png

kalyan kalyan97 [vishwa_samvad] <vishwa_samvad> Unsubscribe

18:17 (7 minutes ago)
to

Bharatkalyan97: SoniaG first love affair makes it to Gente Magazine, Italy: Cover story: ‘La mia storia d’amore con Sonia’

image
Bharatkalyan97: SoniaG first love affair makes it to Gen…
View onbharatkalyan97.blogsp… Preview by Yahoo

On Sunday, October 19, 2014 8:38 AM, J Gopikrishnan <jgopikrishnan> wrote:

Sonia Gandhi’s first lover Italian Footballer Franco Luison’s interview in Gente Magazine : http://fbinvestigations.blogspot.in/2014/09/sonia-gandhis-first-love.html

Tuesday, 23 September 2014

Sonia Gandhi’s First Love affair!

This is a Love Story that the Indians may not know! This had happened before Antonia Maino ever met Rajive Gandhi in England! So we wish to call this ‘EXCLUSIVE’ for our Indian Readers!

Franco Luison
He was an Italian football player of ‘Serie A
Franco Luison.jpg

Antonia Maino
(aks. Sonia Gandhi)
rajiv-3_111012083949.jpg

Sonia Gandhi in 1968

Franco Luison, recollects in this interview to an Italian magazine ‘GENTE‘ of his four years of love story before she had met with Rajive.

My love affair with Antonia Maino
"We were in love and happy everywhere"
Our family were very happy and eager to know that we were in love. Her parents uses to accommodate me with great pleasure at their home of Orbassano near Turin where they were transferred in the 60’s.

She loved me and wanted to marry me, not the son of Indira.

We met for the first time at the see shore of Jesolo in the 60’s, when she was 14.

I was 26 when I met her for the first time under the shade of my beach umbrella, then I was famous, not Sonia! It seemed like a summer flirt for the first time but lasted for four years and our respective families were happy to see us together. Every sunday, after match, I used to go to Orbasano to meet her. Her family always received me with great pleasure and courtesy. Will remain with her until tuesday, before return for the practice.
Antonia with Franco
Lusiana,1964
IMG_20140919_111805.jpg
courtesy: Gente

Football was not her passion, though rarely turns up in stadium to see me in action. When finish the championship, during the summer, we used to go to Vicenza for weekends!


I was the first great lover of Antonia. Our love story lasted for 4 years. She wanted me to promise her to marry, but I use to postponed each time. Then she went to England where she met Rajiv Gandhi.


In 1964 she made a decision to go to England. Though I wasn’t happy, she made her trip. She narrated me in her letters everything she was doing. Once she came back for vacation and spoke of Rajive, son of Indira Gandhi, and "I’m invited to meet his mother and will be going to Delhi soon", she added. When she came back from New Delhi, she was convinced that will marriage Rajive Gandhi.

Though it hurt me very much, farewell to our four years relation wasn’t very tragic and our goodbye was in a very gentle manner.

He still keeps friendship with her family, and meets them at-least twice an year to exchange gifts during feasts. Nora, wife of Franco remember: "I was jealous of Sonia, for all his friends use to speak about her when I started our relation in the late 1964. "I was afraid one day Sonia would come back and I will loose Franco!" she added.

My Love Story With Sonia
(La mia storia d’amore con Sonia)
IMG_20140919_111859.jpg

So, Rajive Gandhi was her ‘second’ love at first sight!

Source
This is an interview published on GENTE, an Italian Magazine to Franco Luison by Luca Angelucci.
Cover story: ‘La mia storia d’amore con Sonia’
(GENTE, Year XLVIII N.23, 2004 June 3)



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

வங்கிகளின் அராஜகத்தை ஓட்ட நறுக்கும் ஒபட் சு மேன் டிபார்ட்மென்ட்.


வங்கிகளின் அராஜகத்தை ஓட்ட நறுக்கும் ஒபட்சு மேன் டிபார்ட்மென்ட்.

இந்தியாவில் அனைத்து வங்கிகளையும் தனது கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும் RBI (இந்தியன் நடுவண் வங்கி) யின் "ஒபட்சு மேன்" { Ombudsman } என்ற தலை சிறந்த பிரிவு. பயனாளர்களுக்கு மிகுந்த சாதகமாகாவும், அசுர வேகத்தில் வாடிக்கையாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்து சிறப்பாக செயலாற்றுகிறது என்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கும் உண்மை.
வங்கியில் ஒரு கடிதம் எழுதி கொடுங்கள் பணம் வந்தால் தருகிறோம் மேலும் அந்த பணம் எடுத்த சீட்டை இதோடு இணைத்து தாருங்கள் என்று அலக்களித்தால் கவலையே பாடாதீர்கள்..!
மனு,கடிதம் கொடுத்து காத்திருந்து காத்திருந்து பொறுமை இழந்து பலமுறை வங்கியை முறையிட்டும் எந்த பலனும் இல்லை வேண்டும் என்றே இழுத்தடிப்பு நடக்கிறதென்று நீங்கள் உணர்ந்தால் https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html
என்ற முகவரிக்கு உங்கள் புகாரை தட்டி விடுங்கள் .!உங்கள் கிடைக்கவேண்டிய பதிலும் நிவாரணமும் குதிரை வேகத்தில் வந்து சேரும்..!
நீங்கள் கூறும் குற்றம் உண்மை என்று நிருபணம் செய்யபட்டால் சமந்தப்பட்ட அதிகாரி பணியிடை நீக்கம் செய்யபடும் அளவிற்கு "ஒபட்சு மேன்" க்கு { Ombudsman } அதிகாரம் உள்ளது.

மேலும் வங்கி அதிகாரிகளின் குற்றம் தொடர்ந்து அதிகமாக இருந்தால் சமந்தப்பட்ட வங்கி கிளை மூடப்படும் அளவிற்கு "ஒபட்சு மேன்" அதிகாரம் உள்ளது.
இதில் RBI யின் இந்த சேவையில் நிறைய மக்கள் பயனடைந்து மனதார நன்றிகள் சொல்வதை காணமுடிகிறது..!

இதை பார்க்கையில் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே – என்ற பாடல் வரி ஞாபகம் வருகிறது.
எல்லாதிற்கும் ஒரு முடிவு வரும் இனி வரும் காலங்களின் ஒவ்வொரு துறைகளும் இதுபோன்ற வாடிக்கையாளர் ஆதரவு நிலையம் இயங்கும் காலம் தொலைவில் இல்லை என்பது மட்டும் உண்மை.

PL CLICK THIS LINK TO LOG YOUR COMPLAINTS
https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html

இந்தியாவில் அனைத்து வங்கிகளையும் தனது கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும் RBI (இந்தியன் நடுவண் வங்கி) யின் "ஒபட்சு மேன்" { Ombudsman } என்ற தலை சிறந்த பிரிவு. பயனாளர்களுக்கு மிகுந்த சாதகமாகாவும், அசுர வேகத்தில் வாடிக்கையாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்து சிறப்பாக செயலாற்றுகிறது என்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கும் உண்மை.
வங்கியில் ஒரு கடிதம் எழுதி கொடுங்கள் பணம் வந்தால் தருகிறோம் மேலும் அந்த பணம் எடுத்த சீட்டை இதோடு இணைத்து தாருங்கள் என்று அலக்களித்தால் கவலையே பாடாதீர்கள்..!
மனு,கடிதம் கொடுத்து காத்திருந்து காத்திருந்து பொறுமை இழந்து பலமுறை வங்கியை முறையிட்டும் எந்த பலனும் இல்லை வேண்டும் என்றே இழுத்தடிப்பு நடக்கிறதென்று நீங்கள் உணர்ந்தால் https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html
என்ற முகவரிக்கு உங்கள் புகாரை தட்டி விடுங்கள் .!உங்கள் கிடைக்கவேண்டிய பதிலும் நிவாரணமும் குதிரை வேகத்தில் வந்து சேரும்..!
நீங்கள் கூறும் குற்றம் உண்மை என்று நிருபணம் செய்யபட்டால் சமந்தப்பட்ட அதிகாரி பணியிடை நீக்கம் செய்யபடும் அளவிற்கு "ஒபட்சு மேன்" க்கு { Ombudsman } அதிகாரம் உள்ளது.

மேலும் வங்கி அதிகாரிகளின் குற்றம் தொடர்ந்து அதிகமாக இருந்தால் சமந்தப்பட்ட வங்கி கிளை மூடப்படும் அளவிற்கு "ஒபட்சு மேன்" அதிகாரம் உள்ளது.
இதில் RBI யின் இந்த சேவையில் நிறைய மக்கள் பயனடைந்து மனதார நன்றிகள் சொல்வதை காணமுடிகிறது..!

இதை பார்க்கையில் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே – என்ற பாடல் வரி ஞாபகம் வருகிறது.
எல்லாதிற்கும் ஒரு முடிவு வரும் இனி வரும் காலங்களின் ஒவ்வொரு துறைகளும் இதுபோன்ற வாடிக்கையாளர் ஆதரவு நிலையம் இயங்கும் காலம் தொலைவில் இல்லை என்பது மட்டும் உண்மை.

PL CLICK THIS LINK TO LOG YOUR COMPLAINTS
https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

stop COW SLAUGHTER IN KERALA


There are cow slaughter mafia-s operating in India. The cow slaughter mafia from Kerala steal cows during night. They treat themin the worst possible way by dumping them in trucks and put green chillies
to cut tail of cows and even putting chillies in the anal area making them
cry and dump them to river to get them across to kerala to butcher them.
The reporter who did the story for a TV Channel has been threatened for her life by the cattle mafia

Where is this country heading to? Go-maata is treated this way,can we survive
at this rate?

It’s in kannada,the visuals are very disturbing,I could not watch further.

PM Modi may pl. be be briefed to ban cow slaughter at the earliest.There is no punya
left in the land if Go-maata is butchered by the raakshasas like this. We pray for the welfare of cows and BrAhmana-s in our prayers.

G.Balasubramanian

_


परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

DEEPAVALI


DEEPAVALI

DEEPAVALI
Deepavali is celebrated in South-India in the states Tamil
Nadu, Kerala, Karnataka, Goa, Andhra Pradesh and by Indians living abroad (PIO)
with roots in South-India such as Tamils in Malaysia, Singapore, Sri Lanka,
South-Africa and other countries. The date calculation of Deepavali is based on
the geographical location of Chennai (Tamil Nadu) in India.

It falls on Ashvina Krishna Chaturdasi which is the lunar day
before the new moon (Amavasya) in the lunisolar calendar. The exact date and
time is calculated for the last 90 minutes before sunrise (Arunodaya).

The 4 day festival Deepavali ends on the 2nd day in the bright
half of Iypasi. As the calculation is primarily based on the moon, the date of
Deepavali varies in the Gregorian Calendar between the 16th October and 15th
November every year.

Diwali is celebrated in North-India in all other states and by
the majority of Indians living abroad (PIO) in countries such as USA, Canada,
UK, Australia and others. Diwali is on the 15th day of the month Kartika
(October/November) in the Hindu calendar – a Lunisolar calendar which is based
on the positions of moon & sun – calculated for the location of Allahabad
(Uttar Pradesh) in India.

It falls on Amavasya (Ammavaasa), the new moon night, that
ends the month of Ashwina (Ashvin/Aasho/Aswayuja) and begins the month of
Kartika. The 5 day festival begins on the 13th day in the dark half of Ashwin
and ends on the 2nd day in the bright half of Kartika. As the calculation is
primarily based on the moon, the day of Diwali Festival varies in the Gregorian
Calendar between the 17th October and 15th November every year.
Regional
Names of the Days of Deepavali:
Day 1: Deepavali / Naraka Chaturdasi
Day 2: Lakshmi Puja
Day 3: Kartika Shuddha Padwa / Bali Padyami
Day 4: Yama Dvitiya
Regional
Names of the Days of Diwali:
Day 1: Dhanteras / Dhantheran / Dhantrayodashi / Dhanwantari
Triodasi / Yamadeepdaan / Dhan Teyras
Day 2: Choti Diwali / Kali Chaudas / Narak Chaturdashi
Day 3: Diwali / Baddi Diwali / Lakshmi Puja
Day 4: Pratipat / Padwa Puja / Gudi Padwa / Govardhan Puja /
Annakoot
Day 5: Bhai Duj / Bhhaya Dooj / Bhai Beej / Dvitiya

ஸ்ரீநிவாசப் பெருமான் சங்கு – சக்கரம் இரண் டையும் பெற்ற சுவையான வரலாறு


ஸ்ரீநிவாசப் பெருமான் சங்கு – சக்கரம் இரண்டையும் பெற்ற சுவையான வரலாறு
திருப்பதியில் அருள் புரிந்து வரும் ஸ்ரீநிவாச பெருமானுக்கு ஆதி காலத்தில் சங்கு – சக்கரம் முதலிய சின்னங்கள் இருந்தது இல்லை. ஆதலால் ஒரு சாரார் இம்மூர்த்தியை கங்கை – பிறைச் சந்திரன் – நாகம் முதலியவற்றை திருமுடியில் சூடிய சிவபெருமான் எனக் கருதி பக்தியுடன் உபாசித்து வந்தனர்.

‘குன்று இருக்கும் இடமெலாம் குமரக் கடவுள் இருப்பிடம்’ என்னும் கருத்தும் நிலவியதால் மற்றொரு சாரார் இம்மூர்த்தியை முருகப் பெருமானாக எண்ணித் துதித்து வந்தனர். பாற்கடல் வாசனான ஸ்ரீமன் நாராயண மூர்த்தியாகவும் ஒரு பிரிவினர் எண்ணி வழிபட்டு வந்தனர்.

பரம்பொருளுக்கு இயல்பில் உருவம் இல்லை. ஆன்மாக்கள் உய்வு பெரும் பொருட்டு இறைவன் பரம கருணையுடன் சிவபெருமான் – அம்பிகை – பரந்தாமன் – ஸ்ரீகணபதி – முருகப் பெருமான் என்று பல்வேறு முக்கிய வடிவங்கள் எடுத்துக் கொள்கிறான் என்பது இந்து மதத்தின் சாரம். இருப்பினும் ஷன்மதம் என்று அழைக்கப் பெறும் இந்து தர்மத்தின் ஆறு மார்கங்களுக்கும் (சைவம்; வைணவம்; சாக்தம்; காணபத்தியம்; கௌமாரம்; சௌரம்) ஆகமம் – பூஜை முறைகள் – மந்திரங்கள் – அலங்காரங்கள் – விழாக்கள் – உத்சவங்கள் முதலியன வேறுபடும். இதனால் இறை வடிவத்தை அறிவது திருக்கோயிலுக்கு மிகவும் அவசியம் ஆகிறது. திருமலைக்கு வருகை புரிந்த ஸ்ரீ ராமானுஜர் இறைவனின் சங்கல்பத்தை அறியும் எண்ணம் கொண்டார். அர்த்த ஜாம பூஜை நிறைவுற்றதும் சங்கு – சக்கரம் – திரிசூலம் – ஞான வேல் முதலிய தெய்வச் சின்னங்களை பெருமானின் முன் வைத்து ‘உமக்கு இத்தலத்தில் எந்த வடிவத்தில் எழுந்தருள திருவுள்ளமோ அந்த சின்னத்தை ஏற்று அருளும்’ என்று விண்ணப்பித்துக் கருவறையைத் தாளிட்டார்மறு நாள் காலையில் கருவறையைத் திறந்ததும், இறைவன் சங்கு – சக்கரங்களை திருக்கரங்களில் ஏந்தி, திருமலையில் தாம் ஸ்ரீநிவாசப் பெருமானாக உறைவதை உணர்த்தி அருளினான். அனைவரும் பெரு மகிழ்வு கொண்டு ஸ்ரீநிவாசப் பெருமானையும், ராமானுஜரையும் போற்றித் துதித்தனர்.

வைணவ மரபில் ‘சங்கு – சக்கரங்களை’ இரு தோள்களிலும் பொறித்துக் கொள்ளும் தீட்சை முறைக்கு ‘பஞ்ச சமஸ்காரம்’ என்று பெயர். அடையாளங்களை பொறிப்பவர் ‘ஆச்சாரியன் (குரு)’ என்கிற ஸ்தானம் பெறுகிறார். இம்முறையின் படி ஸ்ரீநிவாசப் பெருமானுக்கு ‘ஸ்ரீ ராமானுஜர்’ ஆச்சாரியன் ஆகிறார். ஸ்ரீமதே ராமானுஜாய நமக!!!



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

துவரங்காடு கிராமம், அதிசயிக்கத்தக்க வகைய ில் மாதிரி கிராமமாக மாறியிருக்கிறது.


திருநெல்வேலி மாவட்டத்தின் கரும்புள்ளியாக போலீஸாரால் கருதப்பட்ட துவரங்காடு கிராமம், அதிசயிக்கத்தக்க வகையில் மாதிரி கிராமமாக மாறியிருக்கிறது. கள்ளச்சாராயம் பாய்ந்தோடிய இந்த பூமி, இப்போது முற்றிலுமாக மதுவை விரட்டியிருக்கிறது.

திருநெல்வேலி மாவட்டம், வீரகேரளம்புதூர் வட்டம், கீழவெள்ளக்கால் ஊராட்சிக்கு உள்பட்ட கிராமம் துவரங்காடு. இங்கு ஆண்கள் 435, பெண்கள் 489, குழந்தைகள் 287 என மொத்த மக்கள் தொகை 1,211.

முந்தைய நிலை

அமைதிப் பூங்காவாக காட்சியளிக்கும் துவரங்காடு, சில ஆண்டுகளுக்கு முன் இத்தகைய அமைதியை அனுபவிக்கவில்லை. கள்ளச்சாராய உற்பத்தி கேந்திரமாகவும், அடிதடி, வெட்டு, குத்து, கொலை, வழிப்பறிக்கு பெயர்போன இடமாகவும் அப்போது இருந்தது. செல்வாக்குமிக்க இரு தரப்பினர் ஊரை இரண்டாக்கி குளிர்காய்ந்தனர். இக் கிராமத்தினரை கட்டுப்படுத்த முடியாமல் வீரகேரளம்புதூர் போலீஸார் திணறினர்.

இங்கேயே புறக்காவல் நிலையம் அமைக்கும் அளவுக்கு நிலைமை முற்றியது. ஊரில் உள்ள ஆண்களில் 20 சதவீதம் பேர் நீதிமன்றங்களின் படிக்கட்டுகளில் ஏறி, இறங்கிக் கொண்டிருந்தனர்.

மன மாற்றம்

ஒரு கட்டத்தில் செல்வாக்குள்ள ஒரு தரப்பை சேர்ந்தவர் திடீரென இறந்ததுதான் திருப்பமாக அமைந்தது. கிராமத்து இளைஞர்களிடம் மனமாற்றம் உருவானது. வீடுகளில் பதுக்கி வைக்கிருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை ஒட்டுமொத்தமாக ஒருநாள் அதிகாலையில் அங்குள்ள ஆற்றில் வீசியெறிந்தனர்.

மத்திய அரசின் விருது

இந்த மாற்றத்தை தெரிந்துகொண்ட அதிகாரிகள், இந்த ஊரை மறு உருவாக்கம் செய்ய களத்தில் இறங்கினர். பெரும்பாலான வீடுகளுக்கு கழிப்பறைகள் கட்டித்தரப்பட்டன. சிறந்த கிராம ஊராட்சிக்காக மத்திய அரசு வழங்கும், `நிர்மல் கிராம் புரஸ்கார்’ விருது பெறும் அளவுக்கு, துவரங்காட்டில் முன்னேற்றங்கள் முளைத்தன.

கிராமத்தில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தினாலும், மக்கள் மனங்களில் மாற்றங்களை உருவாக்குவது பெரும் சவாலாகவே இருந்தது. சாராயம் குடித்து பழகியவர்கள், சண்டை சச்சரவுகளுக்கு அடிமையாகி இருந்தவர்களை ஒரேயடியாக அதிலிருந்து மீட்பது என்பது சிரமமான காரியம்தானே.

உலக சமுதாய சேவா சங்கம்

இந்நேரத்தில்தான் உலக சமுதாய சேவா சங்கம் இந்த கிராமத்தை தத்தெடுத்தது. மக்களின் மனதுக்கும், உடலுக்கும் புத்துயிரூட்ட முயற்சி மேற்கொண்டது. மக்களின் ஒழுக்கமான பழக்க வழக்கங்களால் கிராமங்கள் தன்னிறைவுடன் கூடிய ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு, இங்கு கிராமிய சேவைத் திட்டம் தொடங்கப்பட்டது. கிராமப்புற மக்கள் அனைவருக்கும் இலவசமாக மனவளக்கலை யோகா கற்றுக் கொடுப்பதே இத் திட்டம்.

இங்கு குடி மற்றும் புகைப்பழக்கம் உள்ளவர்கள் 122 பேர் இருந்தனர். அவர்களை புதுவாழ்வுக்கு கொண்டுவரும் வகையில், 2012-ம் ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி துவரங்காடு கருப்பசாமி கோயில் அருகே, உலக சமுதாய சேவா சங்க தலைவர் எஸ்.கே.எம். மயிலானந்தன் இத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

யோகா பயிற்சி

துவரங்காட்டில் அமைக்கப்பட்ட அறிவுத்திருக்கோயிலில் 3 கட்டங்களாக மனவளக்கலை யோகா பயிற்சி நடத்தப்பட்டது. முதியோர், நோயாளிகளுக்கு அவரவர் இல்லங்களிலேயே பயிற்சி அளிக்கப்பட்டது. உடற்பயிற்சி, எளியமுறை தியானம், காயகல்பம், அகத்தாய்வு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இவற்றுடன், போதையில் இருந்து விடுபடுவது குறித்த பயிற்சி, சினம் தவிர்த்தல் பயிற்சி ஆகியவை ஆண்களுக்கு அளிக்கப்பட்டது.

இக்கிராமத்திலிருந்து 60 பேர், பொள்ளாச்சி அருகே ஆழியாறில் உள்ள தலைமை மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு யோகா ஆசிரியர் பயிற்சி கற்றுத்தரப்பட்டது. தற்போது அவர்கள் தொடர் பயிற்சி அளிக்கின்றனர்.

உருமாறிய கிராமம்

இக்கிராமத்துக்கு 200 மரக்கன்றுகள் வழங்கப்பட்டு நல்லமுறையில் பராமரிக்கப்படுகின்றன. பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. வீடுகளில் வீட்டுத்தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. கீழவெள்ளக்கால் ஊராட்சித் தலைவர் மு.ராமாத்தாள் முத்தையாசாமி முயற்சியால், அனைத்து தெருக்களிலும் குப்பைத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு மாலைநேர சிறப்பு பயிற்சி நடத்தப்பட்டது.

இதனால் துவரங்காடு கிராமப் பள்ளியில் இடைநிற்றல் தற்போது அறவே இல்லை. குடிநோயால் உடல்நலம் குன்றியோருக்கு இலவச மருத்துவ முகாம்கள் மூலம் மறுவாழ்வு அளிக்கப்பட்டிருக்கிறது. தற்போது துவரங்காடு கிராமத்தில் மதுக்கடைகளோ, போதைப்பழக்கமோ அறவே இல்லை. துவரங்காட்டிலிருந்து ரத்தக் கறையும், மது வாடையும், யோகா பயிற்சியால் துடைக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.

கிராமிய சேவைத் திட்டம்

மயிலானந்தம்

உலக சமுதாய சேவா சங்கத் தலைவர் ஈரோடு எஸ்.கே.எம்.மயிலானந்தன் கூறியதாவது:

மக்களின் ஒழுக்கமான பழக்க வழக்கங்களால் கிராமங்கள், தன்னிறைவுடன் கூடிய ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில், உலக சமுதாய சேவா சங்கம் கிராமிய சேவை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மனமும், உடலும் ஆரோக்கியம் பெறும்போது, மனிதர்களில் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்க முடியும் என்பதை இத்திட்டத்தின் மூலம் நிரூபிக்கிறோம்.

ஒவ்வொரு கிராமத்திலும் மது பழக்கத்தில் இருந்து 50 சதவீதம் பேராவது முற்றிலுமாக விடுபடுகிறார்கள். குடிப்பழக்கத்தால் தங்கள் வருவாயை மட்டுமின்றி, ஒட்டுமொத்த குடும்பத்தின் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தொலைத்தவர்கள் ஏராளம். இத்தகையவர்களை இனம் கண்டு, மனவளக்கலை பயிற்சியால் நல்லதொரு மனமாற்றத்தை உருவாக்கி இருக்கிறோம்.

தமிழகத்தில் துவரங்காடு உள்ளிட்ட 26 கிராமங்களில் இத் திட்டத்தை செயல்படுத்தி முடித்திருக்கிறோம். 11 கிராமங்களில் இத் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. வரும் டிசம்பருக்குள் மேலும் 6 கிராமங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். இத்திட்டத்தை தமிழகத்தின் மேலும் பல கிராமங்களுக்கு விரிவாக்கம் செய்ய நினைத்திருக்கிறோம். இதற்கான செலவினங்களுக்கு நன்கொடையாளர்களை நாடுகிறோம் என்றார் அவர்.

பயிற்சியளித்த ஆசிரியை

பி.ரத்னா

துவரங்காடு கிராமத்திலேயே தங்கி, மனவளக்கலை யோகா பயிற்சி அளித்த பி.ரத்னா கூறியதாவது:

மதுவுக்கு அடிமையானவர்கள் மனவளக்கலை பயிற்சி மூலம் மனமாற்றம் அடைந்திருக்கிறார்கள். பயிற்சி தொடங்கிய 6 மாதங்களிலேயே குடும்பங்களில் படிப்படியான முன்னேற்றமும், அமைதியும் ஏற்பட்டது. தற்போதும் நீடிக்கிறது. மக்களின் துன்பங்களுக்கு காரணி எது என்பதை மனவளக்கலை அகத்தாய்வு பயிற்சி தெளிவாக கூறுவதால், சண்டை சச்சரவுகள், வழக்குகள் எதுவும் இல்லை. இங்கு 5 சுயஉதவிக்குழுக்கள் உள்ளன. குடும்பங்களில் சேமிக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது என்றார் அவர்.

குடியில் இருந்து மீண்டவர்

முருகேசன்

துவரங்காடு முப்பிடாதி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த சுப்பையா மகன் முருகேசன் லாரி ஓட்டுநராக உள்ளார். குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவர் அதிலிருந்து மீண்டுள்ளார். அவர் கூறியதாவது:

உடற்பயிற்சி செய்வதால் மூட்டுவலி, கால்வீக்கம் ஏதுமில்லை. தியானம் செய்வதன் மூலம் கோபம் குறைந்துள்ளது. குடிப்பழக்கத்திலிருந்து முழுமையாக மீண்டுள்ளேன். சர்க்கரை நோய், ரத்த அழுத்தநோய் குறைந்துள்ளது. ஞாபக சக்தி அதிகரித்திருக்கிறது. தியானம், உடற்பயிற்சியால் உடல் எடை குறைகிறது. என் குடும்பத்தில் புதிய சூழ்நிலை உருவாகியுள்ளது என்றார்.

இப்போது சொர்க்கம்

அண்ணாமலையார்

உலக சமுதாய சேவா சங்கத்தின் நெல்லை மண்டல செயலர் ஆ.அண்ணாமலையார் கூறியதாவது:

இக்கிராமத்து மக்கள் இயல்பாகவே கடும் உழைப்பாளிகள். சூதுவாது அற்ற விவசாயிகள். எளிமையான வாழ்வு வாழ்பவர்கள். அவர்களை பகடைக் காய்களாக பயன்படுத்தி கள்ளச்சாராய சந்தைக்கு ஊறுகாயாக்கி இருந்தனர். முன்பெல்லாம் மாலை 6 மணிக்கு மேல் இந்த கிராமத்துக்குள் யாரும் செல்ல முடியாது. பணம் பறிப்பும், இரு தரப்பினர் மோதிக்கொள்வதும் வாடிக்கையாக இருந்தது. நீதிமன்றங்களுக்கு நாள்தோறும் செல்வோர் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

அப்போதுதான் இந்த கிராமத்தை தத்தெடுத்து யோகா, தியானப் பயிற்சியை அளித்தோம். ஓராண்டுக்குள் பல்வேறு மாற்றங்களை இந்த கிராமம் சந்தித்திருக்கிறது. எந்த சண்டை சச்சரவுகளும் இப்போது கிடையாது. எனக்கு தெரிந்தவரை இப்போது குடிப்பவர்களே இந்த கிராமத்தில் இல்லை. விவசாயம் செய்து மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். ஒரு காலத்தில் கள்ளும், சாராயமும் மலிந்திருந்த துவரங்காடு, இப்போது சொர்க்க பூமியாகியிருக்கிறது, என்றார்.

புகையை விரட்டியவர்

சரவண கார்த்திகேயன்

துவரங்காடு தெற்குத்தெரு ப.சரவண கார்த்திகேயன் கூறும்போது, `எனது மகள் சுபதர்ஷினி யோகா பயின்றாள். என்னையும் கற்றுக்கொள்ள வலியுறுத்தினாள். புகை பழக்கமும், முன் கோபமும் மாயமாகிவிட்டன. சரியான நேரத்தில் சாப்பாடு, தூக்கம், நல்ல மனநிலையில் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். யோகா ஒரு அற்புத கலை’ என்று தெரிவித்தார்.

சோர்வின்றி வேலை

முப்பிடாதி

துவரங்காடு வடக்குத் தெருவைச் சேர்ந்த ச.முப்பிடாதி, `யோகா பயிற்சி மூலம் புத்துணர்வு பெற்றிருக்கிறேன். சோர்வின்றி வேலை செய்ய முடிகிறது’ என்றார். அதே தெருவைச் சேர்ந்த வி.ரா மையா, `சுறுசுறுப்பாக இருக்கிறது. எனது குடும்பத்தில் அனைவரும் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறோம்’ என்றார்.

உங்கள் கிராமத்தை தத்தெடுக்க வேண்டுமா

உலக சமுதாய சேவா சங்கத்தின் கிராமிய சேவை திட்டத்தில் உங்கள் கிராமமும் பயன்பெற என்ன செய்ய வேண்டும்? தமிழகத்தில் உலக சமுதாய சேவா சங்கத்தின் 14 மண்டல அலுவலகங்கள் உள்ளன. இந்த மண்டல அலுவலகங்களில் உள்ள பொறுப்பாளர்களை, விருப்பப்படும் கிராம ஊராட்சி தலைவர்கள் அணுகினால், அவர்கள் உரிய வழிமுறைகளை தெரிவிப்பர்.

மக்களுக்கு மனவளக்கலை யோகா பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்படும். இதற்காக பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் அந்தந்த கிராமங்களிலேயே தங்கியிருந்து பயிற்சி அளிக்கிறார்கள். இது தொடர்பான விவரங்களுக்கு, உலக சமுதாய சேவா சங்க விரிவாக்க இயக்குநர் பி.முருகானந்தத்தை 94865 38630 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

tamil.thehindu.com

திருநெல்வேலி மாவட்டத்தின் கரும்புள்ளியாக போலீஸாரால் கருதப்பட்ட துவரங்காடு கிராமம், அதிசயிக்கத்தக்க வ…



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

EVERYTHING IS BECOMING LESS BUT OUR HOPES ARE STILL – ENDLESS IN FACT I’M -SPEECHLESS


WELCOME TO 21st CENTURY

PHONES – WIRELESS

COOKING – FIRELESS

CARS – KEYLESS

FOOD – FATLESS

TYRES – TUBELESS

DRESS – SLEEVELESS

YOUTH – JOBLESS

LEADERS – SHAMELESS

ATTITUDE – CARELESS

WIVES – FEARLESS

FEELINGS – HEARTLESS

EDUCATION – VALUELESS

CHILDREN – MANNERLESS

RELATIONSHIPS-MEANINGLESS

EVERYTHING IS BECOMING LESS BUT OUR HOPES ARE STILL – ENDLESS
IN FACT I’M -SPEECHLESS



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

Email இதயம் காக்க 25 வழிகள்!- Courtesy Dr Vikatan


  • Email

இதயம் காக்க 25 வழிகள்!

”நேத்துதான் நல்லாப் பேசிட்டு இருந்தார்… அதுக்குள்ள இப்படி ஆயிடுச்சே…” – நெருக்கமான நண்பர்கள் இப்படி வருத்தப்படுவதும், ”ஏற்கெனவே ரெண்டு அட்டாக் வந்திருக்கு. அதைக் கவனிக்காம விட்டிருக்கார். அதான், இப்படியாகிடிச்சு!” என உறவுக்காரர்கள் விளக்கம் சொல்வதையும் பல இடங்களில் காதுபடக் கேட்டு இருக்கிறோம். திடீர் மரணங்களுக்கு மிக முக்கியக் காரணமாக இருப்பது மாரடைப்புதான். நமது நாட்டில் 25 முதல் 69 வயதினருக்கு இடையே ஏற்படும் மரணங்களில் 25 சதவிகிதம் மாரடைப்பால்தான் நிகழ்கின்றன. இதய நோய் வராமல் தடுக்கவும், வந்துவிட்ட நோயில் இருந்து நம்மை நாமே மீட்டெடுக்கவும் பிரான்டியர் லைஃப்லைன் மருத்துவமனையின் தலைவரும் கார்டியோ தொராசிக் நிபுணருமான டாக்டர் கே.எம்.செரியன் சொல்லும் வழிகள் இதோ…

மாரடைப்புக்கான காரணம்

உடல் முழுவதும் ரத்தம் பாய்ச்சும் அதிமுக்கிய வேலையைச் செய்வது நம் இதயம். ‘லப் டப்’ தாள லயத்தோடு இதயம் துடித்து இயங்குவதால்தான், ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் திசுக்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இப்படி உடல் முழுக்க ரத்தத்தை பம்ப் செய்யும் இதயம் இயங்கவும் ரத்தம் தேவை. இதயத்துக்குத் தேவையான இந்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்களில் அடைப்பு ஏற்படும்போதுதான், மாரடைப்பு ஏற்படுகிறது. ரத்தக் குழாயில் கொழுப்புப் படிவதாலோ அல்லது ரத்தம் உறைந்துபோவதாலோ அடைப்பு ஏற்படலாம். இதனால், இதயத்துக்கு செல்லும் ஆக்சிஜன் நிரம்பிய ரத்த ஓட்டம் தடைப்பட்டு, இதயத் தசைகள் செயல் இழக்கும். இதைத்தான் மாரடைப்பு என்கிறோம்.

மாரடைப்பைத் தவிர்க்க முடியும்!

1உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ரத்தத்தில் கொழுப்பு, புகை பிடித்தல், உணவில் அதிகக் கொழுப்பு, உடல் உழைப்புக் குறைவு, மன அழுத்தம், மரபுரீதியாகக் குடும்பத்தில் யாருக்காவது மாரடைப்பு ஏற்பட்டிருத்தல்…. என கொரனரி (இதய ரத்தக் குழாய் அடைப்பால் ஏற்படும்) மாரடைப்பு ஏற்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. உங்கள் மருத்துவரை அணுகி உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் சர்க்கரை – கொழுப்பு அளவினைத் தொடர்ந்து பரிசோதனை செய்து, தேவைக்கு ஏற்ப மருத்துவச் சிகிச்சை பெற்றாலே, மாரடைப்பைத் தவிர்க்கலாம்.

2குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒரு முறையாவது ரத்த அழுத்தத்தைப் பரிசோதனை செய்துகொண்டால், மாரடைப்பு அபாயத்தை முன்கூட்டியே அறிந்து தடுக்க முடியும். ரத்த அழுத்தம் சராசரிக்கும் அதிகமாக இருந்தால், இந்தப் பரிசோதனைகளை அடிக்கடி மேற்கொள்வது நல்லது. சராசரி ரத்த அழுத்தம் என்பது (ஐடியல் பிளட் பிரஷர்) 130/80 எம்.எம்.எச்.ஜி-க்கும் குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

3கொரனரி இதய நோய் வருவதற்கு சர்க்கரை நோய் ஒரு மிக முக்கியக் காரணம். எனவே, குறிப்பிட்ட கால இடைவெளிக்கு ஒரு முறை கட்டாயம் சர்க்கரை நோய் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

4உங்கள் உடல் எடை அதிகமாக இருந்தால் அல்லது உங்கள் குடும்பத்தில் யாருக்காவது சர்க்கரை நோய் இருந்தால், உடனடியாக சர்க்கரை நோய் பரிசோதனை செய்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

5குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைப் பரிசோதனை செய்ய வேண்டும். மாரடைப்புக்கான காரணிகளில் ஏதேனும் ஒன்று இருந்தாலும் கொழுப்புப் பரிசோதனையை டாக்டரின் ஆலோசனைப்படி அவ்வப்போது மேற்கொள்ள வேண்டும்.

உணவுப் பழக்கம்

6மாரடைப்புக்கான அபாயத்தைக் குறைக்க, இதயத்துக்கு ஆரோக்கியம் தரும் உணவு அவசியம். கொழுப்பு, சர்க்கரை, உப்பு ஆகியவற்றின் அளவு குறைவாக இருக்கும் உணவுப் பொருட்களே இதயத்துக்கு நல்லது. அதிக அளவில் பழங்கள், பச்சைக் காய்கறிகள், தானியங்கள், கொழுப்பு குறைவான பால் பொருட்கள் போன்றவை மாரடைப்பு வராமல் தடுக்கும்.

7குறைந்த கொழுப்பு மற்றும் அதிக அளவில் புரதச் சத்து நிறைந்த பீன்ஸ், மாரடைப்புக்கான அபாயத்தைக் குறைக்கிறது. அசைவம் சாப்பிடுபவர்கள், ‘ரெட் மீட்’ என்று சொல்லக் கூடிய ஆடு – மாடு போன்றவற்றின் இறைச்சியைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இவற்றில் அதிக அளவு கொழுப்பு உள்ளது.

8தோல் நீக்கிய கோழி இறைச்சி மற்றும் மீன் போன்றவை ஆரோக்கியமானவை. ஆனாலும், அதிக அளவில் எண்ணெய்விட்டுப் பொரித்துச் சாப்பிடுவது தவறு. முட்டையின் வெள்ளைப் பகுதியில் அதிகப் புரதச் சத்து உள்ளது. ஆனால், அதன் மஞ்சள் கரு அதிகக் கொழுப்பு மிக்கது. எனவே, முட்டையின் மஞ்சள் கருவைத் தவிர்ப்பது மாரடைப்புக்கான வாய்ப்பைக் குறைக்கும்.

9பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், அதில் அதிக அளவில் உப்பு உள்ளது. அது உயர்ரத்த அழுத்தத்தைத் தூண்டி விடும்.

10அதிக அளவில் சர்க்கரை உள்ள உணவுப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும். அந்த உணவுகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கூட்டிவிடும். இதனால், அதிகப்படியாக உடல் எடையும் கூடும்.

11‘ஒமேகா-3-ஃபேட்டி ஆசிட்’ மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கும் தன்மை கொண்டது. மேலும், இது உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தும். ஆளி விதை (Flax seed) எண்ணெய், வால்நெட் எண்ணெய், சோயாபீன் எண்ணெய், நல்லெண்ணெய் போன்றவற்றில் இந்த ஒமேகா-3-ஃபேட்டி ஆசிட் உள்ளது. சால்மன் போன்ற சில மீன் வகைகளிலும் இந்த ஒமேகா – 3-ஃபேட்டி ஆசிட் நிறைந்து உள்ளது.

12சேச்சுரேட்டட் கொழுப்பு (Saturated fat) மற்றும் டிரான்ஸ் கொழுப்பு (Trans fat) ஆகியவை (ரத்தத்தில் கொழுப்பு அளவை அதிகரிப்பதன் மூலம்) கொரனரி மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தும். அதனால், இவற்றையும் தவிர்க்க வேண்டும்.

13இறைச்சி, பால் பொருட்கள், தேங்காய் எண்ணெய், பனை எண்ணெய் ஆகியவற்றில் சேச்சுரேட்டட் கொழுப்பு அதிக அளவில் உள்ளது. பொரிக்கப்பட்ட துரித உணவுகள், பேக்கரி பொருட்கள், அடைக்கப்பட்ட நொறுக்குத் தீனிகளில் அதிக அளவில் டிரான்ஸ் கொழுப்பு உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

14அதிக அளவில் மது அருந்துவது உடல்பருமனுக்கு வழிவகுக்கிறது. மேலும், சர்க்கரை நோய்க்கான வாய்ப்பையும் அதிகரிக்கிறது. எனவே, மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.

உடற்பயிற்சி

15ஒரு நாளைக்கு குறைந்தது 30 முதல் 45 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும். தொடர் உடற்பயிற்சிகள் மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கின்றன. உங்களுக்குரிய ஆரோக்கியமான எடையை சரிவரப் பராமரியுங்கள். இதய நோய்களை ஏற்படுத்தும் உயர் ரத்த அழுத்தம், உயர் கொழுப்பு மற்றும் சர்க்கரை அளவுகளைக் கட்டுக்குள் வைத்திருக்க உடற்பயிற்சி அவசியம்; மன அழுத்தத்தைக் குறைக்கவும் உடற்பயிற்சி உதவும்.

16தோட்டப் பராமரிப்பு, வீட்டு வேலைகள், மாடிப்படிகளில் ஏறி இறங்குவது, நடப்பதும் கூட நல்ல உடற்பயிற்சிதான். உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக எப்போதும் உடற்பயிற்சி செய்துகொண்டு இருக்க வேண்டும் என்று இல்லை. யோகா மற்றும் தியானப் பயிற்சி போன்றவை மன அழுத்தம் மற்றும் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதால், மாரடைப்பு அபாயமும் குறையும்.

ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரித்தல்

17உங்கள் உடல் எடை ஆரோக்கியமானதுதானா என்பதை பாடி மாஸ் இன்டெக்ஸ் மூலம் கணக்கிடலாம். பி.எம்.ஐ. புள்ளிகள் 25 அல்லது அதற்கு மேல் இருந்தால், உஷாராகிவிட வேண்டும்.

18இடுப்பு அளவைக் கணக்கிடுவதால், வயிற்றுப் பகுதியில் எவ்வளவு கொழுப்பு உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது. ஆண்களுக்கு சராசரி இடுப்பு அளவு என்பது 40 இன்ச் அளவுக்கும் குறைவாக இருக்க வேண்டும். பெண்களுக்கு 35 இன்ச் அளவுக்கும் குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

19பெரியவர்களுக்கு உடல் எடை கூடுகிறது என்றால், அது பெரும்பாலும் தசை எடை கூடுதலாக இருக்காது, கொழுப்பு அதிகரிப்பாகத்தான் இருக்கும். அதிக அளவிலான உடல் எடை என்பது உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பு அளவை அதிகரிப்பது, சர்க்கரை நோய் போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுப்பதுடன் மாரடைப்புக்கான வாய்ப்பையும் அதிகரிக்கும்.

20குறைந்த அளவிலான உடல் எடைக் குறைப்புகூட மிகப் பெரிய பலனை அளிக்கும். உங்கள் எடையை வெறும் 10 சதவீதம் குறையுங்கள், அது உங்கள் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதுடன், ரத்தத்தில் கொழுப்பு அளவையும் குறைத்து, சர்க்கரை நோய்க்கான வாய்ப்பையும் குறைக்கிறது.

புகை பிடிக்காதீர்கள்

21புகை பிடிப்பது, புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்துங்கள். மாரடைப்பு ஏற்பட மிக முக்கியக் காரணங்களில் ஒன்றாக இருப்பது புகையிலைப் பழக்கம். சிகரெட் புகையில் உள்ள நிகோடின் என்ற நச்சு ரத்தக் குழாயினை சுருக்கி, இதயத் துடிப்பு எண்ணிக்கை மற்றும் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது. சிகரெட்டில் உள்ள கார்பன் மோனாக்சைடு ரத்தத்தில் ஆக்சிஜனுக்கு மாற்றாகப் போய் உட்கார்ந்து கொள்கிறது. இதனால், உடலுக்குத் தேவையான போதுமான ஆக்சிஜன் கிடைப்பதற்காக (அதிகம் ரத்தம் செலுத்தும்படி) இதயம் கூடுதலாக வேலை செய்யவேண்டி இருக்கிறது. நீங்கள் புகைப்பதை நிறுத்தினால் அடுத்த ஓர் ஆண்டுக்குள் ஆச்சரியப்படத்தக்க வகையில் இதய நோய்க்கான வாய்ப்புகளும் குறைந்துவிடும். புகைப்பழக்கம் இல்லாத, ஆனால் ஒருவர் புகைத்துவிட்ட காற்றை சுவாசிப்பவருக்கும் கூட பாதிப்பு ஏற்படும். நீங்கள் புகைப்பதால், புகைப்பழக்கமே இல்லாத உங்கள் நண்பர்கள், குடும்பத்தினரும்கூட பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

மருந்து-மாத்திரைகள்

22உங்களுக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், அதிகக் கொழுப்பு போன்ற பிரச்னைகள் இருந்தால், டாக்டர்கள் பரிந்துரைத்திருக்கும் மருந்து-மாத்திரைகளைத் தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை உங்களின் இதய ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு பைபாஸ் அறுவைச் சிகிச்சை அல்லது ஆஞ்சியோபிளாஸ்டி செய்ய வேண்டும் என்று டாக்டர் பரிந்துரைத்தால், உடனடியாக அதைச் செய்து கொள்ளுங்கள். பயம் காரணமாகத் தள்ளிப் போடாதீர்கள்.

23மாரடைப்புக்கான அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லுங்கள். மருத்துவமனைக்குச் செல்லும் முன் ஆஸ்பிரின் மாத்திரையைப் பயன்படுத்துங்கள். அது இதயத் தசைப் பாதிப்பைக் குறைக்கும்.

24தொடர் மருத்துவப் பரிசோதனை, ஆரோக்கியமான வாழ்க்கைச் சூழ்நிலை, மாரடைப்புக்கான காரணிகளைக் கட்டுப்படுத்துவது போன்றவை நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும்.

பரிசோதனைகள்

25எளிய ஈ.சி.ஜி. பரிசோதனை மூலம் வலி இன்றி ஒருவரின் இதய மின் செயல்பாட்டைக் கண்டறிய முடியும். இது இதயம் எவ்வளவு வேகமாகத் துடிக்கிறது என்பதைக் காட்டும். இதயம் எந்தளவு பாதிக்கப்பட்டு உள்ளது என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு உரிய சிகிச்சை அளித்தால், மாரடைப்பு வருவதைத் தடுக்க முடியும்.

உடலில் எங்கு கொழுப்பு அதிகமாக உள்ளது என்பதைக் கண்டறிவது இப்போது எளிமை. சாதாரண சி.டி. ஸ்கேன் எடுத்துப் பார்த்தாலே, கொழுப்பு தோலுக்கு அடியில் உள்ளதா அல்லது வயிற்றுப் பகுதிகளில் உள்ளதா என்பதைத் துல்லியமாகக் கண்டறிந்துவிட முடியும். இதயத் தசைகளுக்குச் செல்லும் ரத்தக் குழாயில் எவ்வளவு கொழுப்பு உள்ளது? எத்தனை ஆண்டுகளாக உள்ளது என்பதை 320 ஸ்லைஸ் சி.டி. ஸ்கேன் மூலம் கண்டறிய முடியும். எதிர்காலத்தில் ஒருவருக்குக் கொழுப்பு அடைப்பு ஏற்படுமா என்பதையும் துல்லியமாகச் சொல்லிவிட முடியும். ரத்தக் குழாயில் 0.5 மி.மீ. அளவுக்குக் கொழுப்பு படிந்திருந்தால் கூட, இந்தப் பரிசோதனை மூலம் கண்டறிந்து அதற்கான சிகிச்சையை மேற்கொள்ளலாம்.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE