அபிராமி அந்தாதி


அபிராமி அந்தாதி

*********************************தினமும் அபிராமி அந்தாதியை பாராயணம் செய்து அபிராமி அம்மனை நினைத்து வழிபட்டால், வாழ்வில் அல்லல்கள் மறைந்து நல்லவை எல்லாம் உதித்தெழும்.அனைத்தும் வசமாக***********************கருத்தன, எந்தை தன் கண்ணன், வண்ணக் கனகவெற்பில்பெருத்தன, பால்அழும் பிள்ளைக்கு நல்கின, பேரருள்கூர்திருத்தன பாரமும் ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்முருத்தனமூரலும், நீயும், அம்மே! வந்துஎன்முன் நிற்கவே.பொருள்: அன்னையே! என் தந்தையாம் சிவ பிரானின் சிந்தையில் நீங்காது நிற்பனவும், திருவிழிகளில் காட்சி தருவனவும், அழகிய பொன் மலையாம் மேருவைப் போன்று பருத்த னவும், அழுத பிள்ளையான ஞானசம்பந்தப் பெருமானுக்குப் பாலூட்டியதுமான திருத்தன ங்களும், அவற்றின்மேல் புரளும் முத்துமாலை யும், சிவந்த திருக்கரத்திலுள்ள கரும்பு வில், மலர் அம்புகள் ஆகியனவும், மயிலிறகின் அடி ப்பாகம் போன்ற அழகிய புன்னகையும் காட்டி, உன் முழுமையான திருக்கோலக் காட்சியை எனக்குக் காட்டியருள்க.மோட்ச சாதனம் பெற************************நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் நினைப்பது உன்னை;என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்; எழுதாமறையின்ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே இமயத்துஅன்றும் பிறந்தவளே! அழியா முத்தி ஆனந்தமே!பொருள்: எழுதாமல் கேட்கப்படுவது மட்டுமான வேதத்தில் பொருந்தக் கூடிய அரும் பொருளா யும், சிவபிரானின் திருவருள் வடிவமாயும் விளங்கும் உமையன்னையே! நான் நின்றவா றும், இருந்தவாறும் படுத்தவாறும், நடந்தவா றும், தியானம் செய்வதும் உன்னைத்தான்; என்றென்றும் மறவாமல் வழிபடுவதும் உன்னு டைய திருவடித் தாமரையையேதான்.இல்வாழ்க்கையில் இன்பம் பெற************************************ஆனந்தமாய் என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,வான் அந்தமான வடிவுடையாள், மறை நான்கினுக்கும்தான் அந்தமான சரணார விந்தம் தவளநிறக்கானம் தம் ஆடரங்கம் எம்பிரான் முடிக்கண்ணியதே.பொருள்: ஆனந்த உருவமாகி, என் அறிவாகி, நிறைவான அமுதமும் போன்றவளாகி, வானம் இறுதியாயுள்ள பஞ்சபூதங்களுக்கும் முடிவாக நிற்கும் தேவியின் திருவடித் தாமரை, நான்கு வேதங்களுக்கும் எல்லையாய் நிற்பது, வெண்ணிறச் சாம்பல் படர்ந்த மயானத்தைத் தாம் ஆடல் நிகழ்த்தும் இடமாகக் கொண்ட சிவபெருமானின் திருமுடியில் அணியப்பட்ட மாலையாயும் திகழ்கிறது.தியானத்தில் நிலைபெற****************************கண்ணியது உன்புகழ் கற்பது உன்; நாமம் கசிந்து பத்திபண்ணியது உன் இருபாதாம் புயத்தில்; பகல் இரவாநண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து; நான் முன்செய்தபுண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே.பொருள்: என் அன்னையே! உலகங்கள் ஏழை யும் பெற்ற தாயே! நான் அல்லும் பகலும் கருது வதெல்லாம் உன் புகழ்; கற்பதெல்லாம் உன் திருநாமம். எந்நேரமும் உள்ளமுருகப் பிரார்த் திப்பது உன் இரு திருவடித் தாமரைகளைத் தான். நான் கலந்து கொண்டு உன்னை வணங்குவதெல்லாம், உன்னை மெய்யாக விரும்பித் தொழும் அடியவர்களின் கூட்டத்தில் தான். இவ்வளவுக்கும் காரணமாக நான் முற் பிறவிகளில் செய்த புண்ணியம்தான் ஏதோ அறியேன்.வைராக்கிய நிலை எய்த****************************பூத்தவளே புவனம் பதினான்கையும்; பூத்தவண்ணம்காத்தவளே பின்கரந்தவளே! கறைக் கண்டனுக்குமூத்தவளே! என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே!மாத்தவளே உன்னை அன்றிமற்றோர் தெய்வம் வந்திப்பதே!பொருள்: ஈரெழுலகங்களையும் திருவருளால் ஈன்றதுடன், பாதுகாப்பவளும், சம்காரம் செய்ப வளுமான தாயே! நஞ்சினைக் கண்டத்தில் கொண்ட நீலகண்டப் பெருமானுக்கு முன் பிறந்தவளே! என்றுமே மூப்பறியாத திருமாலி ன் தங்கையே! பெருந்தவத்தை உடையவளே! நான் உன்னையே தெய்வாமாக ஏற்று வழிபடு வதை தவிர இன்னொரு தெய்வத்தை வழிபட என்னால் இயலுமோ?தலைமை பெற*****************வந்திப்பவர் உன்னை வானவர், தானவர், ஆனவர்கள்;சிந்திப்பவர் நல் திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே;பந்திப்பவர் அழியாப் பரமானந்தர்; பாரில் உன்னைச்சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண் ஒளியே.பொருள்: எம் தலைவியான அபிராமி அன்னை யே! தேவர்கள், அசுரர்கள் ஆகிய இருவகையி னரும் உன்னை வழிபடுகிறார்கள். பிரம்ம தேவரும் திருமாலும் உன்னை எண்ணித் தியானம் செய்கின்றனர். மேலான ஆனந்த வடிவினரான சிவபெருமானோ, தம் உள்ளத்தி னுள்ளே உன்னை அன்பினால் கட்டிவைப்பவ ர், இவ்வாறெல்லாம் இருப்பதால், உலகில் உன்னைத் தரிசிப்பவர்களுக்கு உன்குளிர்ச்சி மிக்க திருவருள் தரிசனம் தரிசிப்பவர்களுக்கு அது மிக எளிதாக இருக்கிறது.பெருஞ்செல்வமும் பேரின்பமும் பெற*****************************************தண்ணளிக்கு என்றுமுன்னே பலகோடிதவங்கள் செய்வார்மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார்? மதிவானவர் தம்விண்ணளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடுமன்றோ?பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே.பொருள்: அழகிய பண்ணைப் போன்று இனிய மொழிகளைப் பேசும் நறுமணங் கமழும் திரு மேனியையுடைய யாமளையாகிய பசுங்கிளி யே! உன் பேரருளைப் பெற வேண்டுமென முற் பிறவிகளில் பலகோடி தவங்களைச் செய்தவர் கள், இவ்வுலகைக் காக்கும் அரசபோகத்தை மட்டுந்தானா பெறுவர்? யாவரும் மதிக்கும் தே வர்களுக்கேயுரிய வானுலகை ஆளும் அரிய செல்வத்தையும் என்றும் அழிவற்ற மோட்சம் என்னும் வீட்டையும் அன்றோ பெற்று மகிழ்வர்?அபிராமி தாயே திருவடி சரணம்….

நேசமுடன் விஜயராகவன்…..

Published by

harikrishnamurthy

a happy go lucky person by nature,committed to serve others and remove their sufferings through all possible help. POSTS IN MY BLOG ARE MY OWN OPINION, COLLECTIONS OF INTERESTING ARTICLES FROM FROM VARIOUS SOURCES. MY ONLY AIM IS TO SHARE GOOD THINGS WITH OTHERS WHICH MAY BE USEFUL TO OTHERS AND NOT TO HURT ANY ONE'S FEELINGS. If you like my blog, like me,follow me, share with others, reblog If you have some suggestions post comments your suggestions and comments are eagerly awaited

Leave a comment