lost your mobile just read this to get back your mobile- Dial *#06#


10703968_957382924278866_535262649212569975_n.jpg?oh=6c8a58a0e44ca7430d4f18a11aa1afea&oe=54F0D8B7&__gda__=1424939568_f0d50a417de0076426a6a797359fedb6send the IMEI no to cop and your mobile would be traced within 24 hours


परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

சொல்வதை நான் எப்படி நம்பமுடியும்?”


காட்டில் சந்நியாசி ஒருவர் வாழ்ந்துவந்தார். அந்த நாட்டு அரசரை ஒருநாள் அந்த சந்நியாசி அரண்மனையில் சந்தித்தார். அந்த அரசனும் ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடுள்ளவனாக விளங்கினான். இதை அறிந்துகொண்ட சந்நியாசி, மன்னரின் ராஜபோகத்திற்கு ஆன்மீகத் தேடல் ஒத்துவராது என்று அலட்சியமாகப் பேசினார். சுகபோகங்களைத் துறந்து காட்டுக்குத் தன்னுடன் வருமாறு சவாலும் விட்டார் சந்நியாசி.

அரசனும் சம்மதித்து அரண்மனையைத் துறந்து சந்நியாசியின் பின் வந்தார். காட்டில் சிறிது தூரம் சென்றதும் தன் கமண்டலத்தை அரண்மனையிலேயே விட்டுவிட்டு வந்தது ஞாபகத்துக்கு வந்தது.

“அடடா! என் கமண்டலத்தை அரண்மனையிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டேன். வாருங்கள், அரண்மனைக்குப் போகலாம்” என்று அரசனை அழைத்தார் சந்நியாசி. அதற்கு அரசன் மிக்கப் பணிவோடு,“ நான் அரசையே துறந்து உங்கள் பின்னால் வந்துவிட்டேன். நீங்களோ, ஒரு கமண்டலத்துக்காக அரண்மனைக்குப் போகலாம் என்கிறீர்கள். நீங்கள் எல்லாவற்றையும் துறந்துவிட்டீர்கள் என்று சொல்வதை நான் எப்படி நம்பமுடியும்?” என்றார் அரசன்.

சந்நியாசியோ தலைகுனிந்தார்.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

சாப்பாட்டு ராமன்’ பெயர் ஏன்… எதனால்?


10703961_806818839376908_3255815254134320302_n.jpg?oh=d2d0bdc1953f9ef868f8fb65753c0c54&oe=54C4503B&__gda__=1425368295_a2c02f82d7117c1bc5be09c5ff6a60a2

  • Print
  • Email

‘சாப்பாட்டு ராமன்’ பெயர் ஏன்… எதனால்?

Posted Date : 17:11 (15/10/2014)Last updated : 17:30 (15/10/2014)
உணவை நன்கு ரசித்து புசிப்பபவர்களை, சாப்பாட்டில் அதிக நாட்டம்
கொண்டவர்களைச் ‘சரியான சாப்பாட்டு ராமன்’ என்பார்கள் சமூகத்தில்.

‘ராமன் எத்தனை ராமனடி..’ என ராமனுக்கு பல பெயர்களை சூட்டி மகிழந்து போற்றினாலும், அத்தனையிலும் இந்த ‘சாப்பாட்டு ராமன்’ என்கிற பெயர் சற்று வித்தியாசனமானது. அண்ணலுக்கு இந்த பெயர் எப்படி வந்தது?

உபன்யாசர் எம் ஏ.வெங்கட்கிருஷ்ணன் தம் உபநயன நிகழ்ச்சி ஒன்றில் இதன் பின்னணியை சுவைபட இப்படிச் சொன்னார்.

”இலங்கையில் ராவணவதம் முடிந்ததும், சீதை, லட்சுமணர், சுக்ரீவர், விபீஷணர் மற்றும் வானரப்படைகளுடன் அயோத்திக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறார் ராமபிரான். அயோத்திக்கு செல்லும் முன்பாக, பரதவாஜ முனிவரை தரிசிக்க விரும்பினார் ராமர். ஆனால் அயோத்திக்குச் செல்ல நேரம் தாமதமாகிக் கொண்டே இருந்ததால், பரதன் தீமூட்டி அதில் தான் விழுந்துவிடுவதாய் சொன்னதையும் நினைத்துப்பார்த்தார்.

ஆம், 14 ஆண்டுகள் முடிந்த உடனேயே அண்ணன் வராவிட்டால், தான் தீயில் விழுந்து மாண்டுவிடுவதாக முன்னமே பரதன் சொல்லி இருந்தான். பரதன் சொன்னதை செய்யக்கூடியவன் என ராமர் அறிவார். ஆனாலும் பரத்வாஜ முனிவரை தரிசிக்காமல் செல்ல மனமில்லை. விரைந்து அதைமுடித்துச்செல்ல திட்டமிட்டவரை, முனிவர் பரவசமாய் வரவேற்றார்.

"தென்னிலங்கை சென்று ராவணனை வெற்றிகொண்ட ஸ்ரீராமா! என் ஆஸ்ரமத்திற்கு நீ வந்ததில் மிக்க மகிழ்ச்சி. இன்று இரவு இங்கே தங்கிவிட்டு,நாளை இங்கு நடக்கும் ததீயாராதனைக்கு (மதிய உணவு) இருந்து, நன்றாக சாப்பிட்ட பிறகே செல்லவேண்டும்!" என கேட்டுக் கொண்டார்.

ராமரால் முனிவரின் வேண்டுகோளை நிராகரிக்க முடியவில்லை. ஆனால் அதேநேரம் தன் வருகை தாமதமானால் தம்பி உயிர் துறப்பான் என்றும் அஞ்சினார். ஆகவே அனுமனை அழைத்தார்.

”அஞ்சனைகுமாரனே. என் அருமை பக்தனே எனக்காக நீ பரதனிடம் விரைவாகச் சென்று, நான் எல்லோருடனும் வந்துகொண்டிருப்பதை சொல்லிவிட்டு வா. வாயுபுத்திரனான நீ இதை காற்றாய் ஓடிச்சென்று முடித்து உடன் இங்கு வரவேண்டும்” என்றார்.

அண்ணல் சொன்ன சொல்லை நிறைவேற்ற இமைப் பொழுதில் அங்கிருந்து அகன்றான் அனுமன். மறுநாள்… விருந்திற்காக இலையினைப்போட்டார் முனிவர் பெருமான். அனைவரும் அமர்ந்துவிட்டனர் , அனுமன் பரதனை சந்தித்துவிட்டு வந்துவிட்டான். அனுமன் விருந்துக்கு வருவாரென முனிவர் நினைக்கவில்லை.

அனுமனுக்கு இலை எதுவும் காலி இல்லை. ராமன் அன்புடன் அனுமனை தன் இலைக்கு எதிர்ப்புறம் அமரச்சொன்னார். அனுமன் காய் பழங்களைத்தான் உண்பார் என ராமருக்குத்தெரியும். ஆகவே பரிமாறுபவர்களிடம் இலையின் மேல்பக்கத்தில்(அனுமன் அமர்ந்த திசையில் அல்லது அவருக்கு அருகிலிருந்த இடத்தில்) காய் பழங்களை பரிமாறச் சொன்னார். அரிசி சாதம் மற்ற உணவு வகைகளைத் தன் பக்கம் போடச் சொன்னார். இருவரும் ஒரே இலையில் சாப்பிட்டு முடித்தார்கள்.

சாப்பாட்டிற்காக முனிவர் கேட்டுக்கொண்டதற்காக, தன் பயணத்தின் இடையே தங்கி சாப்பாட்டினை முடித்துக்கொண்டதால் ராமர், சாப்பாட்டு ராமன் ஆகிறார். காலபோக்கில் சாப்பாட்டில் விருப்பம் உடையவர்களை இப்படிப் பெயரிட்டு அழைப்பது வழக்கமாகிவிட்டதாம்!

– மைதிலி நாராயணன்,
பெங்களூரு



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

விபத்து நடந்த முப்பது நாட்களுக்குள் இழப ்பீடு?


விபத்து நடந்த முப்பது நாட்களுக்குள் இழப்பீடு?
http://bit.ly/1sRRDGo

சாலை விபத்தில் சிக்குபவர்களுக்கு கோல்டன் ஹவர் என்றழைக்கப்படும் (மருத்துவ பராமரிப்பு) சேவையை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, சாலை விபத்தில் சிக்குபவர்களுக்கு தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிப்பதை தவிர்க்கிறது. இதற்கு முக்கிய காரணம் மருத்துவ செலவுகளை அவர்களால் சமாளிக்க முடியுமா என்பதுதான். மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் மற்றும் வசதிப்படைத்தவர்கள் என பலரும் விபத்தில் சிக்குகிறார்கள்.

ஏழ்மையானவர்களிடம் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி இருப்பதற்கான வாய்ப்பு குறைவு. எனவே ஏழ்மையானவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகள் தயங்குகின்றன..

சிறப்பு பகிர்வை முழுமையாக படிக்க க்ளிக் செய்க..http://bit.ly/1sRRDGo

#accident #insurance

Photo: விபத்து நடந்த முப்பது நாட்களுக்குள் இழப்பீடு? http://bit.ly/1sRRDGo சாலை விபத்தில் சிக்குபவர்களுக்கு கோல்டன் ஹவர் என்றழைக்கப்படும் (மருத்துவ பராமரிப்பு) சேவையை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, சாலை விபத்தில் சிக்குபவர்களுக்கு தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிப்பதை தவிர்க்கிறது. இதற்கு முக்கிய காரணம் மருத்துவ செலவுகளை அவர்களால் சமாளிக்க முடியுமா என்பதுதான். மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் மற்றும் வசதிப்படைத்தவர்கள் என பலரும் விபத்தில் சிக்குகிறார்கள். ஏழ்மையானவர்களிடம் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி இருப்பதற்கான வாய்ப்பு குறைவு. எனவே ஏழ்மையானவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகள் தயங்குகின்றன.. சிறப்பு பகிர்வை முழுமையாக படிக்க க்ளிக் செய்க.. http://bit.ly/1sRRDGo #accident #insurance



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

புகைப்பதை நிறுத்தினால்…COURTESY e VIKATAN


புகைப்பதை நிறுத்தினால்…

20 நிமிடங்களில்…
ரத்த அழுத்தம் இயல்புநிலைக்குத் திரும்புகிறது. ‘பல்ஸ் ரேட்’ இயல்பாகிறது. கை, காலில் அதிகரித்த வெப்பம் இயல்புநிலைக்குத் திரும்புகிறது.

8 மணி நேரத்தில்…
ரத்தத்தில் கார்பன் மோனாக்சைட் அளவு குறைந்து இயல்புநிலைக்குத் திரும்புகிறது. ஆக்சிஜன் அளவு அதிகரிக்கிறது. அல்லது இயல்பு நிலைக்கு வருகிறது.

48 மணி நேரத்தில்…
நரம்பு மண்டலத்தின் கடைக்கோடி முனை மறுவளர்ச்சியடைகிறது. நுகரும் மற்றும் சுவைத் திறன் அதிகரிக்கிறது.

2-12 வாரங்களில்…
மூச்சுவிடும் திறன் மேம்படுகிறது. ரத்த ஓட்டம் மேம்படுகிறது. நடப்பது எளிமையாகிறது.

1-9 மாதங்களில்…
தொடர் இருமல் மற்றும் சைனஸ் பிரச்னை குறைகிறது. மூச்சுத்திணறல் பிரச்னை குறைகிறது. ஒட்டுமொத்த ஆற்றல் மேம்படுகிறது. நுரையீரல் தன்னைத்தானே சுத்தப்படுத்திக்கொள்ளும் திறனும், கிருமிகளை எதிர்க்கும் திறனும் அதிகரிக்கிறது.

1ஆண்டில்…
இதய நோய்க்கான வாய்ப்பு பாதியாகக் குறைகிறது.

5 ஆண்டுகளில்…
பக்கவாதத்துக்கான வாய்ப்பு குறைந்து, புகைபிடிக்காதவர்களுக்கு இணையான நிலைக்குத் திரும்புகிறது. வாய், தொண்டைப் புற்று நோய்க்கான வாய்ப்பு, புகைபிடிப்பவர்களுக்கு உள்ளதைக் காட்டிலும் பாதியாகிறது

10 ஆண்டுகளில்…
வாழும் காலம் புகைப்பழக்கம் இல்லாதவர்களைப் போன்று இயல்பாகிறது. புகைப்பவர்களைக் காட்டிலும் நுரையீரல் புற்றுநோய்க்-கான வாய்ப்பு பாதியாகக் குறை–கிறது. வாய், தொண்டை, சிறுநீர்ப்பை, சிறுநீரகம் மற்றும் கணையம் புற்றுநோய்க்கான வாய்ப்பு குறைகிறது.

15 ஆண்டுகளில்…
இதயத் திசுக்களுக்கு ரத்தம் செல்லும் குழாய்களில் ஏற்படும் நோய்க்கான வாய்ப்பு, புகைபிடிக் காதவர்களுக்கு உள்ள நிலைக்குத் திரும்புகிறது.

#smoking #awareness

Photo: புகைப்பதை நிறுத்தினால்... 20 நிமிடங்களில்... ரத்த அழுத்தம் இயல்புநிலைக்குத் திரும்புகிறது. ‘பல்ஸ் ரேட்’ இயல்பாகிறது. கை, காலில் அதிகரித்த வெப்பம் இயல்புநிலைக்குத் திரும்புகிறது. 8 மணி நேரத்தில்... ரத்தத்தில் கார்பன் மோனாக்சைட் அளவு குறைந்து இயல்புநிலைக்குத் திரும்புகிறது. ஆக்சிஜன் அளவு அதிகரிக்கிறது. அல்லது இயல்பு நிலைக்கு வருகிறது. 48 மணி நேரத்தில்... நரம்பு மண்டலத்தின் கடைக்கோடி முனை மறுவளர்ச்சியடைகிறது. நுகரும் மற்றும் சுவைத் திறன் அதிகரிக்கிறது. 2-12 வாரங்களில்... மூச்சுவிடும் திறன் மேம்படுகிறது. ரத்த ஓட்டம் மேம்படுகிறது. நடப்பது எளிமையாகிறது. 1-9 மாதங்களில்... தொடர் இருமல் மற்றும் சைனஸ் பிரச்னை குறைகிறது. மூச்சுத்திணறல் பிரச்னை குறைகிறது. ஒட்டுமொத்த ஆற்றல் மேம்படுகிறது. நுரையீரல் தன்னைத்தானே சுத்தப்படுத்திக்கொள்ளும் திறனும், கிருமிகளை எதிர்க்கும் திறனும் அதிகரிக்கிறது. 1ஆண்டில்... இதய நோய்க்கான வாய்ப்பு பாதியாகக் குறைகிறது. 5 ஆண்டுகளில்... பக்கவாதத்துக்கான வாய்ப்பு குறைந்து, புகைபிடிக்காதவர்களுக்கு இணையான நிலைக்குத் திரும்புகிறது. வாய், தொண்டைப் புற்று நோய்க்கான வாய்ப்பு, புகைபிடிப்பவர்களுக்கு உள்ளதைக் காட்டிலும் பாதியாகிறது 10 ஆண்டுகளில்... வாழும் காலம் புகைப்பழக்கம் இல்லாதவர்களைப் போன்று இயல்பாகிறது. புகைப்பவர்களைக் காட்டிலும் நுரையீரல் புற்றுநோய்க்-கான வாய்ப்பு பாதியாகக் குறை--கிறது. வாய், தொண்டை, சிறுநீர்ப்பை, சிறுநீரகம் மற்றும் கணையம் புற்றுநோய்க்கான வாய்ப்பு குறைகிறது. 15 ஆண்டுகளில்... இதயத் திசுக்களுக்கு ரத்தம் செல்லும் குழாய்களில் ஏற்படும் நோய்க்கான வாய்ப்பு, புகைபிடிக் காதவர்களுக்கு உள்ள நிலைக்குத் திரும்புகிறது. #smoking #awareness



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினம் இன்ற ு!


வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினம் இன்று!

இந்திய விடுதலைப் போராட்டம் வீரமும் தீரமும் கொண்டது. மகாத்மா காந்தி சத்தியாகிரகம் செய்வதற்கு முன், இந்திய தேசிய ராணுவத்தை நேதாஜி துவங்குவதற்கு முன் வெள்ளையர்களை வெளியேற்ற வேண்டும் என்று போராடியவர்கள் பலர். அதில் முன்னின்று, வியூகம் அமைத்துப் போரிட்டவர்கள் பாளையக்காரர்கள். அந்தப் பாளையக்காரர்களில் முக்கியமானவர் வீரபாண்டிய கட்டபொம்மன். கட்டற்ற காளை போல் பொங்கியெழுந்து, வெள்ளையரோடு நேருக்கு நேர் நின்று, வீரசமர் புரிந்தவன் வீரபாண்டிய கட்டபொம்மன். ஓங்காரம் எழுப்பி வெள்ளையனை மிரளச் செய்தவன். அவரின் நினைவு தினம் இன்று..

veerapandiya kattabomman

Photo: வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினம் இன்று! இந்திய விடுதலைப் போராட்டம் வீரமும் தீரமும் கொண்டது. மகாத்மா காந்தி சத்தியாகிரகம் செய்வதற்கு முன், இந்திய தேசிய ராணுவத்தை நேதாஜி துவங்குவதற்கு முன் வெள்ளையர்களை வெளியேற்ற வேண்டும் என்று போராடியவர்கள் பலர். அதில் முன்னின்று, வியூகம் அமைத்துப் போரிட்டவர்கள் பாளையக்காரர்கள். அந்தப் பாளையக்காரர்களில் முக்கியமானவர் வீரபாண்டிய கட்டபொம்மன். கட்டற்ற காளை போல் பொங்கியெழுந்து, வெள்ளையரோடு நேருக்கு நேர் நின்று, வீரசமர் புரிந்தவன் வீரபாண்டிய கட்டபொம்மன். ஓங்காரம் எழுப்பி வெள்ளையனை மிரளச் செய்தவன். அவரின் நினைவு தினம் இன்று.. veerapandiya kattabomman



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

ஸ்நானம் என்பதை எங்கெங்கு எப்படிச் செய்ய வேண்டும்- ஸ்ரீ ஸ்ரீ மகா பெரியவா


Hinduism's photo.
Hinduism's photo.
Hinduism's photo.

Hinduism

ஸ்நானம் என்பதை எங்கெங்கு எப்படிச் செய்ய வேண்டும்- ஸ்ரீ ஸ்ரீ மகா பெரியவா
ஸ்நானம் என்றால் நதியில் நீராடுவதும் அல்லது பக்கெட்டில் இருந்து எடுத்து உடலில் ஊற்றிக்கொள்வதும் பளிச் சென்று நம் நினைவுக்கு வரும். ஸ்நானம் என்பதை எங்கெங்கு எப்படிச் செய்ய வேண்டும் என்பதை நமது சாஸ்திரங்களில் இருந்து தெளிவாகத் தெரிந்துகொள்ள முடிகின்றது. ஸ்நானங்கள் இரு வகையாகப் பிரிக்கப்படுகின்றன. அவை முக்கிய ஸ்நானம், கௌண ஸ்நானம் ஆகும். க்ரியா ஸ்நானம், காம்ய ஸ்நானம், நைமித்திக ஸ்நானம், க்ரியாங்க ஸ்நானம் மலாபாஹர்ஷண ஸ்நானம், நித்ய ஸ்நானம் ஆகியவை முக்கியமானவை.

க்ரியா ஸ்நானம்: பவித்திரமான புண்ணிய நதிகளில் நீராடுவதுதான் க்ரியா ஸ்நானம். நதிகளில் நீராடும்போது, நதியின் நீரோட்டம் எந்தப் பக்கம் இருக்கின்றதோ, அதற்கு எதிர்முகமாக நின்றுகொண்டு (நீரோட்டத்தை எதிர்த்தாற்போல்) நீரில் நன்கு மூழ்கி ஸ்நானம் செய்ய வேண்டும்.

காம்ய ஸ்நானம்: ஒரு சிலருக்கு பரிகாரத்துக்காக சில ÷க்ஷத்திரத்தில் இருக்கும் குளங்களில் ஸ்நானம் செய்ய நேரிடும். அவ்வாறு குளிக்கும்போது, வேறு எதைப் பற்றியும் கவலைப்படாமல் சூரியனைப் பார்த்து நின்றுகொண்டு குளத்தில் மூழ்கி ஸ்நானம் செய்ய வேண்டும்.

நைமித்திக ஸ்நானம்: சூரிய கிரகணம், சந்திர கிரகணம், துக்கத் தீட்டு, பிரசவத் தீட்டு, க்ஷவரத் தீட்டு, தம்பதியர் சேர்க்கைத் தீட்டு இவற்றுக்காகச் செய்யப்படும் ஸ்நானமே நைமித்திக ஸ்நானம் ஆகும். இந்தத் தீட்டைக் களைய, குளங்களில் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு நீராட நேர்ந்தால், கிழக்கு நோக்கியபடி நின்றுகொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும். அதைத் தவிர, கிணற்றங்கரையிலோ பாத்ரூமிலோ குளிப்பவர்கள், கிழக்கு முகமாகப் பார்த்தவண்ணம் ஸ்நானம் செய்ய வேண்டும்.

க்ரியாங்க ஸ்நானம்: ஹோமம், ஜபம், பித்ருகர்மா முதலியவை செய்வதற்காக நீராடுவதுதான் க்ரியாங்க ஸ்நானம். ஹோமம், ஜபம் முதலியவை செய்வதை முன்னிட்டு, ஸ்நானம் செய்யும்போது கிழக்கு திக்கைப் பார்த்தும், பித்ருகர்மா செய்யும்போது தெற்கு திக்கைப் பார்த்தபடியும் நின்று கொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும்.

மலாபாஹர்ஷண ஸ்நானம்: சரும வியாதிகளைப் போக்கிக் கொள்ள தைலங்கள் தேய்த்துக்கொண்டு குளித்தல் மற்றும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு மலாபாஹர்ஷண ஸ்நானம் என்று பெயர். இந்த ஸ்நானத்துக்கும் கிழக்கு நோக்கித்தான் நீராடவேண்டும். சூரிய உதயத்துக்குப் பின் உச்சிவேளைப் பொழுதுக்கு ஸ்நானம் செய்ய வேண்டும்.

நித்ய ஸ்நானம்: அன்றாடம் உடலிலுள்ள அழுக்கைப் போக்கிக் கொள்வதற்காச் செய்யப்படும் ஸ்நானமே நித்ய ஸ்நானம் எனப்படுகிறது. சாஸ்திரத்தில் தினமும் மூன்று முறை ஸ்நானம் செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது.

கௌண ஸ்நானம்: மேற்கூறிய முக்கிய ஸ்நானங்களுக்குப் பதிலாக, தேக ஆரோக்கியம் காரணமாக சாஸ்திரத்தில் கூறிய முறைப்படி அல்லாமல் மாற்று முறையில் செய்யப்படுவதுதான் கௌணஸ்நானம். உதாரணமாக, தலையில் ஜலம் ஊற்றிக்கொள்ள உடல்நலம் இடம் தராமல் கழுத்தோடு குளிப்பது அல்லது அதுவும் முடியாமல் மஞ்சள் கலந்த நீரை ப்ரோக்ஷித்துக்கொண்டு விபூதியை இட்டுக்கொள்வது போன்றவை முக்கிய விதியைத் தவிர்த்து, கௌண விதியை அனுசரித்து மேற்கொள்ளும் முறையாகும். சாஸ்திர முறைகள் ஒருபக்கம் இருக்க, லௌகீகமாக பஞ்ச ஸ்நானங்கள் என்பதும் உண்டு. அதாவது, பஞ்சபூதங்களின் சக்திகள் நம்மை இயக்குகின்றன என்பதை பஞ்ச ஸ்நானங்களின் மூலம் லோகாயதமாக அறிந்துகொள்ள முடிகிறது.

1. அக்னி சம்பந்தமுடைய பஸ்மத்திலிருந்து விபூதி கிடைப்பதால், விபூதி தரித்துக்கொள்வதை ஆக்நேய ஸ்நானம் என்றும் தேயுவுக்கு சம்பந்தமாகவும் கூறப்படுகிறது.

2. பசுக்கள் செல்லும்போது அவற்றின் குளம்படிகளிலிருந்து கிளம்பும் மண் காற்றின் மூலம் மேலே படுவது சிரேஷ்டமாகக் கூறப்படுகின்றது. அதற்கு வாயவ்ய ஸ்நானம் என்று பெயர். இது, வாயுவின் பெயரால் பெறப்படும் ஸ்நானம்.

3. சாதாரணமாக, வெறுமனே நீரை மட்டும் தேகத்தில் விட்டுக்கொண்டு குளிப்பது வாருண ஸ்நானம் அதாவது, வாருணம்தான் அப்பு என்பது.

4. மந்திரங்கள் யாவும் ஆகாசத்தில் ஒலியாக வியாபித்திருக்கின்றன. பூஜைகளின்போதும் ஹோமங்களின்போதும், ஒரு கலசத்தில் இருக்கும் நீரை மந்திரங்கள் கூறிய படி தர்ப்பையால் புரோகிதர் நம்மேல் தெளிப்பதற்கு ப்ராஹ்ம ஸ்நானம் என்று பெயர். பஞ்சபூதங்களில் ஆகாயத்துக்கானது இது.

5. நடக்கும்போது பசுக்களின் குளம்படி மண்ணானது வாயுதேவனின் உதவியோடு நம்மேல் பட்டாலும், அந்த மண்ணானது (கோ தூளி) ஒருவரைப் புனிதமாக்குவதாகப் கூறப்படுகிறது. மேலும், ரோக நிவாரணத்துக்காக மேனியில் பூசப்படும் புற்றுமண் போன்றவையால் இதை மிருத்திகை ஸ்நானம் என்கிறார்கள். இவை இரண்டுமே ப்ருத்விக்காகக் கூறப்படுகிறது. இவையெல்லாவற்றையும்விட விசேஷமாகவும் ஸ்ரேஷ்டமாகவும் சொல்லப்படுவது திவ்ய ஸ்நானம் என்பது. அதாவது, வெயில் காயும்போதே சில சமயங்களில் மழைத் தூறல்களும் சம்பவிக்கும். அப்போதைய மழைத்துளிகள் தேவலோகத்தில் இருந்துவரும் தீர்த்தத்துக்குச் சமமாகக் கருதப்படுகின்றது. அப்படிப்பட்ட வேளையில் எல்லோரும் அந்தப் புனித நீரில், அதாவது, திவ்ய ஸ்நானத்தில் நனைந்து நம்மைப் புனிதப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று ஸ்ரீ ஸ்ரீ மகா பெரியவா கூறியிருக்கிறார்.

இது பெண்களுக்கு மட்டும்

விசேஷ தினங்களைத் தவிர, மற்ற நாட்களில் பெண்கள் தலைக்குத் தண்ணீர் ஊற்றிக்கொள்ள வேண்டும் என்கிற அவசியமில்லை. மஞ்சள் தண்ணீரை, தலைக்கு புரோக்ஷணம் செய்து கொண்டாலே போதும் என்று சாஸ்திரத்தில் கூறியிருக்கிறது என்கிற தகவலையும் ஸ்ரீ ஸ்ரீ மகா பெரியவா தெரியப்படுத்தியிருக்கிறார். ஸ்நானம் என்பது, உடல் அழுக்கை மட்டும் போக்குவதற்காக மேற்கொள்ளப்படும் சுத்திகரிப்பு எனக் கொள்ளக் கூடாது. ஆன்மாவின் பாவங்களைக் களைவதற்காகவும் மேற்கொள்ளப்படும் சுத்திகரிப்ப என்பதை மனதில் ஆழமாக பதியவைத்துக்கொண்டு நீராட வேண்டும். ஒவ்வொரு முறை ஸ்நானம் செய்யும்பொழுதும்,

கங்கேச யமுநே சைவ கோதாவரீ ஸரஸ்வதீ

நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸந்நிதிம் குரு

என்கிற ஸ்லோகத்தைக் கூறி ஸ்நானம் செய்தால், ஏழு புண்ணிய நதிகளிலும் ஸ்நானம் செய்த பலன் கிட்டும்.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

உடற்பயிற்சி செய்தால் தொப்பை குறையாது ஒரு அதிர்ச்சி செய்தி..!


உடற்பயிற்சி செய்தால் தொப்பை குறையாது ஒரு அதிர்ச்சி செய்தி..!

உடற்பயிற்சி செய்தால் தசைகள் வலுப்பெறும்.ஆனால் தொப்பை குறையுமா? இதைப்பற்றி ஒருவர் புத்தகம் எழுதியதாக படித்தேன்.ஆனால் அப்போது எனக்கு சரியாக புரியவில்லை.ஆளாளுக்கு ஒவ்வொரு கருத்து சொல்லிக் கொண்டிருப்பார்கள்.நாணயத்தின் இருபக்கம் போலத்தான்! இரண்டு வித கருத்துக்களும் இருக்கும்.பலரும் உடற்பயிற்சி தொப்பையை குறைக்கும் என்றே நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
மூட்டை தூக்கும் தொழிலாளிக்கு பெரும் வயிற்றை பார்த்தேன்.வியாதியெல்லாம் இல்லை.சந்தேகமில்லாமல் பெரும் தொப்பைதான்.உடல் உழைப்பு உள்ள பலருக்கும் தொப்பை இருக்கத்தான் செய்கிறது.ஆனால் அந்த தொப்பை கொஞ்சம் உறுதியானது.அலுத்துக் கொள்ளும் பலரை நான் பார்த்திருக்கிறேன்.நானும் காலையில் நடக்கிறேன்,என்னென்னவோ பயிற்சி செய்கிறேன்,ஆனால் தொப்பை அப்படி ஒன்றும் குறையவில்லை என்பார்கள்.
உடற்பயிற்சி செய்தால் நன்றாக பசியெடுக்கும்,அதனால் அதிகம் சாப்பிடுவார்கள்.எனவே எடை குறைப்பது சாத்தியமான ஒன்றல்ல என்று படித்தேன்.உண்மையென்றுதான் தோன்றுகிறது.உடற்பயிற்சி ஜீரண மண்டலத்தை தூண்டி விடுகிறது.இதனால் நன்கு பசித்தால் ஆரோக்கியம் கூடுவதாகவே பொருள்.சந்தேகமில்லாமல் உடற்பயிற்சி நல்ல விளைவுகளை தருகிறது.அரைமணி நேர உடற்பயிற்சி உடல் நலத்திற்கு மட்டுமல்ல மனநலத்திற்கும் நல்லதுதான்.
தொப்பை இதற்கெல்லாம் மசிந்து விடுமா என்ன? உடற்பயிற்சி செய்து ஆயிரம் கலோரி எரித்துவிட்டு இரண்டாயிரம் கலோரி உள்ளே தள்ளினால் வெளியே தள்ளிய வயிறு உள்ளே போகுமா? வாக்கிங்,உடற்பயிற்சி இதையெல்லாம் பலர் கடனுக்கு செய்கிறார்கள் என்றார் ஜிம் வைத்திருக்கும் ஒரு நண்பர்.இன்று மருத்துவர் சொன்னார் என்பதற்காக மட்டுமே செய்கிறார்கள்.
வாயைக்கட்டினால் வயிற்றைக் கட்டலாம் என்று சொல்வார்கள்.பெரும்பாலானவர்களுக்கு இது முடியாமல் போய்விடுகிறது.உணவை உள்ளே தள்ளுவதில் விழிப்புணர்வு இல்லை என்பதே சரி.நாக்கை அடக்கினால் மட்டுமே தொப்பையையும்,பருமனையும் கட்டுப்படுத்த முடியும்.ஆனால் நாக்குக்கு அடிமையானவர்களே அதிகம்.
சில உணவுகள் மீண்டும் மீண்டும் சாப்பிட்த் தூண்டுவதை கவனித்திருக்கிறீர்களா? எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளுக்கு இந்த பண்பு உண்டு.இப்படிப்பட்ட நொறுக்குத்தீனிகள் தொப்பையை வளர்க்கின்றன்.முந்தைய பதிவொன்றில் குறிப்பிட்ட்து போல அரிசி உணவுகளை அதிகம் உண்கிறோம்.நமது மதிய உணவுக்கும் தொப்பைக்கும் அதிக தொடர்பு உள்ளது.
காய்கறிகள்,பழங்கள் போன்றவை திரும்ப திரும்ப சாப்பிடும் ஆர்வத்தை தூண்டுவதில்லை.மிதமான அளவு உண்போம்.வயிறும் நிறைந்திருக்கும்.உடலுக்கு தேவையான நுண்ணூட்டச் சத்துக்களும் போதுமான அளவு சேர்ந்து ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும்.இன்றைய குழந்தைகளும் அதிக பருமனாகி வருகிறார்கள்.அவர்களுக்கான உணவைத் தேர்ந்தெடுப்பதில் நாம் கவனமில்லாமல் இருப்பதே காரணம்.
உடற்பயிற்சி உடல்நலத்திற்கும் மனநலத்திற்கும் பொதுவாக பரிந்துரைக்கப்படுகிறது.மிக அவசியமானதும் கூட! ஆனால் தொப்பையை கரைத்துவிடும் என்பதற்கான உத்தரவாதம் தருவது சாத்தியமல்ல! அளவான உணவு முறையில் மாற்றம் கொண்டுவருவது தான் மிக சிறந்தவழி..!

உடற்பயிற்சி செய்தால் தொப்பை குறையாது ஒரு அதிர்ச்சி செய்தி..! உடற்பயிற்சி செய்தால் தசைகள் வலுப்பெறும்.ஆனால் தொப்பை குறையுமா? இதைப்பற்றி ஒருவர் புத்தகம் எழுதியதாக படித்தேன்.ஆனால் அப்போது எனக்கு சரியாக புரியவில்லை.ஆளாளுக்கு ஒவ்வொரு கருத்து சொல்லிக் கொண்டிருப்பார்கள்.நாணயத்தின் இருபக்கம் போலத்தான்! இரண்டு வித கருத்துக்களும் இருக்கும்.பலரும் உடற்பயிற்சி தொப்பையை குறைக்கும் என்றே நம்பிக் கொண்டிருக்கிறார்கள். மூட்டை தூக்கும் தொழிலாளிக்கு பெரும் வயிற்றை பார்த்தேன்.வியாதியெல்லாம் இல்லை.சந்தேகமில்லாமல் பெரும் தொப்பைதான்.உடல் உழைப்பு உள்ள பலருக்கும் தொப்பை இருக்கத்தான் செய்கிறது.ஆனால் அந்த தொப்பை கொஞ்சம் உறுதியானது.அலுத்துக் கொள்ளும் பலரை நான் பார்த்திருக்கிறேன்.நானும் காலையில் நடக்கிறேன்,என்னென்னவோ பயிற்சி செய்கிறேன்,ஆனால் தொப்பை அப்படி ஒன்றும் குறையவில்லை என்பார்கள். உடற்பயிற்சி செய்தால் நன்றாக பசியெடுக்கும்,அதனால் அதிகம் சாப்பிடுவார்கள்.எனவே எடை குறைப்பது சாத்தியமான ஒன்றல்ல என்று படித்தேன்.உண்மையென்றுதான் தோன்றுகிறது.உடற்பயிற்சி ஜீரண மண்டலத்தை தூண்டி விடுகிறது.இதனால் நன்கு பசித்தால் ஆரோக்கியம் கூடுவதாகவே பொருள்.சந்தேகமில்லாமல் உடற்பயிற்சி நல்ல விளைவுகளை தருகிறது.அரைமணி நேர உடற்பயிற்சி உடல் நலத்திற்கு மட்டுமல்ல மனநலத்திற்கும் நல்லதுதான். தொப்பை இதற்கெல்லாம் மசிந்து விடுமா என்ன? உடற்பயிற்சி செய்து ஆயிரம் கலோரி எரித்துவிட்டு இரண்டாயிரம் கலோரி உள்ளே தள்ளினால் வெளியே தள்ளிய வயிறு உள்ளே போகுமா? வாக்கிங்,உடற்பயிற்சி இதையெல்லாம் பலர் கடனுக்கு செய்கிறார்கள் என்றார் ஜிம் வைத்திருக்கும் ஒரு நண்பர்.இன்று மருத்துவர் சொன்னார் என்பதற்காக மட்டுமே செய்கிறார்கள். வாயைக்கட்டினால் வயிற்றைக் கட்டலாம் என்று சொல்வார்கள்.பெரும்பாலானவர்களுக்கு இது முடியாமல் போய்விடுகிறது.உணவை உள்ளே தள்ளுவதில் விழிப்புணர்வு இல்லை என்பதே சரி.நாக்கை அடக்கினால் மட்டுமே தொப்பையையும்,பருமனையும் கட்டுப்படுத்த முடியும்.ஆனால் நாக்குக்கு அடிமையானவர்களே அதிகம். சில உணவுகள் மீண்டும் மீண்டும் சாப்பிட்த் தூண்டுவதை கவனித்திருக்கிறீர்களா? எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளுக்கு இந்த பண்பு உண்டு.இப்படிப்பட்ட நொறுக்குத்தீனிகள் தொப்பையை வளர்க்கின்றன்.முந்தைய பதிவொன்றில் குறிப்பிட்ட்து போல அரிசி உணவுகளை அதிகம் உண்கிறோம்.நமது மதிய உணவுக்கும் தொப்பைக்கும் அதிக தொடர்பு உள்ளது. காய்கறிகள்,பழங்கள் போன்றவை திரும்ப திரும்ப சாப்பிடும் ஆர்வத்தை தூண்டுவதில்லை.மிதமான அளவு உண்போம்.வயிறும் நிறைந்திருக்கும்.உடலுக்கு தேவையான நுண்ணூட்டச் சத்துக்களும் போதுமான அளவு சேர்ந்து ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும்.இன்றைய குழந்தைகளும் அதிக பருமனாகி வருகிறார்கள்.அவர்களுக்கான உணவைத் தேர்ந்தெடுப்பதில் நாம் கவனமில்லாமல் இருப்பதே காரணம். உடற்பயிற்சி உடல்நலத்திற்கும் மனநலத்திற்கும் பொதுவாக பரிந்துரைக்கப்படுகிறது.மிக அவசியமானதும் கூட! ஆனால் தொப்பையை கரைத்துவிடும் என்பதற்கான உத்தரவாதம் தருவது சாத்தியமல்ல! அளவான உணவு முறையில் மாற்றம் கொண்டுவருவது தான் மிக சிறந்தவழி..!



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE