விமானம் பறப்பது எப்படி?


விமானம் பறப்பது எப்படி?

இன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலரும் பரவசப்படுவது விமானம் எப்படி பறக்கிறதுஎன்பதுதான்.

பலமுறை விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு கூட எப்படி விமானம் காற்றில் எழும்பிபறக்கிறது என்ற ஆச்சிரியம் ஒவ்வொரு முறை பறக்கும்போதும் வரும்
சரி எப்படித்தான் அந்த மிகப்பெரிய ஊர்த்தி காற்றில் பறக்கிறது

இந்த விஷயத்திற்கு போவதுற்கு முன் சில அடிப்படை விஷயங்களை நாம் புரிந்துகொள்ளவேண்டி இருக்கிறது.

ஒரு பறக்கும் பொருளில் நாலு விதமான விசைகள் உண்டு.

A ஒரு பறக்கும் பொருளை, மேல்நோக்கி இழுக்கும் லிப்ட் (Lift)

B முன்னோக்கி இழுக்கும் த்ரஸ்ட் – Thrust

C கீழ்நோக்கி இழுக்கும் எடை – Weight

D பின்னோக்கி இழுக்கும் டிராக் – Drag

ஒரு விமானம் ஒரே உயரத்தில் , நேராக பறக்க இந்த கணிதக்கூற்று சமணாக இருக்கவேண்டும்

Weight=Lift

Drag=Thrust

த்ரஸ்ட், டிரேகைவிட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் கூடும்

டிராக் த்ரஸ்டை விட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் குறையும்

விமானத்தின் எடை ‘லிப்ட்’ விசையை விட கூடுதலாக இருக்கும்போது விமானம்கீழிறங்கும்

விமானத்தின் ‘லிப்ட்’ விசை விமானத்தின் எடையைவிட அதிகமாக இருக்கும்போதுவிமானம் மேல் எழும்பும்

சரி… பலருக்கு இப்போ ஒன்று நன்றாக புரியும், விமானம் முன்னே செல்வதற்கானவிசையை கொடுப்பது விமானத்தின் இஞ்சின் என்று, அதாவது த்ரஸ்ட் விசையைகொடுப்பது இஞ்சின்,

அதே போல விமானத்தில் ‘டிராக் விசையை கொடுப்பது’ காற்றினால் விமானத்தில்ஏற்படும் உராய்வுகள், இஞ்சின் ஆப் செய்யப்பட்டால் சிறிது நேரத்தில் விமானம்மெதுவாகிவிட காற்றினால் ஏற்படும் உராய்வே கார்ணம் (அதாவது வானத்தில்).

ஒருவேளை பூமியில் காற்று இல்லையென்றால், இஞ்சினை ஆப் செய்தாலும் விமானம்மெதுவாக முடியாது.
(பலருக்கு ஒரு விஷயம் ஆச்சரியமாக இருக்கும்,

ஏன் விமானம் மேலே எழும்பியவுடன்சக்கரத்தை உள்ளே இழுத்துக்கொள்கிறது, வெளியிலேயே இருந்தால் என்னகெட்டுவிட்டது என்று.

இதை செய்வதற்கு காரணம், காற்றினால் சக்கரத்தில் ஏற்படும்உராய்வை தடுப்பதுதான்.

அந்த உராய்வுடன் பறந்தால் விமான எரிபொருள் செலவுஇருமடங்காக இருக்கும், மேலும் அதிக வேகத்தை விரைவில் எட்ட முடியாது)

விமானத்தில் கீழ் நோக்கு விசையை கொடுப்பது இமானத்தின் சொந்த எடை மற்றும் புவிஈர்ப்பு விசை இது எல்லோருக்குமே தெரிந்திருக்கும்

பலருக்கும் புரியாத புதிராக இருப்பது விமானத்தின் மேலிழுக்கும் விசை எங்கு உற்பத்திஆகிறது என்பதுதான்.

இது சற்று சுவாரஸ்யமானது

எலிகாப்டரின் மேலெழும்பு விசை அதன் மேகிருக்கும் விசிரியால் வருகிரது என பலர்சொல்லிவிடுவார்கள்,

விமானத்திற்கு முன்னே செல்லும் விசைதானே உள்ளது, மேலேஎப்படி எழும்புகிறது என்ற கேள்வி பலர் மனதில் இருக்கும்

உண்மையில் விமானத்தின் மேலுழும்பு விசையை தருவதும் அதே எஞ்சிந்தான் , சற்றுமறைமுகமாக
விமானத்தின் மேல் நோக்கு தூக்கு சக்தி உற்பத்தி செய்யப்படுவது அதன் இறக்கை, விமானத்தின் வேகம், மற்றும் காற்றின் கூட்டணியில்தான் .

இந்த மூன்றில் ஒன்றுஇல்லாவிட்டாலும் தூக்கு சக்தி உருவாகாது ,

விமானம் பறக்காது.

அதாவது இறக்கைஇல்லாவிட்டாலும் பறக்க முடியாது,

விமானத்தில் வேகம் இல்லாவிட்டாலும் பறக்கமுடியாது, காற்று இல்லாமல் மீதி இரண்டும் இருந்தாலும் பறக்க முடியாது

விமானத்தின் இறக்கையை கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும், (மிகவும் கூர்ந்து கவனிக்கவேண்டும்).

விமானத்தின் இறக்கையின் மேல்பாகம் சற்று, மிகவும் சற்று மேல் நோக்கிவளைந்திருக்கும்.

கீழ்பாகம் தட்டையாக இருக்கும்.

இதை சாதாரணமாக இறக்கையைபார்த்தால்கூட கண்ணுக்கு எளிதாக தெரியாது,

அதை தொட்டுப்பார்த்தால்தான் தெரியும்

இந்த மேல்நோக்கிய வளைவு எதற்காக?

இங்குதான் விஷயம் உள்ளது

காற்று அசுரவேகத்தில் விமானத்தின் இறக்கையோடு உராயும்போது, விமானத்தின்இறக்கையின் மேற்புறம் ஒரு குறைந்த காற்றுழத்த மண்டலம் உருவாகுகிறது,

கீழ்புறம்காற்றழுத்தத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு புறம் அதிக காற்றழுத்தம் ஒரு புறம்குறைந்த காற்றழுத்தம் இருக்கும்போது, குறைந்த காற்றுழத்த பகுதியை நோக்கி பொருள்ஈர்க்கப்படுவது அறிவியல் நியதி (Vacuum Cleaner பொருளை உள்ளே இழுப்பது குறைந்தகாற்றழுத்தத்தை உள்ளே உருவாக்குவதினால்தான்)

விமானத்தை மேல்நோக்கி இழுக்கும் விசை, விமானத்துக்கும் காற்றுக்குமான ரிலேடிவ்வேகத்தையும், இறக்கையின் பரப்பளவையும் பொருத்தே அமையும்

அதனால்தான் எடை அதிகமான விமானத்தின் இறக்கை பெரியதாக அதிகபரப்பளவுள்லதாக இருக்கும்
இப்போது காற்றுக்கும் விமானத்திற்குமான ரிலேடிவ் வேகத்தை எது தீர்மாணிக்கிறது?

சந்தேகமில்லாமல் விமானத்தின் வேகம், அதை தீர்மாணிப்பது எது? விமானத்தின் இஞ்சின்எனவே விமானத்தின் மேலெழும்பு சக்தியையும் கொடுப்பது, அதே இஞ்சின் தான் என்பதுதெளிவாகிறது அல்லவா?
,
அதனால்தான் விமானம் மெதுவாக ஓடும்போது அதற்கு பறக்கும் சக்தி இருக்காது.

(எலிகாப்டரின் மேலெழும்பு விசைக்கும் வேகத்திற்கும் சம்மந்தம் இல்லை என்பதால் அதுஓடாமலே மேலே எழும்புகிறது, ஆனால் விமானத்தின் முன் செல்லும் வேகம்எலிகாப்டருக்கு வராது)

இது எல்லாம் சேர்ந்துதான் விமானம் இப்படி டேக் ஆப் ஆகிறது
விமானம் ஓடினால் மட்டும் அல்ல, அதே வேகத்தில் காற்று புயல்போல அடித்தாலும் (அந்தவேகத்திற்கு காற்று அடிப்பது கடினம்தான்) விமானம் நின்றுகொண்டிருந்தால் கூடவிமானம் தூக்கப்பட்டுவிடும்.

கடும் புயல் அடிகும்போது, சில ஓட்டு வீட்டு கூறைகள்பீய்த்துக்கொண்டு மேலெழும்பி காற்றில் பரப்பதற்கான காரணம் இப்போது புரிகிறதா?

அதனால்தான் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் விமானம் சென்றேஆகவேண்டிய கட்டாயத்தில் எப்போதும் உள்ளது,

அப்போதுதான் அதன் இறக்கையில்மேலிழுக்கும் சக்தி தொடர்ச்சியாக அதன் எடையை சமன் செய்யும்.

அந்த வேகத்திலிருந்துகுறைந்தால் விமானம் கீழே இறங்க துவங்கிவிடும்.

மெதுவாக போவது, சாவகாசமாகபோவது எல்லாம் விமானத்திற்கு வேலைக்கே ஆகாது.

ஒரு டெயில் பீஸ்,

இந்த இறக்கை மேட்டர் எல்லாம் காற்று உள்ள இடங்களில்மட்டும்தான்.

பூமியை தாண்டி வின்வெளிக்கு சென்றுவிட்டால் பறப்பதற்கு இறக்கைதேவைப்படாது

….

Ananthanarayanan Ramaswamy's photo.
Ananthanarayanan Ramaswamy's photo.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

வசந்த நவராத்திரி The 9 Holy Nights of Spring – From March 31, 2014 to April 8, 201 4.


வசந்த நவராத்திரி

The 9 Holy Nights of Spring –

From March 31, 2014 to April 8, 2014.

Goddess Durga is worshipped during Navaratri

தேவி வழிபாடு என்பது சக்தியை, அம்பிகையை, அகிலாண்ட நாயகியை, அன்னை பராசக்தியை வழிபடும் முறையாகும்.

தேவி வழிபாட்டின், பண்டி கைகளில் முக்கியமானவை ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாக்கள்தான்.

குளிர்கால (புரட்டாசி மாதம்) ஆரம்பமும் கோடை கால (பங்குனி மாதம்) ஆரம்பமும் எமனின் இரு தாடைகளாக விளங்குவதாக அக்கினி புராணம் கூறுகிறது.

அந்த இரு தாடை களிலும் படாமல், அந்த இரு மாதங்களிலும் நோய் எதிர்ப்பு சக்தி பெற்று, நீண்ட நல்வாழ்வு வாழ அருளக் கூடியவள் அம்பிகை மட்டுமே.

புரட்டாசி மாதம், குளிர் காலத்தின் ஆரம்பம்.

பங்குனி மாதம், கோடையின் துவக்கம்.

இந்த இரு காலங்களுக்குள் அமையும் நவராத்திரிகளை அனுசரித்தால் நன்மை பயக்கும்.

பன்னிரண்டு மாதங்களுக்கும் பன்னிரண்டு விதமான நவராத்திரிகள் உண்டு என்கின்றன சாக்த சாஸ்திரங்கள்.

அந்த பன்னிரண்டிலும் மிக முக்கியமா னவை நான்கு.

பங்குனி மாதத்தில் கொண்டாடப்படுவது வசந்த நவராத்திரி ;

ஆடி மாதத்தில், ஆஷாட நவராத்திரி;

புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத்திரி;

தை மாதத்தில் கொண்டாடப்படுவது சியாமளா நவராத்திரி.

சக்தி வழிபாடு செய்யும் ஸ்ரீவித்யா உபாசகர்கள் இந்த நான்கு நவராத்திரி களையும் கொண்டாடுவது வழக்கம்.

வருடத்தை ஆறு ருதுக்களாக ஆன்றோர்கள் பிரித்துள்ளார்கள்.

ஒரு ருதுவுக்கு இரண்டு மாதங்கள்.

அந்த ருதுக்களில் ‘ரிதூநாம் குஸுமாகர:’ என்று ஸ்ரீ கிருஷ்ண பகவானால் சொல்லப்படுவது வஸந்தருது.

பருவங்களில் சிறந்ததாகச் சொல்லப்படுவது வஸந்தருது.

இந்த வஸந்த ருதுவே வசந்த காலம்.

அதாவது, வாழ்வில் வசந்தம் தொடங்கக் கூடிய காலம்.

வயல்களில் அறுவடை முடிந்து, வளம் பொங்கக் கூடிய காலம்.

மக்களின் மனதில் ஆனந்தம் குடிகொள்ளும் காலம்.

வசந்த நவராத்திரி, பங்குனி மாத அமாவாசை முதல் தொடங்கப்படும்.

மறுநாள், தெலுங்கு வருடப் பிறப்பாகிய யுகாதிப் பண் டிகை அமையும்.

இந்த நவராத்திரி ஸ்ரீராம நவமியுடன் முடியும் (நவராத்திரி நிர்ணயம் எனும் புத்தகத்தில், வசந்த நவராத்திரி 9 நாட்கள் கொண்டாடி னால் உலகம் க்ஷேமம் அடையும் என்றும் ஒரு பட்சம் அதாவது, 15 நாட்கள் (அமாவாசை முதல் பௌர்ணமி வரை) கொண்டாடினால் வேண்டும் வரங்கள் கிட்டும் என்றும் ஒரு மண்டலம், அதாவது, பங்குனி அமாவாசை முதல் சித்ரா பௌர்ணமி வரை 45 நாட்கள் கொண்டாடுவது சகல கார்யங் களிலும் வெற்றியைத் தரும் என்றும் கூறுகின்றது.)

பொதுவாக வட இந்தியாவிலும் தென் இந்தியாவில் சில கோயில்களிலும் மட்டுமே கொண்டாடப்படுகிறது இந்த வசந்த நவராத்திரி.

வசந்த நவராத்திரி யோகம் எனும் பக்தி நிலையை தரக் கூடியது.

மேரு எனும் ஸ்ரீசக்ரம் அமைந்திருக்கும் ஆலயங்களில் வசந்த நவராத்திரி பொதுவாகக் கொண்டாடப்படும்.

ஒன்பது தினங்களிலும் காலை வேளையில் சிறப்பு அபிஷேகம் நடத்தப் பெறும்.

ஒன்பது தினங்களிலும் அம்பிகை ஒவ்வொரு சிறப்பு அலங்காரத்தில் காட்சி தருவாள்.

மாலை வேளையில் அம்பி கைக்கு உகந்த, சாக்தத்தின் மிக உயர்நிலை பூஜையான ஸ்ரீநவாவரண பூஜையும் லலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனையும் கன்யா பூஜையும் ஸுவாஸினி பூஜையும் நடைபெறும்.

வசந்த நவராத்திரி வழிபாட்டால், பெண் குழந்தைகள் மகிழ்ச்சி அடைவார்கள்.

கன்னியர்கள் திருமணம் நிறைவேறப் பெறுவார்கள்.

சுமங்கலிகள் மாங்கல்ய பலம் பெறுவார்கள்.

வசந்த நவராத்திரியை அனுஷ்டிக்கிறவர்களுக்கு கடன் தொல்லைகள் தீர்வதோடு, கணவன்-மனைவி உறவு பலப்படும்;

அன்யோன்யம் உண்டாகும்.

அக்கினி புராணத்தில் ஒரு வருடத்தில் 4 நவராத்திரிகளையும் கொண்டாட முடியாதவர்கள் சாரதா நவராத்திரி மற்றும் வசந்த நவராத்திரியையாவது விர தம் அனுஷ்டித்து கொண்டாடுவது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.

ஆகவே பங்குனி மாதம் அனுஷ்டிக்கப்படும் வசந்த நவராத்திரியை சக்தி வழிபாடாகச் செய்து சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். புரட்டாசி நவராத்திரி மாதிரி கோலாகலமாகக் கொண்டாடாவிட்டாலும், அவரவர் இல்லத்தில் எளிய முறையில் கொண்டாடலாம்.

அருகில் உள்ள அம்மன் கோயில்களுக்கு சென்றும் வசந்த நவராத்திரி விழாவில் பங்கேற்கலாம்.

வசந்த நவராத்திரி நாட்களில் வீட்டுக்கு வரும் பெண்களை சக்திகளாக நினைத்து கௌரவிக்க வேண்டும்.

அவர்களுக்கு தாம்பூலம், மஞ்சள், கண் ணாடி, சீப்பு, குங்குமச் சிமிழ், தேங்காய், பழம், புத்தகங்கள், ரவிக்கைத் துணி கொடுத்து அனுப்ப வேண்டும்.

நவராத்திரி 9 நாட்களும் 9 கன்னியரை சக்தியாக பூஜிப்பது குடும்பத்துக்கு நல்லது.

அம்பிகை சங்கீதப் பிரியை.

எனவே வசந்த நவராத்திரி நாட்களில் தினமும் ஏதாவது ஒரு பாடலாவது பாட வேண்டும்.

முத்தாலத்தி என்றொரு வகை கோலம் உள்ளது.

வசந்த நவராத்திரி நாட்களில் இந்த வகை கோலம் போட்டால் அம்பாள் அருள் நமக்கு எளிதாக கிடைக்கும்.

வசந்த நவராத்திரி 9 நாட்களும் சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, நைவேத்தியம் செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

வசந்த நவராத்திரி தொடர்பான சுலோகம், மந்திரம் தெரியவில்லையா?

கவலைப் படாதீர்கள்.

‘ஓம் ஸ்ரீ லலிதா தேவ்யை நமஹ’ என்பதை 108 தடவை சொன்னால் போதும், உரிய பலன் கிடைக்கும்.

சுகமான வாழ்வு வேண்டும், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், அரசியலிலும் வேலையிலும் பதவி தொடர வேண்டும், எந்த தொழிலில் ஈடுபட்டாலும் வெற்றி மீது வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் வசந்த நவராத்திரி பூஜையை அவசியம் செய்ய வேண்டும்.

தர்மபுரி கல்யாணகா மாட்சி ஆலயத்தில் வசந்த நவராத்திரி விரதத்தை ஸ்ரீராமன் கடைப்பிடித்த பிறகுதான் அவருக்குச் சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று தேவி பாகவதம் சொல்கிறது.

தேவியை இந்த வசந்த நவராத்திரி நாட்களில் கட்கமாலா துதி, லலிதா த்ரிசதி, லலிதா ஸஹஸ்ரநாமம், ஸௌந்தர்யலஹரி, ஆச்ரேய அஷ்டோத்திரம் போன்ற துதிகளால் அர்ச்சித்து வளங்கள் பெறலாம்.

Vasanta Navaratri

The 9 Holy Nights of Spring – From March 31, 2014 to April 8, 2014.
Goddess Durga is worshipped during Navaratri

Navaratri ("nava" + "ratri") literally means "nine nights." This ritual is observed twice a year, in spring and in autumn. "Vasanta Navaratri" or Spring Navaratri is nine days of fast and worship that Hindus undertake during spring every year. Swami Sivananda retells the legend behind this 9-day springtime ritual during which the devout Hindu seeks the blessings of the Mother Goddess.

"The Divine Mother or Devi is worshipped during the Vasanta Navaratri. This occurs during the spring. She is worshipped by Her own command. You will find this in the following episode in the Devi Bhagavata.
The Story Behind the Origin of Vasanta Navaratri
In days long gone by, King Dhruvasindu was killed by a lion when he went out hunting. Preparations were made to crown the prince Sudarsana. But, King Yudhajit of Ujjain, the father of Queen Lilavati, and King Virasena of Kalinga, the father of Queen Manorama, were each desirous of securing the Kosala throne for their respective grandsons. They fought with each other. King Virasena was killed in the battle. Manorama fled to the forest with Prince Sudarsana and a eunuch. They took refuge in the hermitage of Rishi Bharadwaja.

The victor, King Yudhajit, thereupon crowned his grandson, Satrujit, at Ayodhya, the capital of Kosala. He then went out in search of Manorama and her son. The Rishi said that he would not give up those who had sought protection under him. Yudhajit became furious. He wanted to attack the Rishi. But, his minister told him about the truth of the Rishi’s statement. Yudhajit returned to his capital.

Fortune smiled on Prince Sudarsana. A hermit’s son came one day and called the eunuch by his Sanskrit name Kleeba. The prince caught the first syllable Kli and began to pronounce it as Kleem. This syllable happened to be a powerful, sacred Mantra. It is the Bija Akshara (root syllable) of the Divine Mother. The Prince obtained peace of mind and the Grace of the Divine Mother by the repeated utterance of this syllable. Devi appeared to him, blessed him and granted him divine weapons and an inexhaustible quiver.

The emissaries of the king of Benares passed through the Ashram of the Rishi and, when they saw the noble prince Sudarsana, they recommended him to Princess Sashikala, the daughter of the king of Benares.
The ceremony at which the princess was to choose her spouse was arranged. Sashikala at once chose Sudarsana. They were duly wedded. King Yudhajit, who had been present at the function, began to fight with the king of Benares. Devi helped Sudarsana and his father-in-law. Yudhajit mocked Her, upon which Devi promptly reduced Yudhajit and his army to ashes.

Thus Sudarsana, with his wife and his father-in-law, praised Devi. She was highly pleased and ordered them to perform Her worship with havan and other means during the Vasanta Navaratri. Then She disappeared.
Prince Sudarsana and Sashikala returned to the Ashram of Rishi Bharadwaja. The great Rishi blessed them and crowned Sudarsana as the king of Kosala. Sudarsana and Sashikala and the king of Benares implicitly carried out the commands of the Divine Mother and performed worship in a splendid manner during the Vasanta Navaratri.

Sudarsana’s descendants, namely, Sri Rama and Lakshmana, also performed worship of Devi during the Vasanta Navaratri and were blessed with Her assistance in the recovery of Sita.

Why Celebrate Vasanta Navaratri?
It is the duty of the devout Hindus to worship the Devi (Mother Goddess) for both material and spiritual welfare during the Vasanta Navaratri and follow the noble example set by Sudarsana and Sri Rama. He cannot achieve anything without the Divine Mother’s blessings. So, sing Her praise and repeat Her Mantra and Name. Meditate on Her form. Pray and obtain Her eternal Grace and blessings. May the Divine Mother bless you with all divine wealth!"
Vasant Navratri March – April 2014
Vasant Navratri, also known as Vasant Navratras, begins on March 31, 2014. This festival of nine nights in Hinduism is dedicated to Goddess Durga, Lakshmi and Saraswati. It is also known as Chaitra Navratras or Spring Navratri or Basant Navratri. As this Navratra coincides with Ram Navami, it also referred as Ram Navratri. The dates are from March 31, 2014 to April 8, 2014.

Vasant Navratri is observed in the Hindu month of Chaitra (March – April). It is believed that Goddess Durga was originally worshipped (Durga Puja) in the Chaitra month and was also referred as Basanti Puja. It was Lord Ram who changed the period of Durga Puja.

Vasant Navratri 2014 dates
• Ghatsthapana – Navratri Day 1 – March 31, 2014
• Sindhara Dooj, Dwitiya – April 1, 2014
• Gaur Teej, Saubhagya Teej, Tritiya – April 2, 2014
• Varadvinayak Chaturthi – April 3, 2014
• Sri Laxmi Panchami Vrat, Naag Vrat Pujan – April 4, 2014
• Skand Shashthi, Yamuna Jayanti – April 5, 2014
• Mahasaptami Vrat, Chaiti Chath, Vijaya Saptami – April 6, 2014
• Sri Durga Mahaashtami, Annapurna Ashtami – April 7, 2014
• Vasant Navratri ends – Ram Navratri Day 9 – April 8, 2014

Lord Ram wanted to get the blessings of Goddess Durga before beginning the war with Ravana. Therefore he invoked Goddess Durga during Ashwin (October – November). This is why the Durga Puja during October is also known as Akal Bodhon or untimely invocation.

The Vasant or Spring Navratri is widely observed in Himachal Pradesh, Uttarakhand (Uttaranchal), Haryana, Punjab and Jammu and Kashmir. Most Hindu devotees in this part of India undertake Navratri Vrat or fasting. The festival occurs during the beginning of summer season. And it is said that the fasting helps in adapting the body to the changing climate.

Some of the important Temple fairs in Himachal Pradesh and Uttarakhand are organized during this period.

Almost all the rituals observed during Navratri (held in October-November) are also observed during Vasant Navrati.

One of the important events in Haryana and Punjab is the worshipping of little girls. These little girls symbolically represent Goddess Durga and are known as ‘kanjaks.’ It is performed on the eight day or the Ashtami day.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

அனைவருக்கும் யுகாதி வாழ்த்துகள்.


கன்னட , மற்றும் தெலுங்கு நண்பர்கள் அனைவருக்கும் யுகாதி தின நல் வாழ்த்துகள்.

யுகாதி ஒரு சிறப்புப் பார்வை

இது ஆந்திர கர்நாடக மராட்டிய மாநிலங்களில் கொண்டாடப்படும் புத்தாண்டு நாள்.

யுகாதி என்றால் யுகத்தின் ஆதி அதாவது ஆரம்பம் என்று பொருள்.

இப்பொழுது நடப்பது கலியுகம்.

அப்படியானால் இது கலியுகம் ஆரம்பித்த தினத்தின் வருட ஆரம்பத்தைக் குறிக்கிறதா?

கலியுகம் கிருஷ்ண அவதாரம் முடிந்ததிலிருந்து துவங்கியதாகக் கருதப்படுகிறது.

இது, ஆங்கில வருடம் (சரியாகச் சொன்னால் ரோம வருடங்கள்) கி.மு.3102-ல் – க்ரெகேரிய நாட்காட்டியில் ஜனவரி 23-ம் தேதியிலும், ஜூலியன் நாட்காட்டியில் (தற்போது நடைமுறையில் உள்ளது)

ஃபெப்ரவரி 18-ம் தேதியிலும் – துவங்கியதாகக் கூறுவர். யுக ஆரம்பத்தில் அணைத்து கிரகங்களும் ஒரே இடத்தில் ஆரம்பம் ஆவதாகக் கொண்டு கணக்கிடுவர்.

இதை கருத்தில் கொண்டு ஆர்யபட்டர் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் கணக்கிட்டதை அடிப்படையாகக் கொண்டு இந்த தேதியைக் கூறுவர்.

பின்னர், பல்வேறு வானியல் நிபுணர்கள் கெப்லரின் முறையைக் கையாண்டும் தற்போதைய கருவிகளைக் கொண்டும் ஆர்யபட்டரின் இந்தக் கணக்கை உறுதிப் படு்த்தியுள்ளனர்.

அதன் அடிப்படையில் இந்த ஆண்டு 20.02.2012 அன்று கலி பிறந்த 5113-ஆண்டு தினம் வந்து சென்று விட்டது.

பின் இப்பொழுது இன்று யுகாதி என்று ஏன் கொண்டாடுகிறார்கள்?

வட மொழியில் யுக்மம் என்றால் இரண்டு; இந்த வேர்ச் சொல்லிலிருந்து பிறந்த்து தான் யோகம் என்ற சொல்.

யோகம் என்றால் இணைப்பு அல்லது இணைவது; யோக சாஸ்த்ரம் என்பது உடலும் உள்ளமும் இணைந்து கட்டுப்படுவது.

அதே வேர்ச் சொல்லில் இருந்து பிறந்தது தான் யுகம். இதற்கும் சதுர் யுகம் என்பதற்கும் ‘யுகம்’ என்ற வார்த்தையைத் தவிர வேறு சம்பந்தம் இல்லை.

அதனால் இந்த யுகாதியை சதுர்யுகங்களின் ஆதி (ஆரம்பம்) என்று கொள்ளக் கூடாது.

சூரியனும் சந்திரனும் மேஷ ராசியில் 0 டிகிரி புள்ளியில் இணைவதைத் தான் இங்கு ‘யுகம்’ என்று குறிக்கின்றனர்.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனும் சந்திரனும் மேஷ ராசியில் அதே ஆரம்ப இடத்தில் இணையும்.

ஆனால் சூரிய, சந்திர சுழற்சி நாட்காட்டியை பயன்படுத்துபவர்கள் முறையே சூரியன், சந்திரன் ஆகியவை ஒவ்வொரு ஆண்டும் அந்த 0 டிகிரியைத் தொடும் தினங்களை அவரவர் வருடப் பிறப்பாகக் கொண்டாடுவர்.

பொதுவாக நாட்காட்டிகள் மூன்று வகைப்படும்.

அவை,

1. சௌர (அ) சூரிய நாட்காட்டிகள் (Solar calendars);

2. சந்திர நாட்காட்டிகள் (Lunar calendars) ;

3. சந்த்ர-சௌர நாட்காட்டிகள் (luni-solar calendars)

சூரிய ஆண்டு என்பது பூமி சூரியனைச் சுற்ற எடுத்துக் கொள்ளும் ஆண்டு.

இதில் சந்திரன் கணக்கில் கொள்ளப்பட மாட்டாது.

உதாரணம்:

க்ரெகாரிய ஜூலியன் நாட்காட்டிகள்; இந்தியாவில் தமிழக கேரள நாட்காட்டிகள் – இவை, சூரியன் ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு செல்வதை (வடமொழியில் சங்கராந்தி என்பர்) மாதமாகக் கொள்வர்.

இந்தியாவில் இந்த சௌர மாதத்தில் நான்கு வெவ்வேறு வகைகள் உள்ளன. (அவற்றைப் பற்றி வெறு ஒரு சமயத்தில் பார்க்கலாம்).

சந்திர ஆண்டு என்பது புதுச் சந்திரன் வளர்ந்து பின் தேய்ந்து மறைந்து பின் புதுச் சந்திரனாக ஆரம்பிக்கும் காலத்தை (அல்லது) பௌர்ணமி சந்திரன் தேய்ந்து பின் வளர்ந்து பின் பௌர்ணமியாக மாறும் காலமான, சுமார் 30 நாட்களை (மாதாமாதம் இது 29.45 முதல் 31.45 நாட்கள் வரை வேறுபடும்) ஒரு மாதமாகக் கணக்கிட்டு 12 மாதங்களை ஒரு ஆண்டாக (30 X 12 = சுமார் 360 நாட்கள்) கணக்கிடப்படும் நாட்காட்டி.

இதில் சூரியனை பூமி சுற்றுவது கணக்கில் கொள்ளப்பட மாட்டாது.

12 மாதங்கள் முடிந்தவுடன் அடுத்த ஆண்டு துவங்கிவிடும்.

உதாரணம் :

இஸ்லாமிய நாட்காட்டி; இதில் அமாவாசை முடிந்து அடுத்து பிறைத் தெரியும் நாளிலிருந்து மாதம் ஆரம்பிக்கும்.

இதில் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது சந்திர மாதம் சராசரியாக 30 நாட்களைக் கொண்டது (சராசரி என்பதை கவனிக்கவும் – அதாவது சில மாதங்கள் 30 தினத்திற்குக் குறைவாகவும் சில மாதங்களில் 30 தினத்திற்கு அதிகமாகவும் இருக்கலாம்).

மூன்றாவதாகக் குறிப்பிடப்பட்ட சந்தர-சௌர நாட்காட்டி என்பது, சந்திர ஆண்டுபடி மாதங்களைக் கொண்டிருந்தாலும் சூரியனைச் சுற்ற பூமி எடுத்துக் கொள்ளும் 365.2564 நாட்களின் மீதமுள்ள சுமார் 5/6 நாட்களைச் சேர்த்து சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ”அதிக” மாதமாக கொள்வது ஆகும்.

இந்த முறை இந்தியாவில் ஆரம்பி்க்கப்பட்டது (தற்போது நேபால், பங்களாதேஷ், இந்தோனேசியா போன்ற பிற நாடுகளிலும் பின்பற்றப்படுகிறது).

சீன நாட்காட்டியும் சந்திர-சௌர நாட்காட்டியே.

இந்த சந்தர-சௌர நாட்காட்டிக் கணக்கிடுவதில் பலவித வழிமுறைகளும் பலவித நாட்காட்டிகளும் வழக்கத்தில் உள்ளன.

பொதுவாக வழக்கத்தில் உள்ள முக்கிய இரண்டு வகைகளைப் பார்க்கலாம். அவை,

1. அமந்த நாட்காட்டி (அ) முக்ய மன முறை;

2. பூர்ணிமந்த நாட்காட்டி (அ) கௌன மன முறை

அமந்த நாட்காட்டி என்பது, அமாவாசைக்கு அடுத்து புது நிலவு வளரத் துவங்கி வளர்ந்து பின் முழுவதுமாகத் தேய்வதை ஒரு மாதமாகக் கொள்வது.

யுகாதி என்று இன்று கொண்டாடப்படும் வருடமும் இந்த அமந்த நாட்காட்டியின் அடிப்படையில் அமைந்த ஆண்டின் துவக்கமே.

இந்த வகை நாட்காட்டியில் மாதங்களின் பெயர்கள் நடுவில் வரும் சூரியமாதங்களின் பெயர்களை அடிப்படையாகக் கொண்டு இருக்கும்.

உதாரணத்திற்கு 23.3.2014-ல் துவங்கும் இந்த மாதம் அடுத்த அமாவாசை அதாவது 21.04.2014 வரை இருக்கும்.

இதன் நடுவில் 14.04.2014 அன்று துவங்கும் சூரியமாதம் (தமிழ் புத்தாண்டு) சித்திரை மாதம். எனவே, இந்த அமந்த மாதமும் சித்திரை என்றே அழைக்கப்படும்.

ஆனால், சில வேளைகளில் இது மாறவும் செய்யும். உதாரணத்திற்கு, இந்த வருட தமிழ் மாதமான புரட்டாசியில் இரண்டு அமாவாசைகள் (1, 30 தேதிகளில்) வருகின்றன.

1-ம் தேதி முடியும் மாதம் பாத்ரபாதம் (இதன் தமிழ் மரூஉ தான் புரட்டாசி) என்றும் 30-தேதி முடியும் மாதம் ஆச்வினம் (அஸ்வினி அல்லது ஐப்பசி) என்றும் குறிப்பிடப்படுகின்றன.

சில சந்திர மாதங்களி்ன் நடு்வில் சங்கராந்தி எதுவும் வராமல் இருந்துவிடும்.

அச்சமயங்களில் முதலில் வரும் மாதம் பின் வரும் மாதத்தின் ‘அதிக’ மாதமாகக் கொள்ளப்படும்;

பின்னால் வரும் மாதம் அந்த மாதத்தின் ‘நிஜ’ மாதம் என்று அழைக்கப்படும்.

பண்டிகைகள் ‘நிஜ’ மாதங்களை அடிப்படையாகக் கொண்டே கொண்டாடப்படும்.

இதைத் தவிர ‘க்ஷய’ (அதாவது குறை) மாதம் என்று ஒன்று உண்டு. இதில், ஒரு சந்திர மாதத்தில் இரண்டு சங்கராந்தி வரும்.

க்ஷய ஆண்டுகள் 19, 46, 65, 76, 122, 141 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெவ்வேறு விதங்களில் வரும்.

‘குறை’ மாதமும் ‘அதிக’ மாதமும் அடுத்தடுது வருவது மிகமிக அபூர்வம். இது கடைசியாக 1315-ல் அக்டோபர் 18 – நவம்பர் 15 வரை ‘அதிக’ கார்த்திகை மாதமாகவும் நவம்பர் 16 – டிசம்பர் 15 வரை (விருச்சிக-தனுர் சங்கராந்திகள் நிகழ்ந்ததால்) கார்த்திகை-மார்கசீர்ஷ ‘குறை’ மாதமாகவும் இருந்தன. டிசம்பர் 16 இலிருந்து (அடுத்த ஜனவரி 15க்குள் மகர சங்கராந்தி வந்துவிடுவதால்) புஷ்ய மாதம் ஆரம்பித்தது.

மற்ற நாட்காட்டிகளைப் பற்றி வேறு ஒரு சமயத்தில் பார்ப்போம்…

இந்த அமந்த நாட்காட்டிகளை ஆந்திரம், கர்நாடகம், மராட்டிய மாநில மக்கள் பின்பற்றுகின்றனர்.

அதை அடிப்படையாகக் கொண்டே அவர்கள் இன்று இந்த நாளை ‘யுகாதி’யாக அதாவது வருடப் பிறப்பாக்க் கொண்டாடுகின்றனர்.

அனைவருக்கும் யுகாதி வாழ்த்துகள்.

……



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

“பழங்களின் தமிழ்ப்பெயர்களை தெரிந்து கொள ்வோமா?”


“பழங்களின் தமிழ்ப்பெயர்களை தெரிந்து கொள்வோமா?”

.
தமிழ் பழம் அருஞ்சொற்பொருள்/ TAMIL FRUITS GLOSSARY

APPLE – அரத்திப்பழம், குமளிப்பழம்

APRICOT – சர்க்கரை பாதாமி

AVOCADO – வெண்ணைப் பழம்

BANANA – வாழைப்பழம்

BELL FRUIT – பஞ்சலிப்பழம்

BILBERRY – அவுரிநெல்லி

BLACK CURRANT – கருந்திராட்சை, கருங்கொடிமுந்திரி

BLACKBERRY – நாகப்பழம்

BLUEBERRY – அவுரிநெல்லி

BITTER WATERMELON – கெச்சி

BREADFRUIT – சீமைப்பலா, ஈரப்பலா

CANTALOUPE – மஞ்சள் முலாம்பழம்

CARAMBOLA – விளிம்பிப்பழம்

CASHEWFRUIT – முந்திரிப்பழம்

CHERRY – சேலா(ப்பழம்)

CHICKOO – சீமையிலுப்பை

CITRON – கடாரநாரத்தை

CITRUS AURANTIFOLIA – நாரத்தை

CITRUS AURANTIUM – கிச்சிலிப்பழம்

CITRUS MEDICA – கடரநாரத்தை

CITRUS RETICULATA – கமலாப்பழம்

CITRUS SINENSIS – சாத்துக்கொடி

CRANBERRY – குருதிநெல்லி

CUCUMUS TRIGONUS – கெச்சி

CUSTARD APPLE – சீத்தாப்பழம்

DEVIL FIG – பேயத்தி

DURIAN – முள்நாரிப்பழம்

EUGENIA RUBICUNDA – சிறுநாவல்

GOOSEBERRY – நெல்லிக்காய்

GRAPE – கொடிமுந்திரி, திராட்சைப்பழம்

GRAPEFRUIT – பம்பரமாசு

GUAVA – கொய்யாப்பழம்

HANEPOOT – அரபுக் கொடிமுந்திரி

HARFAROWRIE – அரைநெல்லி

JACKFRUIT – பலாப்பழம்

JAMUN FRUIT – நாவல்பழம்

KIWI – பசலிப்பழம்

LYCHEE – விளச்சிப்பழம்

MANGO FRUIT – மாம்பழம்

MANGOSTEEN – கடார முருகல்

MELON – வெள்ளரிப்பழம்

MULBERRY – முசுக்கட்டைப்பழம்

MUSCAT GRAPE – அரபுக் கொடிமுந்திரி

ORANGE – தோடைப்பழம், நரந்தம்பழம்

ORANGE (SWEET) – சாத்துக்கொடி

ORANGE (LOOSE JACKET) – கமலாப்பழம்

PAIR – பேரிக்காய்

PAPAYA – பப்பாளி

PASSIONFRUIT – கொடித்தோடைப்பழம்

PEACH – குழிப்பேரி

PERSIMMON – சீமைப் பனிச்சை

PHYLLANTHUS DISTICHUS – அரைநெல்லி

PLUM – ஆல்பக்கோடா

POMELO – பம்பரமாசு

PRUNE – உலர்த்தியப் பழம்

QUINCE – சீமைமாதுளை, சீமைமாதுளம்பழம்

RAISIN – உலர் கொடிமுந்திரி, உலர் திராட்சை

RASPBERRY – புற்றுப்பழம்

RED BANANA – செவ்வாழைப்பழம்

RED CURRANT – செந்திராட்சை, செங்கொடிமுந்திரி

SAPODILLA – சீமையிலுப்பை

STAR-FRUIT – விளிம்பிப்பழம்

STRAWBERRY – செம்புற்றுப்பழம்

SWEET SOP – சீத்தாப்பழம்

TAMARILLO – குறுந்தக்காளி

TANGERINE – தேனரந்தம்பழம்

UGLI FRUIT – முரட்டுத் தோடை

WATERMELON – குமட்டிப்பழம், தர்பூசணி

WOOD APPLE – விளாம்பழம்

….



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

சபரிமலை தர்ம சாஸ்தாவின் பதினெட்டுப் படி கள் உணர்த்தும் தத்துவம்.


சபரிமலை தர்ம சாஸ்தாவின் பதினெட்டுப் படிகள் உணர்த்தும் தத்துவம்.

.
காமம்:

பற்று உண்டானால் பாசம்,மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது.

குரோதம் :

கோபம் குடியைக் கெடுத்து ,கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் அடைய முடியாது.

மதம்:

யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும்.அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா.அது போல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்து விடுவான்.

மாத்ஸர்யம்:

மனதில் பொறாமையை நிலை நிருத்தி வாழ்பவனுக்கு வேறு பகையே வேண்டாம்.அதுவே அவனை அழித்துவிடும்.

வீண் பெருமை:

அசுர குணமானது நாமகள் இருக்க கூடாது.

அகந்தை :

தான் என்ற அகந்தை கொண்டவன் ஒருபோதும் வாழ்வில் முன்னேற முடியாது.அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச் சுமை.

சாத்வீகம் :

விருப்பு வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும்.

ராஜஸம்:

அகங்காரத்தோடு கருமம் செய்தல்.

தாமஸம்:

அற்ப புத்தியை பற்றி நிற்பது..மதி மயக்கத்தால் வினை செய்வது.

ஞானம் :

எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு.

மனம்:

நம்மனம் கெடாது.பிறர் மனம் வருந்தாது வாழ வேண்டும்.எப்போது ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும்.

அஞ்ஞானம்:

உண்மைப் பொருளை அறிய மட்டது மூடி நிற்கும் இருள்.

கண் :

ஆண்டவனைப் பார்க்கவும்,ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமெ ஏற்பட்டது.

காது:

ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு,அந்த ஆனந்தக் கடலில் மூழ்க வேண்டும் .

மூக்கு:

ஆண்டவனின் சன்னதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும்.

நாக்கு:

இரு கரங்களால் இறைவனை கைகூப்பித் தொழ வேண்டும்.கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்ல வேண்டும்.உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும்.

இந்த பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும் ,தீயவற்றைக் களைந்தும் வாழ்க்கைப் படியில் ஏறிச் சென்றதால் இறைவன் அருள் நமக்கு கிடைக்கும் .

இவையே சபரிமலை தர்ம சாஸ்தாவின் பதினெட்டுப் படிகள் உணர்த்தும் தத்துவம்.

18 படி தெய்வங்கள்:

ஐயப்பன் கோவிலில் உள்ள 18 படியிலும் 18 தெய்வங்கள் அருள் பாலிப்பது சிறப்பு:

1.விநாயகர்

2.சிவன்

3.பார்வதி

4.முருகன்

5.பிரம்மா

6.விஷ்ணு

7.ரெங்கநாதர்

8.காளி

9.எமன்

10.சூரியன்

11.சந்திரன்

12.செவ்வாய்

13.புதன்

14.குரு(வியாழன் )

15.சுக்கிரன்

16.சனி

17.ராகு

18.கேது



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

குளித்து முடிந்தபின் ஈரமான திருநீர் ஏன் அணிய வேண்டும் ….


குளித்து முடிந்தபின் ஈரமான திருநீர் ஏன் அணிய வேண்டும் ….

ஒரு விரிவான விளக்கம்

..
திருநீர் அணிவதைப் பற்றிக்கூறும் போது சில நேரங்களில் ஈரமான விபூதி அணிய வேண்டுமென்றும், சில நேரங்களில் ஈரமில்லா திருநீர் அணிய வேண்டும் என்று கூறுவது ஒன்றுக் கொன்று முரண்பாடாக உள்ளதே என்று தோன்றலாம்.

திருநீர் அணிந்தவர்களை கண்டால் மனதுக்குள்ளாவது இகழும் இக்காலத்தில் இந்த முரண்பாடுக்கு விளக்கம் கூறுவது அவசியம்.

நம் முன்னோர்கள் மருத்துவ குணங்களை பற்றி அவர்கள் நன்கறிந்திருந்தனர்.

அதிகாலையில் எழுந்து கை, கால், முகம், கழுவி, திருநீர்ச்சட்டியிலிருந்து ஒரு பிடி எடுத்து நெற்றியிலும், பின் மாறிடத்தும் .இரு புஜங்களிலும் சில வர்மஸ்தானங்களிலும் பாட்டனும் பாட்டியும் பூசிக்கொள்ளவதை சிலராவது பார்த்திருப்போம் .

மாலைப் பொழுதிலும் இவ்வாறு கை,கால்,கழுவி வந்து நனைக்காமல் திருநீர் பூசுவதுண்டு , ஆனால் குளித்த ஓய்ந் திருநீர் எடுத்து நணித்து உடலில் பூசி வந்தனர் .இப்படி இரண்டு வகையான திருநீர் பூசும் முறை பார்க்கும் போது நாம் புரிந்து கொள்ள வேண்டியது நனைக்காத திருநீருக்கு அணுக்களை அழிக்கும் சக்த்தியும் நனைத்த திருநீருக்கு உடலில் மிகையாக உள்ள ஈரத்தை உறிஞ்சி அகற்றும் சக்தியும் உண்டென்பதாகும்.

இவ்வளவும் அறிந்த பின் ,நம் உடலில் காலையிலும், மாலையிலும் மட்டும் ஏன் அணுக்களின் பாதிப்பு உண்டாகின்றது என்பதை கவனிப்போம் .

இரவு ஒரு நேரம் ஒரு நபர் தூங்கும் போது அவர் படுக்கையில் லட்சக்கணக்கான அணுக்கள் பரவியிருக்கும் என்று விஞானம் கூறுகிறது.

அதே போல் மாலை நேரத்தில் சுற்று சூழலில் எண்ணற்ற நோயனுக்கள் உலாவுகின்றன என்பது அறிவியலின் உறுதியான கண்டுபிடிப்பு .

அதனால் காலையும் மாலையும்
நோயனுக்களின் பாதிப்பு ஏற்படாமலிருக்க ஈரமில்லாத திருநீரை அணிந்து வருகின்றனர்.

குளிக்கும் நேரம் உடலின் மூட்டுகளில் ஈரம் காரணமாக நீர் கட்டு உருவாகவும் காலப் போக்கில் அது வாயிலாககொழுப்பு அதிகரிக்கவும் அது மூட்டு வாதமாக மாறவும் வாய்ப்புண்டு .

இப்படி உருவாகும் நீர்க்கட்டி தவிர்ப்பதற்க்காகத்தான் குளித்த உடன் ஈரமான திருநீர் அணிவது வழக்கமாக்க பட்டது .

அணியும் காரணம் — மற்றொரு விளக்கம்

மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய பாகம், அதன் வழியாக மிக அதிகமாக சக்தி வெளிப்படும், உள்ளிழுக்கவும் செய்யும்.

இது ஒரு வர்ம ஸாதனம் கூட.

சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும் வேலையை திருநீர் செவ்வனே செய்யும், அதனால்தான் நெற்றியில் திருநீறு பூசுகிறார்கள்.

மற்றவர்களின் பார்வையினால் வெளிப்படும் சக்திகளும் அவர்களுக்கு தெரியாமலேயே நெற்றி வழியாக அதிகம் கவரப்படும், அவர்களை தன்னிலை இழக்கச்செய்வதும் வசப்படுத்துவதும் இதன் மூலமாக எளிதாக செய்துவிடலாம்.

மனோ தத்துவம், ஹிப்னாட்டிஸம், மெஸ்மரிஸம் போன்றவற்றிலும் இங்கே பார்வையும் மன எண்ணங்களும் முக்கிய இடம் வகிக்கிறது.

கண்ணேறு என்று சொல்லப்படும் தேவையில்லாத எண்ணங்கள் ஊடுறுவதை தடுக்கவும் திருநீறு இடப்படும்.

ஆக்ஞா தியானம் செய்பவர்களுக்கு உடல் மிக வெப்பம் அதிகரிக்கும்.

அந்நேரம் சூடு தணிய இங்கே சந்தனம் பூசுவார்கள்.

மருத்துவ ரீதியாக உடலுக்கு மிக முக்கியமான ஹார்மோன் சுரக்கும் பிட்யூட்டிரி சுரப்பியை தூண்டச்செய்யும் இடம் இந்த நெற்றி ஆகும், ஆக்ஞா தியானம் என்பதே இந்த சுரப்பியை தூண்டத்தான்.

அணியும் முறை-

வடதிசை அல்லது கிழக்கு திசையையாவது நோக்கி நின்றுகொண்டு, கீழே சிந்தாமல், வலது கையின் ஆட்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் ஆகிய மூன்று விரல்களால் திருநீறை எடுத்து அண்ணாந்து நின்று, பூசிக்கொள்ளல் வேண்டும்.

எடுக்கும் போதுதிருச்சிற்றம்பலம் என்றும் பூசும் போது சிவாயநம அல்லது சிவசிவ என்று உதடு பிரியாது மனம் ஒன்றிச் சொல்லிக் கொள்ளுதல் வேண்டும்.

ஒன்று நெற்றி முழுவதும் அல்லது 3 படுக்கை வசக் கோடுகளாகத் தரிக்க வேண்டும்.

காலை, மாலை, பூசைக்கு முன்னும் பின்னும், ஆலயம் செல்வதற்கு முன்னும், இரவு உறங்கப் போவதற்கு முன்னும் திருநீறு தரிக்க வேண்டும்.

நெற்றியில் முழுவதும் பரவிப் பூசுவதை “உத்தூளனம்” எனப்படும்.

மூன்று படுக்கை வசக்கோடுகளாக பூசுவதை “திரிபுண்டரம்” எனப்படும்.

திருநீறு அணியும் இடங்கள்
————————– ————
உடலில் திருநீறு அணியக்கூடிய இடங்களாகப் பதினெட்டு இடங்கள் குறிப்பிடப்படுகின்றன.

அவை
1. தலை நடுவில் (உச்சி)

2. நெற்றி

3. மார்பு

4. தொப்புளுக்கு(கொப்பூழ்) சற்று மேல்.

5. இடது தோள்

6. வலது தோள்

7. இடது கையின் நடுவில்

8. வலது கையின் நடுவில்

9. இடது மணிக்கட்டு

10. வலது மணிக்கட்டு

11. இடது இடுப்பு

12. வலது இடுப்பு

13. இடது கால் நடுவில்

14. வலது கால் நடுவில்

15. முதுகுக்குக் கீழ்

16. கழுத்து முழுவதும்

17. வலது காதில் ஒரு பொட்டு

18. இடது காதில் ஒரு பொட்டு

பலன்கள்-

திருநீறு அணிவதால் தடையற்ற இறைச் சிந்தனை, உயர்ந்த நற்குணங்கள், குறைவற்ற செல்வம், நல்வாக்கு, நல்லோர் நட்பு, போன்ற எல்லா நலமும் பெற்று சிறப்புடன் வாழலாம்.

உடல் நலனும் இரத்த ஓட்டமும் சீர்படும்.

பாவங்கள் என வரையறுக்கப் பட்டவைகளை ஒதுக்கும் மனப் பாங்கும், தொல்லைகள் அனைத்தையும் அழித்தும் அனைத்துப் பேறுகளையும் அளித்துப் பிறவிப் பிணி அறுத்து மோக்கம்(மோட்சம்) செல்ல வழிகாட்டும். இதைத்தான் திருமூலர் பின்வரும் பாடலில் தெரிவிக்கிறார்.

கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே

திருநீறு (விபூதி):-

திருநீறு (விபூதி) சைவர்களால் நெற்றியில் இடப்படும் புனித அடையாளம். இது ஜசுவரி்யம் என்றும் கூறப்படும்.

திருநீற்றை நான்கு வகைகளாகப் பிரிக்கின்றனர்.

அவை

1. கல்பம்

2. அணுகல்பம்

3. உபகல்பம்

4. அகல்பம்

1.கல்பம்

கன்றுடன் கூடிய நோயற்ற பசுவின் சாணத்தைப் பூமியில் விழாது தாமரை இலையில் பிடித்து உருண்டையாக்கி பஞ்ச பிரம்ம மந்திரங்களால் சிவாக்கினியில் எரித்து எடுப்பதே கல்பத் திருநீறு எனப்படும்.

2.அணுகல்பம்

ஆரண்யங்களில் (காடுகளில்) கிடைக்கும் பசுஞ்சாணங்களைக் கொண்டு முறைப்படி தயாரிக்கப்படுவது அணுகல்பத் திருநீறு எனப்படும்.

3.உபகல்பம்

மாட்டுத் தொழுவம் அல்லது மாடுகள் மேயும் இடங்களில் இருந்து எடுத்த சாணத்தைக் காட்டுத்தீயில் எரித்து, பின்பு சிவாக்கினியில் எரித்து எடுக்கப்படுவது உபகல்பத் திருநீறு எனப்படும்.

4.அகல்பம்

அனைவராலும் சேகரித்துக் கொடுக்கப்படும் சாணத்தைச் சுள்ளிகளால் எரித்து எடுப்பது அகல்பத் திருநீறு எனப்படும்.

அணியும் காரணம்

“மந்திரமாவது நீறு” – திருஞானசம்பந்தர், திருநீற்றுப் பதிகம். மன் + திறம் = மந்திரம்.

மும்மலங்களையும்சாம்பலாக்கி அழித்தபின் எஞ்சியது நீறு. நீறிடுதல் என்பது மாசற்ற சுத்த சாந்த நிலைக்கு அடையாளமும் ஆகும்.

புருவ நடுவே தியான நிலை;ஆத்ம பிரகாசம் உள்ளது.

அப்பகுதியில் முக்கோண வடிவாக எரிவதை யோகியர் என்பர்,

அவ்விடத்தில் தியானம் ஊன்ற வேண்டுமென்பதற்காகவே சந்தனம், குங்குமம், திருநீறு, திருமண் முதலியவற்றினை இடுவர்.

புருவ நடுவின் மேல் நெற்றியின் சஹஸ்ராரத்தில் துரியவெளியுள்ளது. அவ்விடத்தில் அருட்சோதி தோன்றுவதனைக் குறிக்கவே நீறு இடுவர்.

இது தற்பொழுது உள்ள குறிப்பு.

1.இருபுருவங்களின் நடுப்பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வு நிலை உள்ளது.

அதனால் மன வசியம் (hypnotisers) எளிதாக வசியம் செய்ய முடியும் என்பதற்காகவே, நெற்றியில் திலகமும், திருநீறு, திருமண் போன்றவற்றை இடுவது வழக்கம்.

2.அருட்சோதி புருவ நடுவில் தோன்றுவது இல்லை.

அது கபாலக் குகைக்குள்தான் தோன்றும். புருவ நடுப்பகுதி வழியாகக் கபாலக் குகைக்குள் நுழைய முடியும் என்பதைக் குறிக்க வேண்டுமாகில் திருக்குறிகளை அங்கு இட்டிருக்கலாம்.
அணியும் காரணம் — மற்றொரு விளக்கம்
மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய பாகம், அதன் வழியாக மிக அதிக மாக சக்தி வெளிப்படும், உள்ளிழுக்கவும் செய்யும். இது ஒரு வர்ம ஸாதனம் கூட.

சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும் வேலையை திருநீர் செவ்வனே செய்யும், அதனால்தான் நெற்றியில் திருநீறு பூசுகிறார்கள்.

மற்றவர்களின் பார்வையினால் வெளிப்படும் சக்திகளும் அவர்களுக்கு தெரியாமலேயே நெற்றி வழியாக அதிகம் கவரப்படும், அவர்களை தன்னிலை இழக்கச்செய்வதும் வசப்படுத்துவதும் இதன் மூலமாக எளிதாக செய்துவிடலாம்.

மனோ தத்துவம், ஹிப்னாட்டிஸம், மெஸ்மரிஸம் போன்றவற்றிலும் இங்கே பார்வையும் மன எண்ணங்களும் முக்கிய இடம் வகிக்கிறது. கண்ணேறு என்று சொல்லப்படும் தேவையில்லாத எண்ணங்கள் ஊடுறுவதை தடுக்கவும் திருநீறு இடப்படும்.

ஆக்ஞா தியானம் செய்பவர்களுக்கு உடல் மிக வெப்பம் அதிகரிக்கும். அந்நேரம் சூடு தணிய இங்கே சந்தனம் பூசுவார்கள்.

மருத்துவ ரீதியாக உடலுக்கு மிக முக்கியமான ஹார்மோன் சுரக்கும் பிட்யூட்டிரி சுரப்பியை தூண்டச்செய்யும் இடம் இந்த நெற்றி ஆகும், ஆக்ஞா தியானம் என்பதே இந்த சுரப்பியை தூண்டத்தான். இது தொடக்கம்.

நீறில்லா நெற்றி பாழ். என்பார்கள்.

எரிவது என்றால் தீயோடு எரிவது. தீ இல்லாமல் வெறும் கனலால் எரிவதை நீறுதல் என்பார்கள். சுண்ணாம்பு தயாரிக்க சிப்பி தோடையும் வெறும் நீரையும் சேர்க்கும் போது அது நீறத்துவங்கும் கொதிக்கும், நெருப்பு இல்லாமல் புகையும், அதில் நெருப்பு இல்லை. ஒரு வகை வேதி வினை. அதை நீற்றுதல் என்பார்கள். அதை போல நீற்றி எடுக்கப்பட்டது திருநீறு.

ஆக்ஞா (நெற்றி) தியானம்

மேலும் நெற்றி என்பதை இதே போல நீற்ற வேண்டும், நீறிக்கொண்டிருக்க வேண்டும், அதாவது சுண்டு விரலை நமது நெற்றிப்பொட்டில் தொட்டும் தொடாமலும் நேராக பிடித்தால் நெற்றியில் ஒருவித உணர்வு ஏற்படும்.

அந்த உணர்வை அப்படியே வைத்து தியானம் செய்யவது ஆக்ஞா (நெற்றி) தியானம், இது குண்டலினி யோகாவின் தொடக்கம்,

பண்டைய சித்தர்கள் சொல்லிச்சென்ற உயிர் வளர்ப்பு முறையின் தொடக்கம் இது.

இதை முறையாக செய்தால் நம் சிந்தனைகள் சீர்படும், மற்றவரை விட அதிகமாக சிந்திக்கலாம். மனம் ஒருநிலைப்படும். எதையும் எளிதாக புரிந்து கொள்ள முடியும், காரிய சித்தி உருவாகும்.

இதை முறையாக செய்யவேண்டும், இந்த தியானம் செய்தால் கண்டிப்பாக சாந்தி தியானமும்
செய்யவேண்டும், இல்லையென்றால் அது ஒற்றைத் தலைவேதனையில் கொண்டுவந்து விட்டுவிடும்.

இதை நம்மிலேயே வைத்துக்கொண்டு செய்யாமல் இருப்பது பாழ். அதுதான் நீறில்லா நெற்றி பாழ்.

கற்றது கையளவு கல்லாதது உலகளவு

அணியும் முறை-

வடதிசை அல்லது கிழக்கு திசையையாவது நோக்கி நின்றுகொண்டு, கீழே சிந்தாமல், வலது கையின் ஆட்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் ஆகிய மூன்று விரல்களால் திருநீறை எடுத்து அண்ணாந்து நின்று, பூசிக்கொள்ளல் வேண்டும்.

எடுக்கும் போது திருச்சிற்றம்பலம் என்றும் பூசும் போது சிவாயநம அல்லது சிவசிவஎன்று உதடு பிரியாது மனம் ஒன்றிச் சொல்லிக் கொள்ளுதல் வேண்டும்.

ஒன்று நெற்றி முழுவதும் அல்லது 3 படுக்கை வசக் கோடுகளாகத் தரிக்க வேண்டும்.

காலை, மாலை, பூசைக்கு முன்னும் பின்னும், ஆலயம் செல்வதற்கு முன்னும், இரவு உறங்கப் போவதற்கு முன்னும் திருநீறு தரிக்க வேண்டும்.

நெற்றியில் முழுவதும் பரவிப் பூசுவதை “உத்தூளனம்” எனப்படும். மூன்று படுக்கை வசக்கோடுகளாக பூசுவதை “திரிபுண்டரம்” எனப்படும்.

திருநீறு:-

திருநீற்றின் பெருமையும் அதனை அணிவதால் வரும் நன்மைகளும்.

1. உடல் நாற்றத்தைப் போக்கும்.

2. தொத்து நோய்க் கிருமிகளைக் கொல்லும்.

3. தீட்டுக் கழிக்கும்.

4. உடலைச் சுத்தம் செய்யும்.

5. வியாதிகளைப் போக்கும்.

6. பில்லிசூனியம், கண்ணேறு பாதிக்காது காக்கும்.

7. முகத்திற்கு அழகைத் தரும்.

8. ஞாபக் சக்தியை உண்டாக்கும்.

9. புத்திக் கூர்மையைத் தரும்.

10. ஞானத்தை உண்டாக்கும்.

11. பாவத்தைப் போக்கும்.

12. பரக்தியைத் தரும்.

…..



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம ் இருக்கா?


வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா?

வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா? அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்கள்! பெண் குழந்தைகள் விளக்கேற்றுவதால் அவர்களின் முகப்பொலிவு கூடும். நம் வீட்டிலுள்ள பெண் குழந்தைகளை அவர்களது தாய்மார்கள் தினமும் விளக்கு ஏற்றும்படி பணிக்க வேண்டும். இதில் அவர்களின் இறை பணி மட்டுமில்லாமல் அவர்களின் தேஜசும் (அதாவது முகபொலிவும்) கூடுகிறது. இதை சோதிக்க விரும்பினால், தாய்மார்கள் தங்கள் பெண்ணை ஒரு குறிப்பிட்ட தினத்திலிருந்து விளக்கு ஏற்றும்படி சொல்லுங்கள். அன்று தங்கள் பெண்ணிடம் அவளது முக பொலிவை முகம் பார்க்கும் கண்ணாடியில் பார்க்க சொல்லுங்கள். நீங்களும் பாருங்கள். அன்றைய தேதியை கண்ணாடியின் மூலையில் குறித்து வையுங்கள். சரியாக 30 நாட்கள் (இதில் வயது வந்த பெண்களின் இயற்கையான உபாதை நாட்களை கணக்கில் கொள்ளாதீர்கள்) கழித்து, மீண்டும் உங்கள் பெண்ணை கண்ணாடியில் அவளது முகபொலிவினை பார்க்க சொல்லுங்கள். நீங்களும் பாருங்கள். மீண்டும் 45 வது நாள் இதேபோல் பாருங்கள். நிச்சயமாக ஒரு மாற்றத்தை உங்களால், உங்கள் பெண்ணால் உணர முடியும். அதுமட்டுமின்றி பெற்றோர்களின் ஆதரவும் அரவணைப்பும் வியப்பூட்டும் வகையில் கூடும். விளக்கேற்றவேண்டிய நேரம்: விடியற்காலையில் சூரியன் உதயமாவதற்குச் சற்று முன்னதாக `பிரம்ம முகூர்த்தம்’ என்கின்ற இரவின் விடியலாகத் திகழும் அருணம், என்கின்ற அருணோதய காலத்தில் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் எல்லாவித யோகத்தையும் பெறலாம். அதேபோல் மாலையில் சூரியன் மறைவதற்குச் சற்று முன்னதாக, பிரதோஷ காலம் என்கிற உன்னதமான காலத்தில் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால், குடும்பத்தில் செல்வம் பெருகும். சந்தோஷம் நிலவும், வேலை தேடுவோருக்கு நல்ல வேலை கிடைக்கும். புத்திர பாக்கியம் உண்டாகும். மனதுக்கு ஏற்ற வரன் அமையும். மற்றும் எல்லாவிதமான யோக பாக்கியங்களும் பெறலாம். பொதுவான விதிமுறைகள் 1. விளக்கில் எண்ணெய் விட்டு எத்தனை திரிகளைப் போட்டிருந்தாலும் அத்தனையும் ஏற்றிட வேண்டும். குறைந்த பட்சம் இரண்டு திரிகளாவது ஏற்ற வேண்டும். 2. பூஜை தொடங்கும் முன் வீட்டில் சுமங்கலி குத்துவிளக்கை ஏற்றி விட்டு வணங்கிய பிறகு பூஜை செய்தால் நிச்சயம் பலன் உண்டு. 3. விளக்கு தீபம் ஏற்றும்போது முதலில் விளக்கில் நெய் அல்லது எண்ணெய் ஆகியவற்றை ஊற்றிய பிறகே பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். அப்படி முறையாக ஏற்றிய தீபம் வீட்டில் உள்ள இருளை அகற்றுவதோடு, வீட்டில் உள்ளோர் அனைவரின் மன இருளையும் அகற்றி, தெளிவான சிந்தனையைத் தூண்டி, சிறந்த முறையில் செயாலாற்ற வைத்து, நிலையான அமைதியைத் தரும். 4. இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது நலம். 5. ஒரு திரி ஏற்றும் போது கிழக்கு திசை நோக்கி ஏற்றவும். நாம் ஏற்றும் திரியை பொறுத்து அதற்கு உண்டான பலன்களை அடையலாம். 6. தீபத்தை பூவின் காம்பினால் அணைக்கவும். வாயினால் ஊதக்கூடாது. கல்கண்டை கொண்டு தீபத்தை அமர்த்தவேண்டும். 7. தீபம் வெறும் விளக்கு அல்ல, நம் வாழ்வின் கலங்கரை விளக்கு. மங்களம் தங்கவும் இன்பம் பெருகவும் தீபம் ஏற்றுவோம். தீபமேற்றி என்றும் இறைவெளிச்சத்தில் இன்பம் காண்போம். எந்தெந்த எண்ணைகளில் விளக்கேற்றினால் என்னென்ன பலன்கள் ? நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் சகலவித சந்தோஷமும் இல்லத்தில் நிறைந்திருக்கும். நல்லெண்ணை எனப்படும் எள் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றிட, குடும்பத்தை ஆட்டிப் படைக்கும் எல்லாப் பீடைகளும் தொலைந்து போகும். விளக்கெண்ணை ஊற்றி தீபம் ஏற்றுபவர்களுக்கு புகழ் அபிவிருத்தியாகும். வேப்ப எண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் மூன்றும் கலந்து தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும். நெய், விளக்கெண்ணை, வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் கலந்து தீபம் ஏற்றி அம்மனை வணங்கினால் தேவியின் அருள் கிட்டும். கிரக தோஷங்கள் விலகி சுகம் பெற சுத்தமான பசு நெய்யினால் தீபம் ஏற்ற வேண்டும். கணவன்-மனைவி உறவு நலம் பெறவும் வேப்ப எண்ணெய் தீபம் உகந்தது. அவரவர்கள் தங்கள் குல தெய்வத்தின் முழு அருளையும் பெறவழி செய்வது ஆமணக்கு எண்ணெய் தீபம். எள் எண்ணெய் (நல்லெண்ணை) தீபம் என்றுமே ஆண்டவனுக்கு உகந்தது. நவக்கிரகங்களை திருப்தி செய்யவும் ஏற்றது. மனதில் தெளிவும், உறுதியும் ஏற்பட வேண்டுவோர் வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய்மூன்றையும் கலந்து தீபம் ஏற்ற வேண்டும். மந்திரசித்தி பெற வேண்டுவோர் விளக்கெண்ணை, இலுப்பை எண்ணெய், நெய், நல்லெண்ணை, தேங்காய் எண்ணெய் ஆகிய ஐந்து எண்ணெய்களையும் கலந்து விளக்கேற்ற வேண்டும். கணபதிக்கு தேங்காய் எண்ணெய் உகந்ததாகும். முருகனுக்கு நெய் தீபம் உபயோகப்படுத்துவது நல்லது. நாராயணனுக்கு நல்லெண்ணெய் ஏற்றதாகும். மகாலட்சுமிக்கு நெய் உபயோகப்படுத்தலாம். சர்வ தேவதைகளுக்கு நல்லெண்ணெய் உகந்தது. குலதெய்வத்திற்கு இலுப்பை எண்ணெய், நெய் மற்றும் நல்லெண்ணெய் இவை மூன்றும் உபயோகிக்கலாம். கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒரு போதும் விளக்கேற்றவே கூடாது. திசைகள்: கிழக்கு-இந்தத் திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் துன்பம் ஒழியும். வீட்டில் உள்ள பீடைகள் அகலும். மேற்கு-இந்தத் திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லை, சனிபீடை, கிரகதோஷம் பங்களிப்பதை இவை நீங்கும். வடக்கு-இந்தத் திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் செல்வமும், மங்கலமும் பெருகும். தெற்கு-இந்தத் திசையில் தீபம் ஏற்றக்கூடாது. என்னென்ன திரிகள் பயன்படுத்தலாம்? தாமரைப்பூத்தண்டின் திரி: தாமரைப் பூத்தண்டின் உள்பகுதியில் காணப்படும் வெண்மை கலந்த பகுதியும், தண்டுப் பகுதியின் உட்கூடும் நன்கு வெயிலில் காய வைத்து அதிலிருந்து உருவாக்கப்பட்ட திரியை விளக்கு வழிபாட்டிற்காக பயன்படுத்தினால் முன்வினைக் கர்ம பாபங்கள் நீங்கும். பிறவித் தளை நீங்கி மறுபிறப்பற்ற வாழ்வு நிலைத்து நின்று வழிபடுவோர் வாழ்வை வளப்படுத்தும். பஞ்சுத்திரி : பொதுவாக பருத்தியினால் திரித்து எடுக்கப்படுகின்ற திரி விளக்குகளுக்கு தீபத்திரியாக பயன்படுத்தப்படுகிறது. பெரும்பான்மையானோர் பருத்திப் பஞ்சினைத்தான் திரியாக பயன்படுத்துகின்றனர். இது தெய்வ குற்றம், பிதுர்களால் ஏற்பட்ட சாபம், வம்சாவழிப் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்திக் கொடுக்கக்கூடியது. எனவே இந்த திரியால் விளக்கேற்றுவது மிகுந்த பயன்தரும். நல்ல பலன்களை பஞ்சுத்திரி ஏற்படுத்தும். வெள்ளைத்துணி திரி : வெள்ளைத் துணியாக எடுத்து, அதைத் திரியாகத் திரித்து பயன்படுத்துவதால் பலவித உத்தமமான பலன்களை பெற முடியும். அதிலும் வெள்ளைத் துணியை பன்னீரில் நனைய வைத்து, பின் அதைக் காய வைத்து திரியாக திரித்து வைத்துக் கொண்டு பயன்படுத்துவது மேலும் பலன் தரக்கூடியதாகும். சிவப்பு வர்ணத் துணி திரி : சிவப்பு துணியிலிருந்து திரிக்கப்பட்ட திரியானது விளக்கெரிக்க தீப தரிசன வழிபாடு செய்ய பயன்படுத்தப்பட்டால் திருமண தடை நீங்கும் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பிறக்கும் பேறு உண்டாகும். மஞ்சள் துணியாலான திரி : இத்துணியாலான திரிக்கு தனி மகத்துவம் உண்டு. எதிலும் வெற்றி பெற விரும்பும் அன்பர்கள் பயன்படுத்த வேண்டிய திரி இது. தேவியின் பூரண அருள் நமக்கு கிடைக்க இந்த திரி பயன்படுத்தப்படுகின்றது. மனிதனுக்கு ஏற்படும் வியாதிகள் தீரவும், செய்வினைகள் நீங்கவும், காற்று சேட்டைகள் நீங்கி நலம் பெறவும், எதிரி பயம் நீங்கவும். தம்பதிகள் ஒற்றுமை ஓங்கவும் இது மிகவும் பயன்படும் திரி எனலாம். வாழைத்தண்டின் நாரினால் ஆன திரி : வாழைத்தண்டினை நன்கு காயவைத்து அடித்து பஞ்சு போலக்கி பின்பு அதனை திரியாக எடுத்து விளக்கெரிக்க பயன்படுத்தலாம். இது முன்னோர்களால் ஏற்பட்ட சாபம், தெய்வ காரியங்களில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு மற்றும் மனசாந்தி, குடும்ப அமைதி, குழந்தைப்பேறு ஆகியவற்றை ஏற்படுத்தி தரக்கூடியது. வெள்ளெருக்கந்திரி : வெள்ளெருக்கம் பட்டையை ஊறவைத்து பிறகு காயவைத்து அடித்து நாராக மாற்றித் திரியாகத் திரித்து விளக்கிற்கு பயன்படுத்தினால் செல்வச்செழிப்பு உண்டாகும். துர் ஆவிகளால் பாதிக்கப்பட்டவர்களை அத்துன்பத்திலிருந்து காப்பாற்றும் பிள்ளைகளின் நல்வாழ்வு நீடிக்கும். விளக்கேற்றும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம் கீடா:பதங்கா:மசகாச்ச வ்ருக்ஷõ: ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா:! த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜா பவந்தி நித்யம் ச்வபசா ஹி விப்ரா:!! பொருள்: புழுக்களோ, பறவைகளோ அல்லது கொசுவோ, நம் மாதிரி உயிருள்ள ஜீவனில்லை என்று நினைக்கப்படுகிற மரமோ, தண்ணீரிலும் பூமியிலும் எத்தனை வகையான ஜீவராசிகளோ, உயர்ஜாதி மனிதனோ, தாழ்ந்த குலத்தினனோ யாரானாலும் சரி…இந்த தீபத்தைப் பார்த்துவிட்டால் அந்த ஜீவனுடைய சகல பாவங்களும் நிவர்த்தியாகட்டும். இன்னொரு பிறவி எடுக்காமல் பரமானந்த வடிவான அந்த இறைவனுடன் கலக்கட்டும். ‘விளக்கினை ஏற்றி வெளியை அறிமின் விளக்கினின் முன்னே வேதனை மாறும் விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள் விளக்கில் விளங்கும் விளக்காவர் தாமே!’

வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா?

அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்கள்!

பெண் குழந்தைகள் விளக்கேற்றுவதால் அவர்களின் முகப்பொலிவு கூடும்.
நம் வீட்டிலுள்ள பெண் குழந்தைகளை அவர்களது தாய்மார்கள் தினமும் விளக்கு ஏற்றும்படி பணிக்க வேண்டும். இதில் அவர்களின் இறை பணி மட்டுமில்லாமல் அவர்களின் தேஜசும் (அதாவது முகபொலிவும்) கூடுகிறது. இதை சோதிக்க விரும்பினால், தாய்மார்கள் தங்கள் பெண்ணை ஒரு குறிப்பிட்ட தினத்திலிருந்து விளக்கு ஏற்றும்படி சொல்லுங்கள். அன்று தங்கள் பெண்ணிடம் அவளது முக பொலிவை முகம் பார்க்கும் கண்ணாடியில் பார்க்க சொல்லுங்கள். நீங்களும் பாருங்கள். அன்றைய தேதியை கண்ணாடியின் மூலையில் குறித்து வையுங்கள்.
சரியாக 30 நாட்கள் (இதில் வயது வந்த பெண்களின் இயற்கையான உபாதை நாட்களை கணக்கில் கொள்ளாதீர்கள்) கழித்து, மீண்டும் உங்கள் பெண்ணை கண்ணாடியில் அவளது முகபொலிவினை பார்க்க சொல்லுங்கள். நீங்களும் பாருங்கள்.
மீண்டும் 45 வது நாள் இதேபோல் பாருங்கள். நிச்சயமாக ஒரு மாற்றத்தை உங்களால், உங்கள் பெண்ணால் உணர முடியும். அதுமட்டுமின்றி பெற்றோர்களின் ஆதரவும் அரவணைப்பும் வியப்பூட்டும் வகையில் கூடும்.
விளக்கேற்றவேண்டிய நேரம்:
விடியற்காலையில் சூரியன் உதயமாவதற்குச் சற்று முன்னதாக `பிரம்ம முகூர்த்தம்’ என்கின்ற இரவின் விடியலாகத் திகழும் அருணம், என்கின்ற அருணோதய காலத்தில் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் எல்லாவித யோகத்தையும் பெறலாம்.
அதேபோல் மாலையில் சூரியன் மறைவதற்குச் சற்று முன்னதாக, பிரதோஷ காலம் என்கிற உன்னதமான காலத்தில் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால், குடும்பத்தில் செல்வம் பெருகும். சந்தோஷம் நிலவும், வேலை தேடுவோருக்கு நல்ல வேலை கிடைக்கும். புத்திர பாக்கியம் உண்டாகும். மனதுக்கு ஏற்ற வரன் அமையும். மற்றும் எல்லாவிதமான யோக பாக்கியங்களும் பெறலாம்.
பொதுவான விதிமுறைகள்
1. விளக்கில் எண்ணெய் விட்டு எத்தனை திரிகளைப் போட்டிருந்தாலும் அத்தனையும் ஏற்றிட வேண்டும். குறைந்த பட்சம் இரண்டு திரிகளாவது ஏற்ற வேண்டும்.
2. பூஜை தொடங்கும் முன் வீட்டில் சுமங்கலி குத்துவிளக்கை ஏற்றி விட்டு வணங்கிய பிறகு பூஜை செய்தால் நிச்சயம் பலன் உண்டு.
3. விளக்கு தீபம் ஏற்றும்போது முதலில் விளக்கில் நெய் அல்லது எண்ணெய் ஆகியவற்றை ஊற்றிய பிறகே பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். அப்படி முறையாக ஏற்றிய தீபம் வீட்டில் உள்ள இருளை அகற்றுவதோடு, வீட்டில் உள்ளோர் அனைவரின் மன இருளையும் அகற்றி, தெளிவான சிந்தனையைத் தூண்டி, சிறந்த முறையில் செயாலாற்ற வைத்து, நிலையான அமைதியைத் தரும்.
4. இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது நலம்.
5. ஒரு திரி ஏற்றும் போது கிழக்கு திசை நோக்கி ஏற்றவும். நாம் ஏற்றும் திரியை பொறுத்து அதற்கு உண்டான பலன்களை அடையலாம்.
6. தீபத்தை பூவின் காம்பினால் அணைக்கவும். வாயினால் ஊதக்கூடாது. கல்கண்டை கொண்டு தீபத்தை அமர்த்தவேண்டும்.
7. தீபம் வெறும் விளக்கு அல்ல, நம் வாழ்வின் கலங்கரை விளக்கு. மங்களம் தங்கவும் இன்பம் பெருகவும் தீபம் ஏற்றுவோம். தீபமேற்றி என்றும் இறைவெளிச்சத்தில் இன்பம் காண்போம்.
எந்தெந்த எண்ணைகளில் விளக்கேற்றினால் என்னென்ன பலன்கள் ?
நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் சகலவித சந்தோஷமும் இல்லத்தில் நிறைந்திருக்கும்.
நல்லெண்ணை எனப்படும் எள் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றிட, குடும்பத்தை ஆட்டிப் படைக்கும் எல்லாப் பீடைகளும் தொலைந்து போகும். விளக்கெண்ணை ஊற்றி தீபம் ஏற்றுபவர்களுக்கு புகழ் அபிவிருத்தியாகும்.
வேப்ப எண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் மூன்றும் கலந்து தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும்.
நெய், விளக்கெண்ணை, வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் கலந்து தீபம் ஏற்றி அம்மனை வணங்கினால் தேவியின் அருள் கிட்டும்.
கிரக தோஷங்கள் விலகி சுகம் பெற சுத்தமான பசு நெய்யினால் தீபம் ஏற்ற வேண்டும்.
கணவன்-மனைவி உறவு நலம் பெறவும் வேப்ப எண்ணெய் தீபம் உகந்தது.
அவரவர்கள் தங்கள் குல தெய்வத்தின் முழு அருளையும் பெறவழி செய்வது ஆமணக்கு எண்ணெய் தீபம்.
எள் எண்ணெய் (நல்லெண்ணை) தீபம் என்றுமே ஆண்டவனுக்கு உகந்தது. நவக்கிரகங்களை திருப்தி செய்யவும் ஏற்றது.
மனதில் தெளிவும், உறுதியும் ஏற்பட வேண்டுவோர் வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய்மூன்றையும் கலந்து தீபம் ஏற்ற வேண்டும்.
மந்திரசித்தி பெற வேண்டுவோர் விளக்கெண்ணை, இலுப்பை எண்ணெய், நெய், நல்லெண்ணை, தேங்காய் எண்ணெய் ஆகிய ஐந்து எண்ணெய்களையும் கலந்து விளக்கேற்ற வேண்டும்.
கணபதிக்கு தேங்காய் எண்ணெய் உகந்ததாகும். முருகனுக்கு நெய் தீபம் உபயோகப்படுத்துவது நல்லது. நாராயணனுக்கு நல்லெண்ணெய் ஏற்றதாகும். மகாலட்சுமிக்கு நெய் உபயோகப்படுத்தலாம். சர்வ தேவதைகளுக்கு நல்லெண்ணெய் உகந்தது. குலதெய்வத்திற்கு இலுப்பை எண்ணெய், நெய் மற்றும் நல்லெண்ணெய் இவை மூன்றும் உபயோகிக்கலாம்.
கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒரு போதும் விளக்கேற்றவே கூடாது.
திசைகள்:
கிழக்கு-இந்தத் திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் துன்பம் ஒழியும். வீட்டில் உள்ள பீடைகள் அகலும்.
மேற்கு-இந்தத் திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லை, சனிபீடை, கிரகதோஷம் பங்களிப்பதை இவை நீங்கும்.
வடக்கு-இந்தத் திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் செல்வமும், மங்கலமும் பெருகும்.
தெற்கு-இந்தத் திசையில் தீபம் ஏற்றக்கூடாது.
என்னென்ன திரிகள் பயன்படுத்தலாம்?
தாமரைப்பூத்தண்டின் திரி: தாமரைப் பூத்தண்டின் உள்பகுதியில் காணப்படும் வெண்மை கலந்த பகுதியும், தண்டுப் பகுதியின் உட்கூடும் நன்கு வெயிலில் காய வைத்து அதிலிருந்து உருவாக்கப்பட்ட திரியை விளக்கு வழிபாட்டிற்காக பயன்படுத்தினால் முன்வினைக் கர்ம பாபங்கள் நீங்கும். பிறவித் தளை நீங்கி மறுபிறப்பற்ற வாழ்வு நிலைத்து நின்று வழிபடுவோர் வாழ்வை வளப்படுத்தும்.
பஞ்சுத்திரி : பொதுவாக பருத்தியினால் திரித்து எடுக்கப்படுகின்ற திரி விளக்குகளுக்கு தீபத்திரியாக பயன்படுத்தப்படுகிறது. பெரும்பான்மையானோர் பருத்திப் பஞ்சினைத்தான் திரியாக பயன்படுத்துகின்றனர். இது தெய்வ குற்றம், பிதுர்களால் ஏற்பட்ட சாபம், வம்சாவழிப் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்திக் கொடுக்கக்கூடியது. எனவே இந்த திரியால் விளக்கேற்றுவது மிகுந்த பயன்தரும். நல்ல பலன்களை பஞ்சுத்திரி ஏற்படுத்தும்.
வெள்ளைத்துணி திரி : வெள்ளைத் துணியாக எடுத்து, அதைத் திரியாகத் திரித்து பயன்படுத்துவதால் பலவித உத்தமமான பலன்களை பெற முடியும். அதிலும் வெள்ளைத் துணியை பன்னீரில் நனைய வைத்து, பின் அதைக் காய வைத்து திரியாக திரித்து வைத்துக் கொண்டு பயன்படுத்துவது மேலும் பலன் தரக்கூடியதாகும்.
சிவப்பு வர்ணத் துணி திரி : சிவப்பு துணியிலிருந்து திரிக்கப்பட்ட திரியானது விளக்கெரிக்க தீப தரிசன வழிபாடு செய்ய பயன்படுத்தப்பட்டால் திருமண தடை நீங்கும் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பிறக்கும் பேறு உண்டாகும்.
மஞ்சள் துணியாலான திரி : இத்துணியாலான திரிக்கு தனி மகத்துவம் உண்டு. எதிலும் வெற்றி பெற விரும்பும் அன்பர்கள் பயன்படுத்த வேண்டிய திரி இது. தேவியின் பூரண அருள் நமக்கு கிடைக்க இந்த திரி பயன்படுத்தப்படுகின்றது. மனிதனுக்கு ஏற்படும் வியாதிகள் தீரவும், செய்வினைகள் நீங்கவும், காற்று சேட்டைகள் நீங்கி நலம் பெறவும், எதிரி பயம் நீங்கவும். தம்பதிகள் ஒற்றுமை ஓங்கவும் இது மிகவும் பயன்படும் திரி எனலாம்.
வாழைத்தண்டின் நாரினால் ஆன திரி : வாழைத்தண்டினை நன்கு காயவைத்து அடித்து பஞ்சு போலக்கி பின்பு அதனை திரியாக எடுத்து விளக்கெரிக்க பயன்படுத்தலாம். இது முன்னோர்களால் ஏற்பட்ட சாபம், தெய்வ காரியங்களில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு மற்றும் மனசாந்தி, குடும்ப அமைதி, குழந்தைப்பேறு ஆகியவற்றை ஏற்படுத்தி தரக்கூடியது.
வெள்ளெருக்கந்திரி : வெள்ளெருக்கம் பட்டையை ஊறவைத்து பிறகு காயவைத்து அடித்து நாராக மாற்றித் திரியாகத் திரித்து விளக்கிற்கு பயன்படுத்தினால் செல்வச்செழிப்பு உண்டாகும். துர் ஆவிகளால் பாதிக்கப்பட்டவர்களை அத்துன்பத்திலிருந்து காப்பாற்றும் பிள்ளைகளின் நல்வாழ்வு நீடிக்கும்.
விளக்கேற்றும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்
கீடா:பதங்கா:மசகாச்ச வ்ருக்ஷõ:
ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா:!
த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜா
பவந்தி நித்யம் ச்வபசா ஹி விப்ரா:!!
பொருள்: புழுக்களோ, பறவைகளோ அல்லது கொசுவோ, நம் மாதிரி உயிருள்ள ஜீவனில்லை என்று நினைக்கப்படுகிற மரமோ, தண்ணீரிலும் பூமியிலும் எத்தனை வகையான ஜீவராசிகளோ, உயர்ஜாதி மனிதனோ, தாழ்ந்த குலத்தினனோ யாரானாலும் சரி…இந்த தீபத்தைப் பார்த்துவிட்டால் அந்த ஜீவனுடைய சகல பாவங்களும் நிவர்த்தியாகட்டும். இன்னொரு பிறவி எடுக்காமல் பரமானந்த வடிவான அந்த இறைவனுடன் கலக்கட்டும்.
‘விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்காவர் தாமே!’



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

பிரிட்ஜில் எவ்வளவு நாட்கள் உணவுப் பொருட் கள், பிரஷ்ஷாக இருக்கும் ?????


பிரிட்ஜில் எவ்வளவு நாட்கள் உணவுப் பொருட்கள், பிரஷ்ஷாக இருக்கும் ????? பெரும்பாலான வீடுகளில், இன்று கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்களாகவே உள்ளனர். இதனால், அன்றாடம் வீட்டிற்கு தேவையான காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றை தினசரி கடைக்கு சென்று வாங்க முடியாத நிலை நிலவுகிறது. *அவ்வாறானவர்களுக்கு வரப்பிரசாதாமாக கைகொடுக்கும் ஒரு சாதனம், குளிர்சாதனப் பெட்டியான “பிரிட்ஜ்’ என்பதை யாராலும் மறுக்க முடியாது. *வாரத்திற்கு ஒரு முறை, கடைக்கு சென்று உணவுப் பொருட்களை வாங்கி, அவற்றை பிரிட்ஜில் சேமித்து வைத்து விடுகின்றனர். எனினும், பிரிட்ஜில் எவ்வளவு நாட்கள் உணவுப் பொருட்கள், பிரஷ்ஷாக இருக்கும் என்பது, நம்மில் பலருக்கு தெரியாது. *பிரிட்ஜில் 34 டிகிரி பாரன்ஹீட் முதல் 40 டிகிரி பாரன்ஹீட்டுக்கு இடைப்பட்ட அளவில், வெப்பநிலை இருக்குமாறு, பராமரிக்க வேண்டியது, அவசியம். *இதனால், உணவுப் பொருட்கள், நீண்ட காலம், பிரஷ்ஷாக பயன்படுத்தப்படும் வகையில் இருக்கும். ஒவ்வொரு உணவுப் பொருளும், பிரிட்ஜில் எவ்வளவு நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும் என்பது குறித்த தகவல். உணவுப் பொருட்கள் உணவு பிரஷ்ஷாக இருக்கும் காலம்: பழங்கள்: திராட்சை, ஏப்ரிகாட், பேரிக்காய், பிளம்ஸ் 3-5 நாட்கள் ஆப்பிள்கள் ஒரு மாதம் சிட்ரஸ் பழங்கள் 2 வாரங்கள் அன்னாசி (முழுசாக) 1 வாரம் (வெட்டிய துண்டுகள்) 2-3 நாட்கள் காய்கறிகள்: புரோக்கோலி, காய்ந்த பட்டாணி 3-5 நாட்கள் முட்டைகோஸ், கேரட், முள்ளங்கி, ஓம இலை 1-2 வாரங்கள் வெள்ளரிக்காய் ஒரு வாரம் தக்காளி 1-2 நாட்கள் காலிபிளவர், கத்தரிக்காய் 1 வாரம் காளான் 1-2 நாட்கள் அசைவ உணவுகள்: வறுத்த இறைச்சி மற்றும் கிரேவி 2-3 நாட்கள் சமைத்த மீன் 3-4 நாட்கள் பிரஷ் மீன் 1-2 நாட்கள் ஓட்டுடன் கூடிய நண்டு 2 நாட்கள் பிரஷ்ஷான இறால்(சமைக்காதது) ஒரு நாள் உலர்ந்த மீன் அல்லது மீன் ஊறுகாய் ஒரு வாரம் பிரஷ்ஷான கோழி இறைச்சி துண்டுகள் 1-2 நாட்கள் சமைத்த கோழி இறைச்சி 2-3 நாட்கள் பால் பொருட்கள்: பால் அல்லது ஆடை நீக்கப்பட்ட பால் ஒரு வாரம் பதப்படுத்தப்பட்ட பால், சுவீட் கிரீம், சுவையூட்டப்பட்ட பால், அதன் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள விற்பனை தேதியில் இருந்து, 10-14 நாட்கள் மோர் 2 வாரங்கள் தயிர் 7-10 நாட்கள் காய்கறிகள் மற்றும் பழங்கள் உட்பட உணவுப் பொருட்களை குறிப்பிட்ட காலத்தில், சரியான முறையில் பாதுகாத்து வைப்பதன் மூலம் அவை விரைவில் கெட்டுப் போகாமல் பாதுகாக்கலாம். இதனால், பணம் வீணாவதும் தவிர்க்கப்படும். visit & join https://m.facebook.com/sureshbabusuperphotos,

பிரிட்ஜில் எவ்வளவு நாட்கள் உணவுப் பொருட்கள், பிரஷ்ஷாக இருக்கும் ?????

பெரும்பாலான வீடுகளில், இன்று கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்களாகவே உள்ளனர். இதனால், அன்றாடம் வீட்டிற்கு தேவையான காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றை தினசரி கடைக்கு சென்று வாங்க முடியாத நிலை நிலவுகிறது.

*அவ்வாறானவர்களுக்கு வரப்பிரசாதாமாக கைகொடுக்கும் ஒரு சாதனம், குளிர்சாதனப் பெட்டியான “பிரிட்ஜ்’ என்பதை யாராலும் மறுக்க முடியாது.

*வாரத்திற்கு ஒரு முறை, கடைக்கு சென்று உணவுப் பொருட்களை வாங்கி, அவற்றை பிரிட்ஜில் சேமித்து வைத்து விடுகின்றனர். எனினும், பிரிட்ஜில் எவ்வளவு நாட்கள் உணவுப் பொருட்கள், பிரஷ்ஷாக இருக்கும் என்பது, நம்மில் பலருக்கு தெரியாது.

*பிரிட்ஜில் 34 டிகிரி பாரன்ஹீட் முதல் 40 டிகிரி பாரன்ஹீட்டுக்கு இடைப்பட்ட அளவில், வெப்பநிலை இருக்குமாறு, பராமரிக்க வேண்டியது, அவசியம்.

*இதனால், உணவுப் பொருட்கள், நீண்ட காலம், பிரஷ்ஷாக பயன்படுத்தப்படும் வகையில் இருக்கும். ஒவ்வொரு உணவுப் பொருளும், பிரிட்ஜில் எவ்வளவு நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும் என்பது குறித்த தகவல்.

உணவுப் பொருட்கள் உணவு பிரஷ்ஷாக இருக்கும் காலம்:

பழங்கள்:

திராட்சை, ஏப்ரிகாட், பேரிக்காய், பிளம்ஸ் 3-5 நாட்கள்
ஆப்பிள்கள் ஒரு மாதம்
சிட்ரஸ் பழங்கள் 2 வாரங்கள்
அன்னாசி (முழுசாக) 1 வாரம்
(வெட்டிய துண்டுகள்) 2-3 நாட்கள்

காய்கறிகள்:

புரோக்கோலி, காய்ந்த பட்டாணி 3-5 நாட்கள்
முட்டைகோஸ், கேரட், முள்ளங்கி, ஓம இலை 1-2 வாரங்கள்
வெள்ளரிக்காய் ஒரு வாரம்
தக்காளி 1-2 நாட்கள்
காலிபிளவர், கத்தரிக்காய் 1 வாரம்
காளான் 1-2 நாட்கள்

அசைவ உணவுகள்:

வறுத்த இறைச்சி மற்றும் கிரேவி 2-3 நாட்கள்
சமைத்த மீன் 3-4 நாட்கள்
பிரஷ் மீன் 1-2 நாட்கள்
ஓட்டுடன் கூடிய நண்டு 2 நாட்கள்
பிரஷ்ஷான இறால்(சமைக்காதது) ஒரு நாள்
உலர்ந்த மீன் அல்லது மீன் ஊறுகாய் ஒரு வாரம்
பிரஷ்ஷான கோழி இறைச்சி துண்டுகள் 1-2 நாட்கள்
சமைத்த கோழி இறைச்சி 2-3 நாட்கள்

பால் பொருட்கள்:

பால் அல்லது ஆடை நீக்கப்பட்ட பால் ஒரு வாரம்
பதப்படுத்தப்பட்ட பால், சுவீட் கிரீம், சுவையூட்டப்பட்ட பால், அதன் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள விற்பனை தேதியில் இருந்து, 10-14 நாட்கள்

மோர் 2 வாரங்கள்
தயிர் 7-10 நாட்கள்

காய்கறிகள் மற்றும் பழங்கள் உட்பட உணவுப் பொருட்களை குறிப்பிட்ட காலத்தில், சரியான முறையில் பாதுகாத்து வைப்பதன் மூலம் அவை விரைவில் கெட்டுப் போகாமல் பாதுகாக்கலாம். இதனால், பணம் வீணாவதும் தவிர்க்கப்படும்.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

60% OFF coupon on Wondershare Video Editor for Windows / MAC


If you’re looking to use a video converting software the comes with simple and flexible program interface, as well as easy and fast conversion and downloading mechanism, the best software you can rely on is Wondershare Video Converter Ultimate from Wondershare. This video converting software is the best program for all users who like to easily and effortlessly convert all types of videos. Wondershare Video Converter Ultimate can handle both video creation and playing. You can use this software to convert high volume and various types of videos according to your preference.

By using this software, you can easily convert videos whatever format they have. While you’re using this video converting software from Wondershare, you’ll get the chance to note that it comes with an elegant and user-friendly platform, as well as you can use it easily. This application program works very well for all users, regardless if you already have used any video converting software in the past or not. Wondershare Video Converter Ultimate’s interface is very straightforward, that’s why you can use it for whatever purpose you have in mind in line with converting all video formats to DVD files.

Additionally, this video converting software comes with an extremely useful set of tools to help you through during the video conversion process, whether you’re downloading or capturing online videos. As you use this video converting software, you can easily do video manipulation in nearly any technique possible in no time. Although, this video converting program may have downsides, it can match the quality, features and benefits of any similar software available in the marketplace today.

Wondershare Video Converter Ultimate is the only video converting software that can offer you the following beneficial features such as:

1.Wondershare desktop player.

2.Easy burning of video to ISO files, DVD disc or DVD folder.

3.One-click online video capturing and downloading feature.

4.Multi-format video conversion.

5.Faster conversion compared to other converting software.

6.Handles nearly any type of video file.

Wondershare Video Converter Ultimate comes with an extremely remarkable list, whether it involves an image, audio or video file.

Price with discount coupon:Save: $30

coupon-vcs.png

60% OFF Wondershare Video Editor Coupon code (Windows/MAC)

ஸ்படிகம்:::


ஸ்படிகம்:::

ஸ்படிக மாலை பற்றித் தெரியாதவர்களே இருக்க முடியாது. மிகவும் குளிர்ச்சியான பிரதே சங்களில் வசிப்பவர்களும், குளிர்ச்சியான உடல் நிலை கொண்டவர்களும் ஸ்படிகம் அணிவதைத் தவிர்க்கவேண்டும். மற்றவர்கள் யார் வேண்டுமா னாலும் அணியலாம்.

ஸ்படிக மாலையை ஒருவர் அணிந்த பின் மற்ற வர்கள் மாற்றி அணியும் போது தண்ணீருக்குள் குறைந்தது 3 1/2 மணி நேரமாவது ஊறவிட வேண்டும். மற்ற ரத்தின உபயோகத்திற்கும் ஸ்படிக மாலை உபயோகத்திற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. ஸ்படிகத்தைத் தவிர மற்ற அனைத்து ரத் தினங்களையும் இரவில் அணியலாம். ஆனால் ஸ்படிகத்தைக் கண்டிப்பாக இரவில் அணியக்கூடாது. காரணம், அது உப ரத்தின வகையைச் சார்ந்தது மட்டுமல்ல. தானாகத் தன் அதிர்வுகளை வெளியேற்றும் சக்தி ஸ்படிகத்திற்குக் கிடையாது என்பதும்தான். காலையில் இருந்து இரவு வரை ஒருவர் ஸ்படிக மாலை அணியும் போது அவரது உடற்சூட்டை இந்த ஸ்படிகம் தன்வசம் இழுத்துக் கொள்ளும். காலையில் ஒருவர் ஸ்படிகத்தை அணியும் முன் அது குளிர்ச்சியாகவும் இரவில் அதை கழட்டும்போது உஷ்ணமாக இருப்பதைக் கொண்டு இதை நீங்கள் உணரலாம்.

இந்த ஸ்படிக மாலையை இரவில் கழற்றித் தரையில் வைக்க வேண்டும். அப்போது பூமியின் ஈர்ப்பு சக்தியினால் மறுபடியும் ஈர்ப்புப் பெறும். தினமும் இதைச் செய்ய வேண்டும். அந்த தரு ணத்தில் உங்கள் மன, உடல் அழுத்தம் குறை வதை நீங்கள் உணரலாம். எத்தனை நாட்க ளுக்கு அணிந்தாலும் அதன் சக்தி குறையவே குறையாது.

ஸ்படிகத்தை நேரடியாகவோ, வெள்ளி அல்லது தங்கத்துடன் இணைத்தோ அணியலாம். வீட்டிற்கு ஒரு ஸ்படிகமாலை இருந்தாலே போதும். அதிக உஷ்ணம் உள்ள குழந்தைகள் ஸ்படிகத்தை அரைஞாணில் அணியலாம். இவ்வளவு அற்புத மான ஸ்படிகத்தை மற்றவர்களுக்குப் பரிசாகவும் கொடுக்கலாம். ஸ்படிக விநாயகர், சிவலிங்கம் போன்றவற்றை நமது பூஜை அறையில் வைத்து பூஜிக்கும் போது ஈர்ப்பு சக்தி நன்றாக இருக்கும். வாரம் இருமுறையாவது அபிஷேகம் செய்யும் போது அதன் சக்தி அப்படியே இருக்கும்.

ஸ்படிகத்தில் மிகச் சக்தி வாய்ந்தது, மகா மேரு. இந்த மேரு ஸ்படிகத்தை வாங்கும்போது வெடிப்பு, உடைப்பு இல்லாமல் உள்ளதா என்று சுத்தமாகப் பார்த்த பின் வாங்க வேண்டும். மகா மெகருவை வெள்ளி அல்லது தாமிரத் தட்டிலோ வைத்து பூஜை அறையில் வைக்க வேண்டும்.

இவ்வளவு அற்புதங்கள் அடங்கிய ஸ்படிகத்தை அனைவரும் உபயோகித்துப் பயன் அடைவீர்களாக.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

கசப்பான உண்மைகள்!!


கசப்பான உண்மைகள்!!
1.அத்தியாவசிய தேவையான
அரிசியின் விலை கிலோ 30
லிருந்து 40 ரூபாய். ஆனால்
சிம்கார்டு இலவசமாகக்
கிடைக்கிறது..!!
2.பொது வினியோகத்தில்
விற்கப்படும் அரிசியின்
விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால்
பொதுக்கழிப்பறையின் கட்டணம்
மூன்று ரூபாய்..!!
3.வங்கிகளில் வாகனக்
கடன்களுக்கான வட்டி 5 சதவிகிதம்.
ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12
சதவிகிதம்..!!
4.Pizza வீட்டிற்கு வந்து சேரும்
வேகத்தில், பாதியளவு வேகத்தில்
கூட அதாவது பாதி நேரத்தில் கூட
அம்புலன்சும்,
தீயணைப்பு வாகனங்களும்
வந்து சேர்வதில்லை..!!
5.ஒரு கிரிகெட்
குழுவையே கோடிக்கணக்கான
பணத்தைக்
கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய
செல்வந்தர்கள் இருக்கிறார்கள்.
அதே பணத்தில் பத்தில்
ஒரு பங்கைக்கூட
நாட்டு நலப்பணிகளுக்குச்
செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள்
மட்டும் இல்லை..!!
6. அணியும் ஆடைகளும்,
காலணிகளும் குளிரூட்டப்பட்ட
கடைகளில் விற்கப்படுகின்றன.
ஆனால் உண்ணும் காய்கறிகளும்,
பழங்களும் நடைபாதை கடைகளில்
விற்கப்படுகின்றன..!!
7. குடிக்கும் Lemon Juice,Orange
juice…etc இவையெல்லாம்
செயற்கையான இரசாயனப்பொருட்க
ளால் தயாரிக்கப்படுகின்றன.
பாத்திரம் கழுவ உதவும் நீர்க்
கலவை இயற்கையான எழுமிச்சையில்
(லெமனில்) தயாரிக்கப்படுவதாக
சொல்லப்படுகிறது..!!
8.மொத்தமாகப் பள்ளிகளையும்,
கல்லூரிகளையும் நடத்த வேண்டிய
அரசு, வீதிக்கு வீதி சாராயம்
விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம்
விற்றுக்கொண்டிருந்த பலர்
இன்று கல்லூரிகளை வைத்து வியாபாரம்
நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
9.கோதுமைக்கு வரியில்லை.
அது விளைபொருள்.
கோதுமையை மாவாகத் திரித்தால்
வரியுண்டு.
கோதுமை மாவை சப்பாத்தியாக
செய்து விற்றால் வரியில்லை…அதே
மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச்
செய்து விற்றால் வரி உண்டு..!!
10.பிரபலமாக வேண்டும் என்ற
அபிலாசைகள் அனைவருக்கும்
உண்டு. ஆனால்
பிரபலமாவதற்கு உரிய உண்மையான
வழியில் செல்ல மட்டும்
ஒருவருக்கும் விருப்பம் இல்லை..!!!
11.குழந்தைத்
தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும்
என்போம். ஆனால் தேநீர்க்கடைகளில்
வேலை பார்க்கும் சிறுவர்கள்
கொண்டு வந்து கொடுக்கும்
டீயை மட்டும் சுவாரசியமாக
உறிஞ்சிக்குடிப்போம்…!!



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

Memo From God


I am God.
Today I will be handling all of
your problems.

Please remember that I do not
need your help.

If life happens to deliver a
situation to you that you cannot handle, do not attempt to resolve it.
Kindly put it in the SFGTD
(something for God to do) box.

All situations will be resolved,
but in My time, not yours.

Once the matter is placed into
the box, do not hold onto it by worrying about it.
Instead, focus on all the
wonderful things that are present in your life now.

If you find yourself stuck in
traffic; Don’t despair.
There are people in this world
for whom driving is an unheard of privilege.

9copy_zpse1ff27e0.jpg

Should you have a bad day at
work;
Think of the man who has been
out of work for years.

3copy_zps940b74ec.jpg

Should you despair over a
relationship gone bad;
Think of the person who has
never known what it’s like to love and be loved in return.

7copy_zps03a51ff4.jpg

Should you grieve the passing of
another weekend;
Think of the woman in dire
straits, working twelve hours a day, seven days a week to feed her
children.

6copy_zpse6b97668.jpg

Should your car break down,
leaving you miles away from assistance;
Think of the paraplegic who
would love the opportunity to take that walk.

2copy_zpsd612b280.jpg

Should you notice a new gray
hair in the mirror;
Think of the cancer patient in
chemo who wishes she had hair to examine.

5copy_zpse7342678.jpg

Should you find yourself at a
loss and pondering what is life all about, asking what is my purpose?
Be thankful. There are those who
didn’t live long enough to get the opportunity.

4copy_zpsad46b678.jpg

Should you find yourself the
victim of other people’s bitterness, ignorance, smallness or
insecurities;
Remember, things could be worse.
You could be one of them!

1copy_zpsd1b72297.jpg

Should you decide to send this
to a friend;
Thank you, you may have touched
their life in ways you will never know!

8copy_zps5581be2f.jpg
b_zps0f1b78f3.png

AAP should learn before teaching…


AAP should learn before teaching…

Subject: Gujarat visit

Dear Mr. Kejariwal,

I am a former student of IIT KHARAGPUR from where you have graduated & was actively involved in Janlokpal andolan 2 years back. I WAS your supporter/fan till last week before your Gujarat visit.
Since last year I am serving in Govt. of Gujarat. After listening to your speech today in Bangalore, I feel some points I must share for those who haven’t visited Gujarat state yet.

1. I haven’t paid a single penny for class II job in Govt of Gujarat.

2. I get paid on 1st day of every month.

3. I am posted in rural and tribal area where there are no power cuts. Believe me NEVER.

4. I have travelled almost all the states of the country and have never found roads as good as those in Gujarat anywhere else.

5. You said ‘no development in Gujarat’. Then Mr. Kejariwal, how were you tweeting from the rural areas of Gujarat during your visit ?
I always experienced better wi-fi speeds in rural area (Waghai) of Gujarat than in Pune city.

When you had your chance you ran away, now you are criticising others. Mr. Kejariwal, I, being Aam Aadmi, your former supporter and student of IIT Kharagpur honestly feel that you should ‘first prove yourself & then talk about others’.

Regards,
Prof. Vipul Shinde
Assistant Professor
Navsari Agricultural University, Guajarat.
Sent from Indira’s Google Nexus



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

தமிழ் வளர்த்த பிராமணர்கள்


தமிழ் வளர்த்த பிராமணர்கள்

பிராமணர்கள் தமிழர்களே கிடையாது, தமிழுக்கும் அவர்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல பலர் பேசுகிறார்கள் ஆனால் தமிழ் வளர்த்த பிராமணர்கள் பற்றி கொஞ்சமேனும் நினைவு கொள்வது நம் வரலாற்றறிவுக்கு நல்லதல்லவா!
சங்ககாலம்

1. அகஸ்தியர்
2. தொல்காப்பியர் (காப்பியக்குடி என்னும் கபிகோத்திரத்தார்)
3. ஜயன் ஆரிதனார் (ஹரித கோத்திரத்தார்)
4. கபிலர்
5. கள்ளில் ஆத்திரையனார் (ஆத்ரேய கோத்திரத்தார்)
6. கோதமனார்
7. பாலைக் கெளதமனார்
8. ஆமூர்க் கெளதமன் சாதேவனார் (கெளதம கோத்திரம்)
9. பிரமனார்
10. மதுரை இளங்கண்ணிக் கெளசிகனார் (கெளசிக கோத்திரம்)
11. மதுரைக் கெளணியன் பூதத்தனார் (கெளண்டின்ய கோத்திரம்)
12. மாமூலனார்
13. மதுரைக் கணக்காயனார்
14. நக்கீரனார்
15. மார்க்கண்டேயனார்
16. வான்மீகனார்
17. கடியலூர் உருத்திரங் கண்ணனார் (பட்டினப்பாலை)
18. வேம்பற்றூர்க் குமரனார்
19. தாமப் பல்கண்ணனார்
20. குமட்டுர்க் கண்ணனார்

இடைக்காலம்

21. மாணிக்கவாசகர்
22. திருஞானசம்பந்தர்
23. சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்
24. பெரியாழ்வார்
25. ஆண்டாள்
26. தொண்டரடிப்பொடியாழ்வார்
27. மதுரகவி
28. நச்சினார்க்கினியர் (பாரத்துவாசி)
29. பரிமேலழகர்
30. வில்லிபுத்தூரார்
31. அருணகிரிநாதர்
32. பிள்ளைப் பெருமாளையங்கார்
33. சிவாக்ரயோகி
34. காளமேகப் புலவர்

பிற்காலம்

35. பெருமாளையர்
36. வீரை ஆசுகவி (செளந்தர்யலகரி மொழி பெயர்த்தவர்)
37. வேம்பற்றூரார் (பழைய திரவிளையாடலாசிரியர்)
38. நாராயண தீக்ஷிதர் (மகரநெடுங்குழைக்காதர் பாமாலை)
39. கோபாலகிருஷ்ண பாரதியார்
40. கனம் கிருஷ்ணையர்
41. அரியலூர்ச் சடகோப ஐயங்கார்
42. கஸ்தூரி ஐங்கார் (கார்குடி)
43. சண்பகமன்னார்
44. திருவேங்கட பாரதி (பாரதி தீபம் நி கண்டு)
45. வையை இராமசாமி சிவன் (பெரியபுராணக் கீர்த்தனைகள்)
46. மகாமகோபாத்தியாய டாக்டர் சாமிநாதையர்
47. சுப்ரமண்ய பாரதியார்
48. பரிதிமாற் கலைஞர் (வி.கோ.சூ)
49. சுப்பராமையர் (பதம்)
50. முத்துசாமி ஐயங்கார் (சந்திரா லோகம்)
51. ரா.ராகவையங்கார்
52. பகழிக் கூத்தார்
53. வென்றிமாலைக் கவிராயர்
54. வேம்பத்தூர் பிச்சுவையர்
55. கல்போது பிச்சுவையர்
56. நவநீதகிருஷ்ண பாரதியார்
57. அனந்தகிருஷ்ணஐயங்கார்
58. திரு, நாராயணசாமிஐயர்
59. மு.ராகவையங்கார்
60. திரு. நா.அப்பணையங்கார்
61. வசிஷ்டபாரதி (அந்தகர்)
62. கவிராஜ பண்டித கனகராஜையர்
63. பின்னத்தூர் அ.நாராயணசாமிஐயர்
64. ம.கோபலகிருஷ்ணையர்
65. இவை.அனந்தராமையர்
66. நா.சேதுராமையர் (குசேல வெண்பா)
67. கோவிந்தையர் (மாணிக்கவாசகர் வெண்பா)
68. வ.வே.சு.ஐயர்
69. கி.வா.ஜகந்நாதையர்
70. அ.ஸ்ரீநிவாசராகவன்
71. ஸ்வாமி சாதுராம்
72. திராவிடகவிமணி வே.முத்துசாமி ஐயர். —

Hinduism's photo.
Hinduism's photo.
Hinduism's photo.
Hinduism's photo.





परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

Free Medicine for Blood Cancer in Chennai India, share with all


Medicine for Blood Cancer has been found!!!! Please don’t delete this without forwarding.
I am forwarding it to the maximum I can.Let it reach the 110 crores Indians and the remaining if any.
‘Imitinef Mercilet’ is a medicine which cures blood cancer. Its available free of cost at "Adyar Cancer Institute in Chennai".
Create Awareness. It might help someone.Forward to as many as u can, kindness costs nothing.
Cancer Institute in Adyar, Chennai
Category:Cancer
Address:East Canal Bank Road , Gandhi Nagar,Adyar,Chennai -600020
Landmark: Near Michael School
Phone: 044-24910754 044-24910754 , 044-24911526 044-24911526 , 044-22350241 044-22350241


परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

மனம் ஒரு குரங்கு!


மனம் ஒரு குரங்கு!

இளைஞன் ஒருவனுக்கு சரியான வேலை கிடைக்கவில்லை.

கல்யாண முயற்சியும் இழுபறியாகவே நீண்டது.

வாழ்க்கை போராட்டமாக இருந்தது.

ஒரு ஞானியைச் சந்தித்து முறையிட்டான்.

ஞானி அவனிடம்,""அதோ! அங்கிருக்கும் மரத்திற்கு தண்ணீர் ஊற்று” என்றார். அவனும் சரியென்று அதை ஆர்வமுடன் செய்தான்.

""இந்த குப்பை கூளத்தைச் சுத்தமாக்கு” மவுனமாக வேலையில் ஈடுபட்டான்.

""அந்த வேலியைச் சரியாகக் கட்டு” என அடுத்தடுத்து வேலைகளைச் சொல்லிக் கொண்டே இருந்தார்.

ஆத்திரம் முட்டிக் கொண்டு வந்தது.

இருந்தாலும், பொறுமை காத்தான்.

மதியநேரம் வந்தது.

அவர் கொடுத்த உணவை சாப்பிட்டான்.

மீண்டும் வேலை தொடர்ந்தது. பொழுது சாய்ந்து விட்டது.

இரவு உணவை முடித்து விட்டு, களைப்பின் மிகுதியால் தூங்கி விட்டான்.

காலை விடிந்தது. கீழ் வானில் சூரியன் புறப்பட்டது.

இளைஞன் கேட்டான்.

""குருவே! இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?” என்றான்.

ஞானி புன்சிரிப்புடன்,"" பயனுள்ள வேலை ஏதாவது ஒன்றைச் செய்தபடி இரு!

பிடித்தது, பிடிக்காதது என்று பார்க்காதே!

உழைக்க வேண்டிய வாலிப வயதில் ஒரு மனிதன் சும்மா இருக்கலாமா?

மனம் ஒரு குரங்கு!

அதை அடக்க உழைப்பில் ஈடுபடுவது தான் ஒரே வழி,” என்றார்.

இளைஞன் தெளிந்த மனதுடன் புறப்பட்டான்.

thanks to dinamalar

மனம் ஒரு குரங்கு! இளைஞன் ஒருவனுக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. கல்யாண முயற்சியும் இழுபறியாகவே நீண்டது. வாழ்க்கை போராட்டமாக இருந்தது. ஒரு ஞானியைச் சந்தித்து முறையிட்டான். ஞானி அவனிடம்,""அதோ! அங்கிருக்கும் மரத்திற்கு தண்ணீர் ஊற்று'' என்றார். அவனும் சரியென்று அதை ஆர்வமுடன் செய்தான். ""இந்த குப்பை கூளத்தைச் சுத்தமாக்கு'' மவுனமாக வேலையில் ஈடுபட்டான். ""அந்த வேலியைச் சரியாகக் கட்டு'' என அடுத்தடுத்து வேலைகளைச் சொல்லிக் கொண்டே இருந்தார். ஆத்திரம் முட்டிக் கொண்டு வந்தது. இருந்தாலும், பொறுமை காத்தான். மதியநேரம் வந்தது. அவர் கொடுத்த உணவை சாப்பிட்டான். மீண்டும் வேலை தொடர்ந்தது. பொழுது சாய்ந்து விட்டது. இரவு உணவை முடித்து விட்டு, களைப்பின் மிகுதியால் தூங்கி விட்டான். காலை விடிந்தது. கீழ் வானில் சூரியன் புறப்பட்டது. இளைஞன் கேட்டான். ""குருவே! இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?'' என்றான். ஞானி புன்சிரிப்புடன்,"" பயனுள்ள வேலை ஏதாவது ஒன்றைச் செய்தபடி இரு! பிடித்தது, பிடிக்காதது என்று பார்க்காதே! உழைக்க வேண்டிய வாலிப வயதில் ஒரு மனிதன் சும்மா இருக்கலாமா? மனம் ஒரு குரங்கு! அதை அடக்க உழைப்பில் ஈடுபடுவது தான் ஒரே வழி,'' என்றார். இளைஞன் தெளிந்த மனதுடன் புறப்பட்டான். thanks to dinamalar



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

“இசைத் தூண்கள் “!


"இசைத் தூண்கள் "!

உலக அதிசயப்பட்டியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் அதிசயமான "

இந்த இசைத்தூண்களானது ஒரு நீளமான பாறையை வெட்டி எடுத்து, அதிலிருந்து ஏழு தனித்தனி சிறிய தூண்களாக வடித்துள்ளனர், இந்த ஒவ்வொரு சிறிய தூண்களை தட்டினால் " சப்தஸ்வரங்கலான " " ச,ரி,க,ம,ப,த,நி " என்ற தனித்தனி ராகங்களை அது இசைக்கின்றது ! சில பெரிய தூண்களை சுற்றி இடம் பெற்றுள்ள சிறிய தூண்களில் ஐம்பத்திமூன்று தனித்தனி ராகங்களை இசைக்கின்றது .இதில் பெரிய தூணில் கர்நாட சங்கீதமும்., அதை சுற்றியுள்ள சிறிய தூண்களில் " மிருதங்கம், கடம், சலங்கை, வீணை, மணி " போன்ற இசைக்கருவிகளின், இசையை தருகின்றது .

அப்படி என்றால் ஒவ்வொரு கல்லையும் ஒவ்வொரு பதத்திற்கு இழைத்திருந்தால் தான் இப்படி இது வேறு வேறு ஒலிகளில் இசைக்கும். இதை தட்டுவதால் நம் விரல்களுக்கு எந்த வலியும் ஏற்படுவதில்லை, உண்மையான இசை ஞானம் உள்ளவர்கள் இதை தட்டினால் இசைக்கருவியில் இருந்து வரும் இசையை விட மிக துல்லியமாக இது இசைக்கின்றது.சரி இது எதற்காக பயன்பட்டது ? அந்தக்காலத்தில் இருந்த இசைக்கலைஞ்சர்கள் இதை கோயில் விழாக்களின் போது, ஒரு இசைக்கருவியை கூட பயன்படுத்தாமல், இந்த தூண்களை வைத்தே இசைத்துள்ளனர். இது போன்றவை உலகில் எந்த இடத்திலும் இல்லை என்பது நமக்கு இன்னும் சிறப்பை சேர்க்கின்றது .

இந்த இசைத்தூண்களை "மிடறு" என்று அழைத்தார்கள். இது எப்படி வேலை செய்கின்றது ? ஒவ்வொரு தூண்களில் இருந்து வரும் சப்தமும், ஒவ்வெரு விதமான " அலைக்கற்றையை " உருவாக்குகின்றது . எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் இது எப்படி சாத்தியமானது?

இந்திரா காந்தி அணுஆராய்ச்சி விஞ்ஞானி ( கல்பாக்கம் ) திரு."அனிஷ் குமார் " என்பவரும் அவருடன் பணிபுரியும் சிலரும் இதில் ஒளிந்துள்ள " இயற்பியல்" அதிசயத்தை முதன்முதலாக தூண் வாரியாக ஆராய்ந்தனர், தூண்களின் வடிவமைப்பு மற்றும் இந்த தூண்களில் இருந்து எழும் ஒலியை பதிவுசெய்து அளவிடுவது. "In situ metallography " (used to find out in-service degradation of critical components of process plants operating under high temperature/ high pressure/ corrosive atmosphere) ( ஒரு பொருளின் நுண்ணிய வடிவமைப்பு மற்றும் நுண்ணிய ஓசையை அளக்கும் முறை ) என்ற புதிய தொழில் நுட்பத்தைக்கொண்டு ஆராய்ந்ததில் இந்த தூண்களானது " தன்மைக்கேற்ப மாறும் ஒரு நிலையான அதிசய திடப்பொருள் " என தெரிய வந்தது. " spectral analysis "என்ற ஆராய்ச்சிப்படி இந்த தூண்களில் வரும் இசையானது " தன்மைக்கேற்ப இசைந்து கொடுக்கும் அலைக்கற்றயினால் " சப்தம் உருவாவதாக தெரிவிக்கின்றது. சப்தம் உருவாவதே ஒரு அதிசயாமான விஷயம் என்பது ஒரு புறம் இருக்க, இது எப்படி ஒரு விரலால் தட்டினாலே இசை எழுகின்றது ?

நினைவில் கொள்ளுங்கள் நாம் சுத்தியலை கொண்டு அடிக்கப்போவதில்லை, இதற்கு தேவை வெறும் ஒரே ஒரு விரல். இசை என்பது காற்றை உள்வாங்கி ஒலியாய் வெளிப்படும் ஒரு முறை. ஆனால், இந்தத் தூண்களுக்குள் காற்று உள்ளே நுழைந்து இசையை உருவாக்குவதற்கென ஒரு சிறு துவாரதைக்கூட உருவாக்கவில்லை.

இதைப்பற்றின ஆராய்ச்சிக்கு இந்த " இசைத்தூண்கள் " ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வெறும் ஆச்சர்யத்தை மட்டுமே பதிலாய் தந்து கொண்டிருக்கின்றது. அடுத்த ஜென்மம் என்ற ஒன்று இருக்கின்றதா என தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் மனிதர்களாக பிறப்போமா என தெரியவில்லை? அதுவும் குறிப்பாக இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த தமிழ்நாட்டில் பிறப்போமா என்பது தெரியாதது. ஆகையால் தாமதப்படுத்தாமல் இதுபோன்ற இடங்களுக்கு சென்று நம் முன்னோர் செய்த அதிசயங்களை கண்டு களியுங்கள், இது போன்ற நம் பெருமைகளை உலகறிய செய்யுங்கள். இப்படிப்பட்டவர்கள் வழியில் வந்த நாம் புதிதாக எதுவும் உருவாகவில்லை என்றாலும் அவர்கள் தந்த மொழியையும், கலாச்சாரத்தயுமாவது கட்டிக்காப்போம்.

படத்தில் உள்ளது நெல்லையப்பர் கோவிலின் இசை தூண். ஆனால் இதை போன்ற இசை தூண்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ஆழ்வார் திருநகரி பெருமாள் கோவில், சுசீந்திரம் கோவில் போன்ற பல தமிழக மற்றும் தென் இந்திய கோவில்களில் காணலாம்.

"இசைத் தூண்கள் "! உலக அதிசயப்பட்டியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் அதிசயமான " இந்த இசைத்தூண்களானது ஒரு நீளமான பாறையை வெட்டி எடுத்து, அதிலிருந்து ஏழு தனித்தனி சிறிய தூண்களாக வடித்துள்ளனர், இந்த ஒவ்வொரு சிறிய தூண்களை தட்டினால் " சப்தஸ்வரங்கலான " " ச,ரி,க,ம,ப,த,நி " என்ற தனித்தனி ராகங்களை அது இசைக்கின்றது ! சில பெரிய தூண்களை சுற்றி இடம் பெற்றுள்ள சிறிய தூண்களில் ஐம்பத்திமூன்று தனித்தனி ராகங்களை இசைக்கின்றது .இதில் பெரிய தூணில் கர்நாட சங்கீதமும்., அதை சுற்றியுள்ள சிறிய தூண்களில் " மிருதங்கம், கடம், சலங்கை, வீணை, மணி " போன்ற இசைக்கருவிகளின், இசையை தருகின்றது . அப்படி என்றால் ஒவ்வொரு கல்லையும் ஒவ்வொரு பதத்திற்கு இழைத்திருந்தால் தான் இப்படி இது வேறு வேறு ஒலிகளில் இசைக்கும். இதை தட்டுவதால் நம் விரல்களுக்கு எந்த வலியும் ஏற்படுவதில்லை, உண்மையான இசை ஞானம் உள்ளவர்கள் இதை தட்டினால் இசைக்கருவியில் இருந்து வரும் இசையை விட மிக துல்லியமாக இது இசைக்கின்றது.சரி இது எதற்காக பயன்பட்டது ? அந்தக்காலத்தில் இருந்த இசைக்கலைஞ்சர்கள் இதை கோயில் விழாக்களின் போது, ஒரு இசைக்கருவியை கூட பயன்படுத்தாமல், இந்த தூண்களை வைத்தே இசைத்துள்ளனர். இது போன்றவை உலகில் எந்த இடத்திலும் இல்லை என்பது நமக்கு இன்னும் சிறப்பை சேர்க்கின்றது . இந்த இசைத்தூண்களை "மிடறு" என்று அழைத்தார்கள். இது எப்படி வேலை செய்கின்றது ? ஒவ்வொரு தூண்களில் இருந்து வரும் சப்தமும், ஒவ்வெரு விதமான " அலைக்கற்றையை " உருவாக்குகின்றது . எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் இது எப்படி சாத்தியமானது? இந்திரா காந்தி அணுஆராய்ச்சி விஞ்ஞானி ( கல்பாக்கம் ) திரு."அனிஷ் குமார் " என்பவரும் அவருடன் பணிபுரியும் சிலரும் இதில் ஒளிந்துள்ள " இயற்பியல்" அதிசயத்தை முதன்முதலாக தூண் வாரியாக ஆராய்ந்தனர், தூண்களின் வடிவமைப்பு மற்றும் இந்த தூண்களில் இருந்து எழும் ஒலியை பதிவுசெய்து அளவிடுவது. "In situ metallography " (used to find out in-service degradation of critical components of process plants operating under high temperature/ high pressure/ corrosive atmosphere) ( ஒரு பொருளின் நுண்ணிய வடிவமைப்பு மற்றும் நுண்ணிய ஓசையை அளக்கும் முறை ) என்ற புதிய தொழில் நுட்பத்தைக்கொண்டு ஆராய்ந்ததில் இந்த தூண்களானது " தன்மைக்கேற்ப மாறும் ஒரு நிலையான அதிசய திடப்பொருள் " என தெரிய வந்தது. " spectral analysis "என்ற ஆராய்ச்சிப்படி இந்த தூண்களில் வரும் இசையானது " தன்மைக்கேற்ப இசைந்து கொடுக்கும் அலைக்கற்றயினால் " சப்தம் உருவாவதாக தெரிவிக்கின்றது. சப்தம் உருவாவதே ஒரு அதிசயாமான விஷயம் என்பது ஒரு புறம் இருக்க, இது எப்படி ஒரு விரலால் தட்டினாலே இசை எழுகின்றது ? நினைவில் கொள்ளுங்கள் நாம் சுத்தியலை கொண்டு அடிக்கப்போவதில்லை, இதற்கு தேவை வெறும் ஒரே ஒரு விரல். இசை என்பது காற்றை உள்வாங்கி ஒலியாய் வெளிப்படும் ஒரு முறை. ஆனால், இந்தத் தூண்களுக்குள் காற்று உள்ளே நுழைந்து இசையை உருவாக்குவதற்கென ஒரு சிறு துவாரதைக்கூட உருவாக்கவில்லை. இதைப்பற்றின ஆராய்ச்சிக்கு இந்த " இசைத்தூண்கள் " ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வெறும் ஆச்சர்யத்தை மட்டுமே பதிலாய் தந்து கொண்டிருக்கின்றது. அடுத்த ஜென்மம் என்ற ஒன்று இருக்கின்றதா என தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் மனிதர்களாக பிறப்போமா என தெரியவில்லை? அதுவும் குறிப்பாக இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த தமிழ்நாட்டில் பிறப்போமா என்பது தெரியாதது. ஆகையால் தாமதப்படுத்தாமல் இதுபோன்ற இடங்களுக்கு சென்று நம் முன்னோர் செய்த அதிசயங்களை கண்டு களியுங்கள், இது போன்ற நம் பெருமைகளை உலகறிய செய்யுங்கள். இப்படிப்பட்டவர்கள் வழியில் வந்த நாம் புதிதாக எதுவும் உருவாகவில்லை என்றாலும் அவர்கள் தந்த மொழியையும், கலாச்சாரத்தயுமாவது கட்டிக்காப்போம். படத்தில் உள்ளது நெல்லையப்பர் கோவிலின் இசை தூண். ஆனால் இதை போன்ற இசை தூண்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ஆழ்வார் திருநகரி பெருமாள் கோவில், சுசீந்திரம் கோவில் போன்ற பல தமிழக மற்றும் தென் இந்திய கோவில்களில் காணலாம்.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

உடம்பினால் நல்ல காரியம் செய்யவேண்டும்.




1. உடம்பினால் நல்ல காரியம் செய்யவேண்டும். கோயிலுக்குப் போய் பிரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்ய வேண்டும். தண்டம் சமர்ப்பித்தல் என்று சமஸ்காரத்தைச் சொல்லுவார்கள். தடியைப்போல் விழுவது தான் அது. இந்த உடம்பு நமதன்று, அவருடையது என்று நினைத்து அவர் சந்நிதியில் போட்டு விட வேண்டும்.

2. இந்த ஜென்மத்திற்குப் பின்பும் உபயோகப்படக் கூடிய சில காரியங்கள் செய்யப்பட வேண்டியது அவசியம். விபூதி இட்டுக் கொள்ளுதல், ருத்ராக்ஷம் அணிதல், ச்ராத்தம் செய்தல் முதலிய காரியங்கள் நாம் எப்பொழுதும் சௌக்யமாக இருப்பதற்கு உதவுங்காரியங்கள்.

3. நாமாவும் ரூபமும் இல்லாத மதம் நமது மதம். பேர் ஏன் இல்லை? அடையாளம் ஏன் இல்லை? மற்ற மதங்களுக்கெல்லாம் இருக்கிறதே என்று ஒரு சமயம் யோசித்துப் பார்த்தேன். அப்புறம் எனக்கு நிரம்ப சந்தோஷமாக இருந்தது. பேரில்லாமல் இருப்பது ஒரு கௌரவம் என்பது ஏற்பட்டது.

4. நம்முடைய மதம் எவ்வளவோ யுகங்களாக நீடித்து வாழ்ந்து வருகிறது. நமக்குத் தெரியாமல் ஏதோ ஒன்று இதைத் தாங்கிக் கொண்டிருக்கிறது. எவ்வளவோ வித்யாசங்கள் இருந்தாலும் இந்த மதம் அழியாமல் நிற்கிறது. லோகம் புரண்டு போனாலும் நம்முடைய கடமைகளைச் செய்து கொண்டு பயமின்றி அன்புடன் சாமாண்ய தர்மங்களை நன்றாக ரக்ஷித்து விசேஷதர்மத்தைக் கூடியவரை ரக்ஷிக்க வேண்டும். அதற்குரிய சக்தியைப் பகவான் அளிப்பாராக.

5. மூன்று மூர்த்திகளுக்கும் மேலே அதீதராகப் பரமசிவன் இருக்கிறார். அவர் ப்ரம்மாவுக்கு அனுக்ரஹம் பண்ணுகிறார். காமேச்வரனாக அருள் புரிகிறார். பராசக்தி காமேச்வரியாக அனுக்ரஹிப்பாள். பரமேச்வரனுடைய அனுக்ரஹத்தால் ப்ரம்மா வேதங்களை அறிந்து கொள்கிறார். நான்கு வேதங்களையும் நான்கு முகத்தில் சொல்லிக் கொண்டு சிருஷ்டியைச் செய்து கொண்டிருக்கிறார்.

6. வேதத்திலிருப்பதை எல்லோருக்கும் நன்றாக விளங்க வைப்பது பதினெட்டு புராணங்கள். பதினெட்டு உப புராணங்கள் வேறே இருக்கின்றன. பதினெட்டு புராணங்களும் சேர்ந்து நான்கு லட்சம் கிரந்தம். ஒரு கிரந்தம் என்பது 32 எழுத்துக்ள் கொண்டது. பதினெழு புராணங்கள் மூன்று லட்சம் கொண்டவை மிகுதியுள்ள ஒரு லட்ச கிரந்தம் ஸ்காந்த புராணம். பரமசிவனைப் பற்றிச் சொல்பவை பத்து புராணங்கள், அவைகளுள் ஒன்றே லட்சம் கிரந்தம் உடையது.

7. பாபத்தை ஒரேக்ஷணத்தில் துவம்சம் பண்ணும் ஒரு வஸ்து உண்டு. இரண்டு எழுத்துக்களாலான பெயர் அது. வேதங்களின் ஜீவரத்னம் அதுவே. கோயிலில் மஹாலிங்கம் போலவும் தேகத்தில் உயிர் போலவும் அது வேதங்களின் மத்தியில் இருக்கிறது. (சிவ என்ற இரண்டு எழுத்துக்களே அது) அதை ஒருதரம் சொன்னால் போதும். வேறு ஒரு காரியத்துக்கு நடுவிலும் சொல்லலாம். சொன்னால் அந்த க்ஷணத்திலேயே பாபத்தைப் போக்கிவிடும்.

– மஹா பெரியவா

1. உடம்பினால் நல்ல காரியம் செய்யவேண்டும். கோயிலுக்குப் போய் பிரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்ய வேண்டும். தண்டம் சமர்ப்பித்தல் என்று சமஸ்காரத்தைச் சொல்லுவார்கள். தடியைப்போல் விழுவது தான் அது. இந்த உடம்பு நமதன்று, அவருடையது என்று நினைத்து அவர் சந்நிதியில் போட்டு விட வேண்டும். 2. இந்த ஜென்மத்திற்குப் பின்பும் உபயோகப்படக் கூடிய சில காரியங்கள் செய்யப்பட வேண்டியது அவசியம். விபூதி இட்டுக் கொள்ளுதல், ருத்ராக்ஷம் அணிதல், ச்ராத்தம் செய்தல் முதலிய காரியங்கள் நாம் எப்பொழுதும் சௌக்யமாக இருப்பதற்கு உதவுங்காரியங்கள். 3. நாமாவும் ரூபமும் இல்லாத மதம் நமது மதம். பேர் ஏன் இல்லை? அடையாளம் ஏன் இல்லை? மற்ற மதங்களுக்கெல்லாம் இருக்கிறதே என்று ஒரு சமயம் யோசித்துப் பார்த்தேன். அப்புறம் எனக்கு நிரம்ப சந்தோஷமாக இருந்தது. பேரில்லாமல் இருப்பது ஒரு கௌரவம் என்பது ஏற்பட்டது. 4. நம்முடைய மதம் எவ்வளவோ யுகங்களாக நீடித்து வாழ்ந்து வருகிறது. நமக்குத் தெரியாமல் ஏதோ ஒன்று இதைத் தாங்கிக் கொண்டிருக்கிறது. எவ்வளவோ வித்யாசங்கள் இருந்தாலும் இந்த மதம் அழியாமல் நிற்கிறது. லோகம் புரண்டு போனாலும் நம்முடைய கடமைகளைச் செய்து கொண்டு பயமின்றி அன்புடன் சாமாண்ய தர்மங்களை நன்றாக ரக்ஷித்து விசேஷதர்மத்தைக் கூடியவரை ரக்ஷிக்க வேண்டும். அதற்குரிய சக்தியைப் பகவான் அளிப்பாராக. 5. மூன்று மூர்த்திகளுக்கும் மேலே அதீதராகப் பரமசிவன் இருக்கிறார். அவர் ப்ரம்மாவுக்கு அனுக்ரஹம் பண்ணுகிறார். காமேச்வரனாக அருள் புரிகிறார். பராசக்தி காமேச்வரியாக அனுக்ரஹிப்பாள். பரமேச்வரனுடைய அனுக்ரஹத்தால் ப்ரம்மா வேதங்களை அறிந்து கொள்கிறார். நான்கு வேதங்களையும் நான்கு முகத்தில் சொல்லிக் கொண்டு சிருஷ்டியைச் செய்து கொண்டிருக்கிறார். 6. வேதத்திலிருப்பதை எல்லோருக்கும் நன்றாக விளங்க வைப்பது பதினெட்டு புராணங்கள். பதினெட்டு உப புராணங்கள் வேறே இருக்கின்றன. பதினெட்டு புராணங்களும் சேர்ந்து நான்கு லட்சம் கிரந்தம். ஒரு கிரந்தம் என்பது 32 எழுத்துக்ள் கொண்டது. பதினெழு புராணங்கள் மூன்று லட்சம் கொண்டவை மிகுதியுள்ள ஒரு லட்ச கிரந்தம் ஸ்காந்த புராணம். பரமசிவனைப் பற்றிச் சொல்பவை பத்து புராணங்கள், அவைகளுள் ஒன்றே லட்சம் கிரந்தம் உடையது. 7. பாபத்தை ஒரேக்ஷணத்தில் துவம்சம் பண்ணும் ஒரு வஸ்து உண்டு. இரண்டு எழுத்துக்களாலான பெயர் அது. வேதங்களின் ஜீவரத்னம் அதுவே. கோயிலில் மஹாலிங்கம் போலவும் தேகத்தில் உயிர் போலவும் அது வேதங்களின் மத்தியில் இருக்கிறது. (சிவ என்ற இரண்டு எழுத்துக்களே அது) அதை ஒருதரம் சொன்னால் போதும். வேறு ஒரு காரியத்துக்கு நடுவிலும் சொல்லலாம். சொன்னால் அந்த க்ஷணத்திலேயே பாபத்தைப் போக்கிவிடும். - மஹா பெரியவா

परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

HOW TO TURN AROUND YOUR LOSING BUSINESS TO SUCCESS TIPS FROM THE GREATS




To be successful in business it can often take a great product and a lot of hard work. But sometimes, more than anything else, a shrewd manoeuvre can be the difference between failure and making it big. This article was co-authored by Charlie Hilton and Eoghan Burke.


1. The Rarely Told Story Behind Richard Branson And Virgin Atlantic

Search anywhere for the year Virgin airlines was founded and you’ll find 1984, the year Richard Branson leased a single Boeing aircraft and started selling flight tickets in his record shops. But Branson’s inspiration for owning his own airline actually came five years earlier, as he explained at the at the 4th Madhavrao Scindia Memorial Lecture last year:

“In ’79, when Joan, my fiancee and I were on a holiday in the British Virgin Islands, we were trying to catch a flight to Puerto Rico; but the local Puerto Rican scheduled flight was cancelled. The airport terminal was full of stranded passengers. I made a few calls to charter companies and agreed to charter a plane for $2000 to Puerto Rico. Cheekily leaving out Joan’s and my name, I divided the price by the remaining number of passengers, borrowed a blackboard and wrote: VIRGIN AIRWAYS: $39 for a single flight to Puerto Rico. I walked around the airport terminal and soon filled every seat on the charter plane. As we landed at Puerto Rico, a passenger turned to me and said: “Virgin Airways isn’t too bad – smarten up the services a little and you could be in business.”

When Virgin Atlantic was officially launched five years later, all thirteen of his major US competitors predicted it would fail within a year. Twenty one years on, each of them is now out of business and Branson’s net worth is estimated at $4.6 billion.

Richard Branson with his business partner Sir Freddie Laker Richard Branson with his business partner Sir Freddie Laker

2. IBM Comes Back From The Brink With Operation Bearhug

This story of IBM’s amazing come back is taken from a Quora post by Arjun Subramaniam.

“In the early 1990s, IBM was in a deep crisis. For the first time in its history, employees were being laid off by the thousand and revenue had collapsed like nobody’s business (Pun intended)

In a last-gasp attempt to save the company, new CEO Lou Gerstner launched “Operation Bear Hug.” 50 managers from IBM were sent around the world to meet with at least 5 customers each in person – A rather surprising display of empathy from one of the least emotionally demonstrative companies in the Fortune 500.

IBM proved that a faceless corporation could be empathetic and understanding

The goal of the managers was not to market IBM products – Instead, they were to listen to consumer concerns and see how IBM could help. That “empathic” connection to real-world customers helped the managers see matters from a consumer’s point of view.

Gerstner’s style of leadership and his dogged attention to the consumer and their needs eventually brought a new and less arrogant face to the company. By his second year, IBM was back on track, setting off a decade of unprecedented earnings growth and double-digit revenue. This clever maneouver ultimately helped IBM become the leading technologically giant that we know it as today.”

3. Peyton Manning Invests In The Future Of Pizza In Colorado Two Weeks Before The State Legalizes Marijuana. Coincidence? I Think Not!

It was either a timely coincidence or a stroke of genius from NFL legend Payton Manning. Just two weeks prior to the passing of Amendment 64 which legalised marijuana use in Colorado, the Denver Bronos quarterback purchased 21 Papa Johns franchises in the state.

Sales across the branches have reportedly skyrocketed since the takeover, making it a very shrewd investment indeed. Whether it’s Manning’s fame or the munchies that’s been drawing in the crowds we may never know…

4. George Soros Breaks The Bank Of England And Makes £1 Billion While He’s At It

In September 1992, one of the most successful magnates in the world, George Soros, went head-to-head with the Bank of England in what would later be called Black Wednesday. At the time Soros was the currency man and was carefully monitoring the BoE as they attempted to keep the British Pound exchange rate high.

The BoE was buying pounds in order to maintain their projected exchange rate, but they had a diminishing amount of buying power and the predators were beginning to circle.

George Soros was banking on the idea that he could short sell more of his British Pounds than the Bank of England would end up being able to acquire. When Soros made his move, other currency traders followed suit and sold in Pounds by the truckload. Soros ended up making a personal profit of approximately £1 billion.

The event lead to the Pound dropping over 20% in a few weeks and George Soros being crowned “The man that broke the Bank of England.”

5. Nike Takes A Gamble On An Unproven NBA Rookie Called Michael Jordan In 1984, Nike’s business fate took a drastic turn – one so drastic that it saved the company from its first ever loss. Their tactic wasn’t to save the ship from sinking by offloading dead weight. Instead, they channelled all of their marketing budget into one man: Michael Jordan.

The unproven rookie with enormous talent proved to be Nike’s saving grace. He would go on to become the most successful basketball player of all time, and the Air Jordan range that ensued is now one of the most recognised training brands in history. The company currently enjoys yearly revenues close to $25 billion.

This story was taken from a Quora post by David Fry

6. Dow Chemicals Create A Blueprint For Dealing With Predatory Price Cutting

“Herbert Dow founded Dow Chemical in Midland, Michigan when he invented a way to produce bromine cheaply. He sold the chemical for industrial purposes all over the US for 36 cents per pound at the turn of the 20th century. He couldn’t expand overseas, however, because the international market was controlled by a giant German chemical cartel that sold at a fixed price of 49 cents per pound. It was understood that the Germans would stay out of the US market so long as Dow and the other American suppliers stayed within their own borders.

Soon Dow’s business was in trouble and he had to expand. He took his bromine to England, easily beating the cartel’s fixed price of 49 cents per pound.

But Dow outsmarted them. He stopped selling in the US market entirely and instead arranged for someone to secretly start buying up all the German bromine he could get his hands on. Dow repackaged it as his own product, shipped it to Europe, and made it widely available (even in Germany) at 27 cents per pound.Shortly thereafter, German bromine started appearing for sale in the US for 15 cents per pound, way below Dow’s price. The cartel flooded the US market, offering the chemical way below their own costs, intending to drive Dow out of business.

The cartel lowered its price to 12 cents and then 10 cents and Dow just kept buying more and more, gaining huge market share in Europe. Finally the Germans caught on and had to lower their prices at home, But it was too late.

Dow had broken the German chemical monopoly and expanded his business greatly. And customers got a wider range of places to buy bromine at lower prices.

This strategy is now the textbook way to deal with predatory price cutting.”

7. Henry Fords $5 Day

Henry Ford is one of those guys that went against the grain, with extraordinary ingenuity, to bring about incredible results from a strategy that was widely expected to fail.

Other industrialists and businessmen called Ford a socialist, seeing him as toxic to the capitalist system they so adored. The public, however, fell the other way. He was labelled a hero, a man that was fighting for the welfare of the working people – a slice of genius that made him a viable candidate for US presidency. He even dropped the working day from 9 hours to 8 hours for good measure.At the beginning of 1914, the worker wage at Ford Motors was set at $2.34 per day, which was standard for the time. He made the brash and seemingly foolish decision to more than double the wage, pushing it up to $5 per day.

The positive public feeling towards Ford crept into the media. The PR that the company received from the decision meant that the spending on wages were being recouped in profits, and then some.

Henry Ford’s idea was to ensure that his workers could actually buy Ford cars. Profits increased 200% in two years to reach $60 million dollars per year.

A highly motivated and prosperous workforce helped Ford completely outstrip their competitor’s productivity. 13,000 workers were churning out 260,000 cars per year, while the rest of the industry comprised of 66,000 workers who produced 280,000 in the same amount of time.

8. Mucinex Eliminates All Competitors in One Go

Memegenerator Memegenerator

When Mucinex (an over-the-counter cold medicine brand) was launched, it entered the market with immense force and quickly came to dominate all competitors. This was all due to their exploitation of a cunning legal loophole.

The drug was administered in a 600mg dose with a 12-hour release period that followed. Mucinex wanted their product to be sold as non-prescription for wider sales potential. (N.B. The law prohibits and non-prescription product to be sold as a prescription product if it has the same dosage and release time).

So, Muxinex applied and gained approval from the Food & Drug Administration to sell its product as a non-prescription…

“In other words, once Mucinex–which owned the patents for all non-prescription drugs of its kind–gained FDA approval, its competitors’ prescription products were deemed illegal. The FDA issued warning letters to 66 manufacturers, distributors, marketers, and retailers that sold the drug as a prescription product and eventually ordered them to cease production altogether.”


Thanks and regards

परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

RURAL LIFE OF INDIA – The Wax Museum of India. Location – Siddhagiri Museum , Kolhapur …


RURAL LIFE OF INDIA Do you think only London and Paris have Wax Museums……..Look at this Amazing statues capturing village life in India …Beat this!!Location – Siddhagiri Museum , Kolhapur … it’s on the outskirts of Kolhapur ( Maharashtra ), on the way to Belgaum

..worth a visit….all statues are made out of wax.

Regards,



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

An ATM for Food, in Chennai


An ATM for Food, in Chennai

One just needs to key in some commands & swipe a card to get food from Atchayam Foodbox

SANGEETHA KANDAVEL & SANJAY VIJAYAKUMAR
CHENNAI

It could be a scene straight out of science fiction: a young lady and her daughter walk up to a machine, key in a few commands on the touch screen, swipe a card and lo, their food arrives on a conveyor belt. Only just that this did not take place in some megalopolis of the future, but in Chennai’s Koyambedu bus stand, where the machine competes with several eateries at the terminus and roadside food vendors to win over the customer’s palate.
The makers of Atchayam Foodbox, as the machine is called, claim that it is a first-of-itskind concept in food retail sector and insist it’s not a vending machine.
“This is like an ATM where you withdraw cash by yourself,” says Satish Chamy Velumani, a first generation entrepreneur from Coimbatore who is also the founder and CEO. “Some people say it’s a vending machine but it’s a lot more than a vending machine. I call it an ‘intelligent restaurant’.”
The Foodbox serves everything from snacks to complete meals from popular restaurants in the city. These include Adyar Ananda Bhavan, Aasife and Brothers Biriyani, Moti Mahal, Amaravathi, Kaaraikudi and Mr Chows. Many more are likely to join soon, says Velumani.
The food is packed and brought from the restaurants in boxes and stored in a climate-controlled environment. When a customer chooses a particular dish, it is heated and served in 90 seconds.
Restaurants like the model because it increases sales without too much investment. “Their packaging technology is superior. Also, we have restrictions in terms of having outlets in places such as railway stations and bus stands. This box can be set up easily,” says KT Srinivasa Raja, managing director of Adyar Ananda Bhavan. “For us, it saves the cost on establishing retail outlets. Once they reach scale, I see a big scope for their service.” Currently there are only two Foodboxes — one at the DLF IT Park and the second at the private bus terminus at Koyambedu. The company plans to open six more by 2015 across South India and then will take it to other parts of the country.
This venture is funded by mostly friends and family as well as an investor. “The investor is based out of the US but 80% of money came from them (friends and family),” said Ramesh Narayan, co-founder and chief financial officer of Atchayam Foodbox, who is a chartered accountant. “We are working with fund advisors to go for more funding.” The entire box can hold 225 food packs. Sales at Koyambedu is currently 70-80 packs per day and at DLF IT Park it’s anywhere between 200 and 300. There is also an online monitoring system that tracks when the food is packed and sends alerts when the stocks are low. It also automatically stops selling any food item that is beyond its expiry time.
“We did a six-month due diligence on food testing. The food remains good for eight hours but we have programmed the machine only for six as we are very conscious about the quality,” says Velumani. Atchayam is now keen to patent the technology in India and aboard.
“We have applied for the patent. There are vending machines, but what this does, none of the vending machines can do,” says Velumani. The Foodbox was designed at Synetics Automation, Coimbatore, but the software was put together by the company’s chief technology officer Rajasekaran Mathuram.
Customers like it because of the choice the Foodbox offers as well as the ease of use.
“There is an assurance that the food remains fresh. Since it’s packed, I know it’s clean and no flies would have messed with the food,” says Ramanathan Ramachandran, who works at IBM in DLF IT Park, Chennai. “Checking availability is also easy. I can click a button and check whether what I want is on the menu or not.”
Narayan said pricing of food items is more or less the same as the restaurants. “We also give combo deals. You will spend less as an individual but yes the quantity would differ,” he says. “We want to cater to each locality provide their local and regional food fresh and fast.” Customers can pay through cash or cards. “We have repeat customers at DLF (IT park),” says CTO Mathuram. “So, we have cash cards where people can load money and use,” Mathuram adds.

Pc0111100.jpg



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE