ஸ்ரீ ஆஞ்சநேயர் ஸ்ரீ ஹனுமன் ஜெயந்தி…அனுமன் ‘சிரஞ்சீவி’ என்ற பட்டத்தைக் கொண்ட எழு பேரில் ஒருவர். ஆஞ்சநேயன்”, (அஞ்சனாவின் மகன் ), ”கேசரி நந்தனா” (கேசரியின் மகன்), ”வாயுபுத்திரா” அல்லது ”பவன் புத்திரா” (வாயுதேவனின் மகன்) என அழைக்கப்படுகிறார். காதால் கேட்க கிளிக் பண்ணுங்கமாருதியை பார்க்க…Subscribe பண்ணுங்க…
.https://www.youtube.com/channel/UC_c45MUAXulFSkgI6gvJ9ig
சமஸ்கிருதத்தில் “ஹனு” என்பதற்கும் “தாடையும்”, “மன்” என்பதற்கு “பெரிதானது” என்பதால், “ஹனுமன்” என்பதற்கு பெரிய தாடையை உடையவன் என ஒரு பெயர்காரணம் உண்டு. “ஹன்” என்பதற்கு “கொன்றவன்”, “மானம்” என்பதற்கு “தற்பெருமை” என்பதல், “ஹன்மான்”, என்பதற்கு தற்பெருமையைக் கொன்றவன் என ஒரு பெயர்காரணம் உண்டு ஆஞ்நேயரின் தாயார் அஞ்சனாதேவிமுற்பிறவியில் பிரம்மாவின் சபையில் ஆடல் அழகியாக இருந்தார். ஒரு நாள் ஒரு முனிவர் குரங்கு போல தனது உடலை மாற்றிஆசனமிட்டுஅமர்ந்து தவத்தில் இருந்தார். குரங்கை பழங்களால் அஞ்சனாதேவிஅடித்து விளையாடினார்.கண் விழித்து முனிவராய் எழுந்து “நீ யார் மீதாவது காதல் கொண்டால், அந்த தருணமே குரங்காக மாறிவிடுவாய்” என சாபமிட்டார். தான் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்டு மன்றாடினாள் அஞ்சனாதேவி. தனக்கு குரங்கு முகம் இருந்தாலும், தன் காதலன் தன்னை நேசிக்க வேண்டும் என்றும், சிவப்பெருமானின் அம்சமே தனக்கு மகனாக பிறக்கவேண்டும் என்றும் வரம் வேண்டினாள். மனமிரங்கிய முனிவரும் அப்படியே ஆகட்டும். சிவபெருமானின் அம்சமாக மகன் பிறந்தவுடன் உனக்கு சாப விமோசனம் கிடைக்கும் என அருள்பாலித்தார். முனிவரின் சாபத்தின் பலனால், பூமியில் பிறந்து, ஒரு காட்டில் வசித்து வந்தாள். ஒருநாள் காட்டில் ஒரு அழகிய ஆடவனை கண்டு, அவன் அழகில் மயங்கி, அவன் மேல் காதல் கொண்டாள். காதல் கொண்ட அந்த தருணமே அவள் குரங்காக மாறிவிட்டாள். அவள் அருகில் வந்த அந்த ஆண், தன்னை ”கேசரி” என்றும், தான் ”குரங்குகளின் அரசன்” என்றும் கூறினான். குரங்கு தலையை கொண்ட மனிதனான அவனால் நினைத்த நேரத்தில் மனிதனாகவும், குரங்காகவும் உருமாற முடியும் என கூறினார். அந்த காட்டிலேயே ”அஞ்சனாதேவி”யும் ”கேசரி”யும் கந்தர்வ முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு சிவப்பெருமானை நினைத்து தவத்தில் இருந்தாள் அஞ்சனாதேவி. ஓர் நாள் சிவபெருமான் ராம ராமஎன ஜெபத்தில் இருக்கும் போதுஅங்கு வந்த பார்வதி தேவிஎன்ன தங்கள் நாமம் உயர்வானதாகஇருக்கும் போது ராம ராம என ஜெபிக்கிறீர்களே என கேட்டார். ஸ்ரீ மகாவிஷ்ணு பூமியில் ராமனாகஅவதாரம் செய்ய இருக்கிறார்.அவரின் இந்த நாமமே இனி அனைத்தைவிட புகழ் பெரும் என சொன்னார் ஈசன். ஸ்ரீ ராமருக்கு உதவி புரிய எனது ருத்ர ரூபத்தை பூமியில் பிறக்க வைக்க போகிறேன் என்றார். அதனை கேட்ட பார்வதி தாயார் தானும் அந்த அவதாரத்தில் இருக்க விரும்பி சிவபெருமானிடம் விண்ணப்பிக்க, முன்னொரு காலத்தில் ராவணன் நந்தியை மதிக்காமல் குரங்கு முகம் என பழித்தான். அதனால் கோபம் கொண்ட நந்தி ஒரு குரங்கால் உன் ராஜ்ஜியம் முழுவதும் அழியும் என்று சாபம் கொடுத்தார். அந்த சாபம் பலிக்கவும், ராமனுக்கு தாசனாக இருக்கவும் தோதாக வானர ரூபம் எடுக்க முடிவு செய்தார் ஈசன். உலகன்னை வானரத்தின் வாலாக நான் இருப்பேன் என சொன்னவுடன்சரியென சொன்னார் சிவபெருமான். தனக்கு நல்ல குழந்தைகள் கிடைக்க வேண்டும் எனதசரதச் சக்கரவர்த்தி புத்ர காமேஷ்டி யாகம் செய்தார். இதனால், மனம் குளிர்ந்த அக்னிதேவன், தசரதனிடம் புனிதமான பாயாசத்தை கொடுத்து இதனை சரி சமமாக உன்னுடைய தேவியருக்கு பங்கிட்டு கொடுக்க சொன்னார். தசரதனும் தன்னுடைய பட்டத்து ராணியான, கெளசல்யா ( கோசலை)விற்கும், கைகேகிக்கும் இரண்டாகப் பிரித்துக் கொடுத்தார். அவர்கள் இருவரும், தங்களுக்கு அளிக்கப்பட்ட பிரசாதத்தினை சரி பாதியாக பிரித்து, இரண்டு பங்காக சுமித்ராவுக்கு கொடுத்ததினால் அவளுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது . தசரதன் அந்த பிரசாதத்தை தன் மனைவியருக்கு கொடுக்கும் போது, அதில் சிறிதளவு பிரசாதத்தை ஒரு பறவை எடுத்துச் சென்று அஞ்சனாதேவி தவம் புரிந்த இடத்தருகே விட்டு சென்றது. காற்றின் கடவுளான வாயுபகவானிடம் அந்த பிரசாதத்தை அஞ்சனாதேவியின் கைகளில் போடுமாறு சிவபெருமான் கட்டளையிட்டார். பாயாசத்தை பார்த்த அஞ்சனா மிகுந்த சந்தோஷத்துடன் அதனை உண்டாள். அதனை உண்ணும் போது சிவபெருமானின் அருளை அஞ்சனாதேவி உணர்ந்தாள். அதன்பிறகு, குரங்கின் முகத்தை கொண்ட ஒரு மகனைமார்கழி மாத மூல நட்சத்திரத்தில்பெற்றெடுத்தார் அஞ்சனாதேவி. தன் தந்தை கேசரி மற்றும் தாய் அஞ்சனாதேவியின் சக்திகளை அவர் பெற்றார். வாயுதேவனின் மகன் என்பதால் காற்றைப்போல் மிக வேகமாக செயல்பட்டார். அனுமன் தன்னுடைய குழந்தைப் பருவத்திலேயே மிகுந்த பலசாலியாக விளங்கி வந்தார் . சுந்தரன் என்று பெயரிட்டு வளர்த்தாள் தாய். ஒரு நாள் பசிக்கிறது என்று வானத்தில் அப்போது தான் உதிக்கும் சூரியனை பழம் என நினைத்து அதைச் சாப்பிட வானில் தாவினார் மாருதி. தேவர்களின் தலைவனான இந்திரன் அனுமனைத் தடுத்து தனது வஜ்ராயுதத்தால் அவரது முகத்தில் தாக்கினார். அது அனுமனை அவரது தாடையில் தாக்கியது, உடைந்த தாடையுடன் அவர் இறந்து பூமியில் விழுந்து விடுகிறார். இதனால் அவரது தந்தை, வாயு (காற்று), (பிரிவு 4.65 இல் ராமாயணம் கூறுகிறது), வருத்தமடைந்து. காற்றை நிறுத்தி விடுகிறார். காற்று பற்றாக்குறை காரணமாக அனைத்து உயிரினங்களுக்கும் பெரும் துன்பத்தை உருவாக்கியது. அனைவரும் இந்தப் பிரச்சினையை சிவனிடம் கொண்டுச் செல்கின்றனர். அவர் தலையிட்டு அனுமனை உயிர்ப்பிக்க, வாயு மீண்டும் அனைத்து உயிர்களுக்கும் காற்றினை அளித்தார். இந்திரனின் வஜ்ராயுதத்தால் தாக்கப்பட்டதனால் அனுமானின் உடலும் அதைப் போலவே மிகவும் வலிமையாக இருக்கும் என சிவன் வரம் அளித்தார். மீண்டும் அவருக்கு வஜ்ராயுதத்தால் தீங்கு ஏற்படாது என இந்திரன் வரம் அளித்தார். இந்திரனுடன் சேர்ந்து மற்ற தேவர்களான அக்னிதேவனும் அனுமனுக்கு நெருப்பினால் எவ்வித திங்கும் ஏற்படாது எனவும், வருணன் நீரினால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனவும், வாயு காற்றினால் எவ்வித திங்கும் ஏற்படாது எனவும், வரமளித்தனர். மும்மூர்த்திகளின் ஒருவரான பிரம்மா தேவர்,அனுமன் தன்னால் நினைத்த இடத்திற்கு நினைத்த நேரத்தில் செல்லலாம் எனவும் அவரை எவரும் தடுத்து நிறுத்த முடியாது எனவும் வரமளித்தார். விஷ்ணு பகவானோ “கதா” என்னும் ஆயுதத்தை வழங்கினார். மிக மிக குறும்புக்காரராக இருந்தார் பால அனுமன். முனிவர்களின் யாகத்தைக் கலைப்பதும், மரத்தின் மீது ஏறிக் கொண்டு அவர்கள் மீது கல்லை வீசுவதும் என அவரது தொல்லை சகிக்க முடியாமல் போனது. அந்த வனத்தில் இருந்த முனிவர்களுக்கு மாருதியின் அவதார நோக்கம் தெரியும் என்பதால் சிறு சாபம் ஒன்று கொடுத்தனர். அதன்படி பவன குமாரருக்கு தனது பலம் என்ன என்பது தெரியாமல் மறந்து போனது. ஆஞ்நேயரின் கல்விக்கான நேரம் வந்த போது, சூரியனே கல்வியில் மிகச் சிறந்தவர் என்று எல்லாரும் சொல்லக் கேட்டு, அவரையே தனது குருவாக வரித்தார் அனுமன். சூரியனின் சுழற்சி வேகத்துக்கு ஈடு கொடுத்து நடந்தபடியே நால்வகை வேதங்கள், தர்மசாஸ்திரங்கள், புராணங்கள் என எல்லாம் கற்றுத் தேர்ந்தார். அதோடு மட்டுமல்லாமல் வியாகர்ணம் எனப்படும் சமஸ்கிருத இலக்கணத்தை மிக நன்றாகக் கற்று பண்டிதர் எனப் பெயர் பெற்றார். கல்விக்காலம் முடிந்ததும் தனது அவதார நோக்கத்தை அறிந்து கொண்டார். ராமபிரான் வரும் வரையில் காத்திருப்பதுதான் தன் கடமை என உணர்ந்து கொண்டார். அந்த நேரத்தில் சுக்ரீவன் மனைவியையும், நாட்டையும் இழந்து காட்டில் சுற்றிக் கொண்டிருந்தான். அவனது அமைச்சனாக, வழிகாட்டியாக பணியில் அமர்ந்தார் இராமனும் இலக்குவனும் சுக்ரீவனின் இருப்பிடத்திற்கு அருகே வந்த போது, வருவது ஒற்றர்களோ என பயந்த சுக்ரீவன் அனுமனை யார் என பார்த்து வர அனுப்பினார். அனுமன் அந்தண வேடத்தில் இராம இலக்குவனை அடைந்து அவர்கள் யாரென வினவுகிறான். இராமன் தாங்கள் யாரெனக் கூறத் தொடங்கியதுமே, அனுமன் இராமன் காலில் வீழ்ந்து தன்னை அனுமன் என அறிவித்து, கட்டித் தழுவிக் கொள்கிறார். அப்போது தொடங்கும் இராமன் – அனுமன் நட்பினால், அனுமனின் இதயத்தில் சீதாஇராமன் எப்போதும் குடி கொண்டார்.