விளாம் பழம்


10363919_754684534595251_703274275421386379_n.jpg?oh=86625f9dd423a6ee361ae97d2aca7b92&oe=545144E6




விளாம் பழம் :

விளாம் பழம் நாம் கண்டு கொள்ளாமல் விட்டுள்ள அரிய பழ வகைகளில் ஒன்று. இதன் மருத்துவ மகத்துவத்தை படித்துப்பாருங்கள். அடுத்த முறை எங்கு
விளாம் பழத்தைப்பார்த்தாலும் வாங்கி சுவைப்பீர்கள்.

*தசை வளர்ச்சி, உடல் வளர்ச்சிக்கான சத்தானப் பழம் விளாம்பழம், இதனால் ரத்தம் விருத்தி அடைவதோடு, ரத்தத்தை சுத்திகரிப்பும் செய்கிறது.

* விளாம்பழத்தில் வைட்டமின் பி2 மற்றும் கால்சியம் அதிகமாக இருப்பதால் பல், எலும்புகளை வலுடையச் செய்கிறது.

* தயிருடன் விளாம் காயை பச்சடிபோல் செய்து சாப்பிட்டால் வாய்ப்புண், அல்சர் குணமடையும்.

* வெல்லத்துடன் விளாம்பழத்தை பிசறி சாப்பிட்டுவர… நரம்புத் தளர்ச்சி விரைவில் குணமடையும்.

* விளாம்பழத்துடன் பனங்கற்கண்டைக் கலந்து சாப்பிட, பித்தக் கோளாறுகளால் ஏற்படும் வாந்தி, தலைச் சுற்றல் நீங்கும்.

* தினமும் குழந்தைகளுக்கு விளாம்பழத்தைக் கொடுத்துவர நினைவாற்றல் அதிகரிக்கும்.

* விளாம் மர இலையை தண்ணீரில் போட்டு, கொதிக்க வைத்துக் குடிக்க, வாயுத் தொல்லை நீங்கும்.

* விளாங்காயை அரைத்து மோரில் கலந்து குடிக்க, நாள்பட்ட பேதி சரியாகும்.

* விளாம்பழ மரத்தின் பிசினை (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) தொடர்ந்து சாப்பிட்டு வர, பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சினைகள் குணமாகும்.

* விளாம் மரப் பட்டையைப் பொடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கஷாயத்தை வடிகட்டிக் குடிக்க, வறட்டு இருமல், மூச்சு இழுப்பு, வாய் கசப்பு போன்றவை குணமாகும்.

* சர்க்கரையுடன் விளாம்பழத்தைப் பிசைந்து ஜாம் போல் சாப்பிட ஜீரண சக்தி அதிகரிக்கும். நன்கு பசிக்கும்.

परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படை ச்சே?


1)மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன?
தெரியலையா?

அது கண்ணுக் குட்டி! கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?

2)எதுக்காக இந்தியா பூராவும், போஸ்ட் மேன் போட்ருக்காங்க?

ஏன்னா போஸ்ட் வுமன் போட்டா டெலிவரி ஆக பத்து மாதம் ஆகும்.

3) தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்?

அப்படி எடுக்கவில்லை என்றால் குளிக்கும்போது ஷாக் அடிக்கும்.

4) யார் டைம் நமக்காக காத்திருக்காது என்று சொன்னது?

கடிகாரத்தில் பேட்டரியை எடுத்துவிட்டுப் பாருங்கள்! டைம் எப்போதும் உங்களுக்காக காத்திருக்கும். தின்க் டிபறேன்ட்லி!!

5) இன்பத்திலும் சிரிங்க! துன்பத்திலும் சிரிங்க! எல்லா நேரமும் சிரிங்க!

அப்பத்தான் நீங்க

லூசுன்னு எல்லாரும் நம்புவாங்க!!

7) ஏன் பாட்டி என் மேல இவ்வளவு பாசமா இருக்க?
நீதாண்டா பேராண்டி நாளைக்கு எனக்கு கொல்லி போடணும்!

போ பாட்டி! எனக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கு! இன்னைக்கே கொல்லி வச்சுரவா?

8)பஸ் ரூட்ல பஸ் போகும், ட்ரைன் ரூட்ல ட்ரைன் போகும்! பீட் ரூட்ல என்ன போகும்?

9) பல்ப் – எடிசன்
ரேடியோ – மார்கோனி
பை-சைக்கிள் – மேக் மில்லன்
போன் – க்ராஹாம் பெல்
க்ராவிடி – நியூட்டன்
கரண்ட் – பாரடே

எக்ஸாம் – அவன்தான் சிக்க மாட்றான்! சிக்கினா செத்தான்!!

10) காதலில் எத்தனை முறை தோற்றாலும் பெரிய விசயமல்ல!

ஒரு முறை ஜெய்த்து பார்த்தால்தான் தெரியும்! தோல்வியே எவ்வளவோ

பரவாயில்லை என்று

11) மூணு பேரு ஒரு பைக்ல போயிட்டு இருக்காங்க! அப்ப ஒரு டிராபிக் போலீஸ் கை
காட்டி நிறுத்தசொல்றாரு!
அப்ப பைக்ல இருந்த ஒருத்தன் ரொம்ப கோவமா "யோவ்! ஏற்கனவே மூணு பேரு

உட்கார்ந்து இருக்குறோம்! இதுல நீ எங்க உட்காருவ?" என்று கேட்டான். இது எப்படி இருக்கு?

12)டாக்டர்: உங்க உடம்ப குறைக்க தினமும் நான்கு மைல் நடக்கணும்!

பேசன்ட்: சரி டாக்டர்! நாளைக்கே நான்கு மயில் வாங்கி நடக்க வைக்கிறேன்!!

13) அப்பா: ஏண்டா உங்க ஸ்கூல்ல ரன்னிங் ரேஸ் இருக்குன்னு சொன்னியே, என்னாச்சி?

மகன்: அத ஏன் கேக்குறப்பா, எனக்கு பயந்து எல்லா பசங்களும் எனக்கு முன்னாடியே
ஓடி போய்டாங்க!!

14)கொடூர மொக்கை!
என்னதான் நான் அனுப்புற மெசேஜ் அட்டு பழசா இருந்தாலும், உங்க மொபைல்’ல
வரும் பொது "ஒன் நியூ மெசேஜ் ரிசிவ்டு" என்றுதான் வரும்!! எப்பூடி



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

உலகின் முதல் விமானம் இந்தியனுடையது!! : ஷிவ ்கர் பாபுஜி தல்பாடே ( 1864 – 1916 )


TREASURES OF HINDUISM 22 :
உலகின் முதல் விமானம் இந்தியனுடையது!! :
ஷிவ்கர் பாபுஜி தல்பாடே ( 1864 – 1916 )

நேற்றைய பதிவில் பரத்வாஜ மகரிஷியின் ‘வைமானிக சாஸ்த்ரா’ புத்தகம் குறித்த மேலைநாட்டு விஞ்ஞானிகளின் விமர்சனம் குறித்து சொல்லியிருந்தேன்!!! ஆனால் பரத்வாஜரின் புத்தகம் மெய்யானதே என்பதற்கான ஆதாரத்தையும் இன்று தருகிறேன்!!!

துரதிருஷ்டவசமாக பேடன்ட் போன்ற பல விஷயங்களாலும் அரசுகளின் அடக்குமுறைகளாலும் பல்வேறு கண்டுபிடிப்புக்கள் ஆள் மாற்றிச் சொல்லப்பட்டு புகழ் வேறு எவருக்கோ சென்று விடுகிறது!!!

நமது நாட்டின் விஞ்ஞானி ஜகதீஷ் சந்திர போஸ் அவர்கள் கண்டுபிடித்த ரேடியோவின் புகழ் கடைசியில் மார்க்கோனியிடம் சென்றடைந்தது இப்படித்தான்!!! மார்க்கோனி பேடன்ட் வாங்கிவிட அவருக்கு முன்பே கண்டுபிடித்த போஸின் பெயர் அடிபட்டுப் போனது!!

அதேபோல்தான் விமானமும்!! நாமெல்லாம் விஞ்ஞானப் புத்தகங்களில் படிக்கின்றோம் உலகின் முதல் விமானத்தைக் கண்டுபிடித்தவர் ரைட் சகோதரர்கள் என்று !! அவர்கள் 1903 ஆம் ஆண்டு விமானத்தைக் கண்டுபிடித்துப் பறக்கவிட்டனர்!!! ஆல்பிரட் ரைட் என்னும் சகோதரர்களில் ஒருவர் அவ்விமானத்தில் ஏறிப்பறக்க அது 100 அடிகள் உயரத்தில் 20 செகண்டுகள் பறந்து கீழே விழுந்தது!!! இதுதான் ரைட் சகோதரர்களின் சாதனை!!

ஆனால் ரைட் சகோதர்கள் கண்டுபிடிப்புக்கு எட்டாண்டுகள் முன்பே ஒரு இந்தியர் பரத்வாஜ மகரிஷியின் ‘வைமானிக சாஸ்த்ரா’ புத்தகத்தின் அடிப்படையில் ஒரு விமானத்தை வெற்றிகரமாகத் தயாரித்து அதைப் பொது மக்கள் முன்னிலையில் வெற்றிகரமாகப் பறக்கவிட்டுக் காட்டினார் என்றால் உங்களால் அதை நம்ப முடிகிறதா?? ஆனால் அதுதான் உண்மை!! வெள்ளையரின் அடக்குமுறைகளாலும் நம் நாட்டவர்களின் அலட்சியத்தாலும் கவுரவிக்கப்படாமலே மறைந்து போன ஒரு மாபெரும் விஞ்ஞானியின் சோகக் கதை இது!!!

மும்பையைச் சேர்ந்த சமஸ்கிருத அறிஞரும் மும்பைப் பல்கலையில் சமஸ்கிருதப் பேராசிரியராகவும் விளங்கிய திரு. ஷிவ்கர் பாபுஜி தல்பாடே என்னும் இந்திய விஞ்ஞானி தன்னுடன் பணிபுரிந்த நண்பர் திரு. சுப்பராய சாஸ்திரியுடன் இணைந்து தயாரித்து வெள்ளோட்டம் விட்ட நவீன உலகின் முதல் விமானம் பற்றிய செய்திகளை அடுத்த பதிவில் தருகிறேன்!!!

‪#‎TREASURES_OF_HINDUISM‬



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

30 வகை ஆவியில் வேகவைத்த உணவு




30 வகை ஆவியில் வேகவைத்த உணவு

”சாப்பிடும்போது நல்லாதான் இருந்தது… ஆனா, கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் வயித்த என்னவோ பண்ணுது” – இப்படி அலுத்துக் கொள்ளாதவர்கள் மிகவும் குறைவு. உணவு வகைகளிலேயே, வயிற்றுக்கு இதமானவை என்ற வரிசையில் ஆவியில் வேகவைத்த உணவுகளுக்கு முதல் இடம் உண்டு. புட்டு, இடியாப்பம், கொழுக்கட்டை, இலை வடாம், இட்லி, வெஜ் ரோல், டோக்ளா, காண்வி என ஆவியில் வேகவைத்த உணவுகளில் எத்தனை வகை உண்டோ அத்தனையையும் அலசி ஆராய்ந்து, அவற்றில் 30 வகைகளைக் கண்ணைக் கவரும் அழகுடன், சுண்டியிழுக்கும் சுவையுடன் இந்த இணைப்பிதழில் உங்களுக்காக குவித்திருக் கிறார் சமையல்கலை நிபுணர் லஷ்மி ஸ்ரீநிவாசன்.

”ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட் போன்றவற்றை முடிந்த அளவுக்கு தவிர்த்துவிட்டு, இந்த ரெசிபிகளை செய்து பரிமாறினால், உங்கள் குடும்பத்தினரின் வாயும், வயிறும் உங்களை வானுயர வாழ்த்தும்” என்று பாசமிகு தோழியாய் பரிவும், உற்சாகமும் பொங்கக் கூறுகிறார் லஷ்மி.

முளைகட்டிய பச்சைப்பயறு டோக்ளா

தேவையானவை: முளைகட்டிய பச்சைப்பயறு – ஒரு கப், பச்சை மிளகாய் – 2 (விழுதாக்கவும்), இஞ்சி – ஒரு சிறிய துண்டு (விழுதாக்கவும்), ஆப்பசோடா – ஒரு சிட்டிகை, சர்க்கரை நீர் – 2 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், உப்பு, மஞ்சள்தூள் – சிறிதளவு.

தாளிக்க: எண்ணெய் – 3 டீஸ்பூன், கடுகு – சிறிதளவு, பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், கீறிய பச்சை மிளகாய் – 2.

அலங்கரிக்க: நறுக்கிய கொத்தமல்லி, துருவிய கேரட், தேங்காய்த் துருவல் – தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை: முளைகட்டிய பச்சைப்பயறு, சிறிது உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வடை மாவு போல் கெட்டியாக அரைக்கவும். இத னுடன் இஞ்சி விழுது, பச்சை மிளகாய் விழுது சேர்த்து, பிறகு ஆப்பசோடா, சிறிது உப்பு சேர்த்து, எண்ணெய் தடவிய பாத்திரத்தில் போட்டு குக்கரில் வைத்து ஆவியில் 20 நிமிடம் வேகவிடவும் (குக்கரில் வெயிட் போட வேண்டாம்). ஆறிய பின் பத்திரத்தைக் கவிழ்த்து எடுத்து, உள்ளே இருப்பதை சதுரங்களாக நறுக்கவும். இதுதான் டோக்ளா.

தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, அதனுடன் சர்க்கரை நீர், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கி, இதை சதுரமாக நறுக்கிய டோக்ளாக்கள் மீது பரவலாக ஊற்றி, நன்கு குலுக்கிவிடவும். நறுக் கிய கொத்தமல்லி, கேரட் துருவல், தேங் காய்த் துருவல் கொண்டு அலங்கரிக்கவும்.

ஸ்டஃப்டு கோஸ் ரோல்

தேவையானவை: இளம் கோஸ் இலைகள் – 10, நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, லவங்கம் – 10.

பூரணம் செய்ய: அரை மணி நேரம் ஊறவைத்த பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு – தலா 50 கிராம், காய்ந்த மிளகாய் – 8 (அல்லது காரத்துக்கேற்ப), பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு, மஞ்சள்தூள் – தேவைக்கேற்ப.

தாளிக்க: கடுகு, சீரகம் தலா – அரை டீஸ்பூன், எண்ணெய் – ஒரு டீஸ்பூன், வெங்காயம் – ஒன்று (நறுக்கவும்).

செய்முறை: கோஸ் இலைகளை வெந்நீரில் போட்டு ஒரு நிமிடம் கழித்து எடுத்து சமன்படுத்தவும். பூரணம் செய்ய கொடுத்துள்ளவற்றை மிக்ஸியில் ரவை பதத்துக்கு அரைத்து எடுக்கவும் (நீர் விட வேண்டாம்). தாளிக்கக் கொடுத்துள்ளவற்றில் வெங்காயம் தவிர பிற பொருட்களைத் தாளித்து, பின்னர் வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, சிறிதளவு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, பூரண கலவையுடன் நன்கு கலக்கவும்.

எலுமிச்சை அளவு பூரணம் எடுத்து கோஸ் இலையில் மெல்லியதாக வட்டமாக பூசி, பாய் போல் சுருட்டி ஒரு லவங்கம் செருகி ஆவியில் 7 நிமிடம் வேகவிட்டு எடுத்து, நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

நோன்பு கார அடை

தேவையானவை: களைந்து, உலர்த்தி, அரைத்த பச்சரிசி மாவு – ஒரு கப், வேகவைத்த காராமணி (பயறு வகை) – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2 (நறுக்கவும்), கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு, பெருங்காயத்தூள் – சிறிதளவு, பல்லு பல்லாக நறுக்கிய தேங்காய் – 2 டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை: வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, 2 கப் நீர் சேர்த்து, உப்பு போட்டு நன்கு கொதிக்கவிடவும். இதனுடன் வேகவைத்த காராமணி, பச்சரிசி மாவு சேர்த்து கட்டியின்றி கிளறவும். சிறிய எலுமிச்சை அளவு மாவு எடுத்து கனமாக தட்டி, ஆவியில் 5 நிமிடம் வேகவிட்டு எடுத்து பரிமாறவும்.

நோன்பு சமயத்தில் இதை விசேஷ உணவாக செய்வார்கள்.

அவித்த அவல் புட்டு

தேவையானவை: நெய்யில் வறுத்துப் பொடித்த சிவப்பு அவல் – ஒரு கப், நாட்டுச் சர்க்கரை (அ) வெல்லத்தூள் – அரை கப், தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, வறுத்த முந்திரி, உலர்திராட்சை – தலா ஒரு டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை: பொடித்த அவலுடன் தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து, அரை கப் சுடு நீர் தெளித்து நன்கு பிசிறவும். இதை ஆவியில் 10 நிமிடம் வேகவிட்டு, நன்கு ஆறியபின் உதிர்த்து, நெய், நாட்டுச்சர்க்கரை (அ) வெல்லத்தூள் சேர்த்துப் பிசிறி, முந்திரி, உலர்திராட்சை சேர்த்துப் பரிமாறவும்.

குறிப்பு: விருப்பப்பட்டால் டூட்டி ஃப்ரூட்டி 2 டீஸ்பூன் கலந்து தரலாம். வெள்ளை அவலிலும் இந்தப் புட்டு செய்யலாம்.

நோன்பு இனிப்பு அடை

தேவையானவை: களைந்து, உலர்த்தி, அரைத்த பச்சரிசி மாவு – ஒரு கப், ஊறவைத்து, வேகவைத்த காராமணி (பயறு வகை)- 2 டீஸ்பூன், பல்லு பல்லாக நறுக்கிய தேங்காய் – 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, பாகு வெல்லம் – முக்கால் கப், நெய் – அரை டீஸ்பூன்.

செய்முறை: பச்சரிசி மாவை 2-3 நிமிடம் வறுத்து, ஆறவிடவும். முக்கால் கப் பாகு வெல்லத்துடன் ஒன்றரை கப் நீர் சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டிக் கொள்ளவும். இத்துடன் வறுத்த பச்சரிசி மாவு, ஏலக்காய்த்தூள், நெய், தேங்காய்ப் பல், வேகவைத்த காராமணி சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு போல் பிசையவும். சிறிய எலுமிச்சை அளவு மாவு எடுத்து, ஹார்லிக்ஸ் பாட்டில் மூடி அளவுக்கு தட்டி, ஆவியில் 5 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.

இதற்கு வெண்ணெய் தொட்டு சாப்பிடலாம். இது காரடையான் நோன்பு ஸ்பெஷல் ஆகும்.

வாழைத்தண்டு இட்லி

தேவையானவை: வீட்டில் அரைத்த இட்லி மாவு – 2 கப், நார் நீக்கி மிகவும் பொடியாக நறுக்கிய இளம் வாழைத்தண்டு – அரை கப், உப்பு – அரை டீஸ்பூன்.

தாளிக்க: நெய் – ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, பச்சை மிளகாய் – 2 (நறுக்கவும்), பெருங்காயத்தூள் – சிறிதளவு.

செய்முறை: வாணலியில் நெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, நறுக்கிய வாழைத்தண்டு, உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் புரட்டி ஆறவிடவும் (சூட்டுடன் போட்டால் மாவு கட்டி தட்டும்). இதை இட்லி மாவில் சேர்த்துக் கலந்து, வழக்கமான இட்லி போல் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

இதற்கு எந்தவித சட்னியும் தொட்டு சாப்பிடலாம்.

வெள்ளை எள் இலை அடை

தேவையானவை: களைந்து, உலர்த்தி, அரைத்த பச்சரிசி மாவு – ஒரு கப், எண்ணெய் – அரை டீஸ்பூன், வறுத்த வெள்ளை எள் – ஒரு டீஸ்பூன், உப்பு – சிறிதளவு, வாழை இலை துண்டுகள் – தேவையான அளவு.

வறுத்துப் பொடிக்க: வெள்ளை எள் – 50 கிராம், காய்ந்த மிளகாய் – 8, பெருங்காயத்தூள் – சிறிதளவு.

செய்முறை: இரண்டு கப் நீரைக் கொதிக்கவிட்டு, அதில் சிறிதளவு உப்பு, எண்ணெய் சேர்த்து இறக்கி, அரிசி மாவு சேர்த்து கட்டியின்றி கிளறி, மூடி ஆறவிடவும். வறுத்துப் பொடிக்கக் கொடுத்துள்ளவற்றை வெறும் வாணலியில் வறுத்து, உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.

வெந்த அரிசி மாவிலிருந்து சிறிய சாத்துக்குடி அளவு எடுத்து, நறுக்கிய வாழை இலையில் வைத்து கையால் வட்டமாக தட்டி, பொடித்து வைத்த பூரணத்தை பரவலாக தூவி அப்படியே வாழை இலையுடன் மடித்து, ஆவியில் 7 – 10 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும். ஆறிய பின் வாழை இலையிலிருந்து எடுத்து, வறுத்த எள் தூவி பரிமாறவும்.

டிரை ஃப்ரூட் சேவை

தேவையானவை: பச்சரிசி மாவு – 2 கப், பொடித்த சர்க்கரை – 3 டேபிள்ஸ்பூன், மில்க்மெய்ட் – 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, சமையல் எண்ணெய் – ஒரு சொட்டு, உப்பு – ஒரு சிட்டிகை.

வறுத்து சேர்க்க: நெய் – 2 டீஸ்பூன், நறுக்கிய முந்திரி, நறுக்கிய பாதாம், உலர்திராட்சை, வெள்ளரி விதை – தலா 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: நான்கு கப் நீரை கொதிக்கவிட்டு, உப்பு, எண்ணெய் சேர்க்கவும். இதில் பச்சரிசி மாவு சேர்த்துக் கலந்து, அடுப்பை அ¬ணைத்து கட்டியின்றி கிளறி, இடியாப்ப குழலில் போட்டு பிழிந்து, ஆவியில் 4 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும். பின்னர் நன்கு உதிர்த்துக்கொள்ளவும்.

வாணலியில் நெய்யை சூடாக்கி டிரை ஃப்ரூட் வகைகளை வறுத்து, உதிர்த்த இடியாப்பத்துடன் சேர்த்து, மேலும் சர்க்கரைத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். பரிமாறும் முன் மில்க்மெய்ட் சிறிதளவு விட்டு பரிமாறவும்.

பச்சரிசி இலை வடாம்

தேவையானவை: பச்சரிசி – கால் கிலோ, சிறிய பச்சை மிளகாய் – 8, ஓமம் – அரை டீஸ்பூன், உப்பு, பெருங்காயத் தூள் – தேவையான அளவு, வாழை இலை துண்டுகள் – தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசியை 2 மணி ஊறவைத்து… உப்பு, பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து நைஸாக தோசை மாவு பதத்தில் அரைத்து, 2 நாட்கள் ஊறவிடவும். மூன்றாம் நாள் காலை மாவுடன் ஓமம் சேர்க்கவும். நறுக்கிய வாழை இலையில் மாவை மிகவும் மெல்லிய தோசை போல் ஊற்றி பரப்பி, ஆவியில் 2 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும். ஆறியபின் இலையிலிருந்து வடாமை நீக்கி, அப்படியே சாப்பிடலாம். இதை வெயிலில் காயவிட்டு வைத்துக்கொண்டு, வேண்டும்போது எண்ணெயில் பொரிக்கலாம்.

குறிப்பு: இலை வடாம் செய்வதற்கான ஸ்டாண்ட் கடைகளில் கிடைக்கிறது. அதைப் பயன்படுத்தியும் இதனை தயாரிக்கலாம்.

சாக்லேட் இடியாப்பம்

தேவையானவை: பச்சரிசி மாவு – ஒரு கப், நீர் – 2 கப், நெய் – ஒரு டீஸ்பூன், மில்க் சாக்லேட் (துருவியது) 10 அல்லது சாக்லேட் சாஸ் (டிபார்ட்மென்ட் ஸ்டோரில் கிடைக்கும்) – 3 டேபிள்ஸ்பூன், துருவிய முந்திரி – சிறிதளவு, உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: நீரைக் கொதிக்கவிட்டு, உப்பு, நெய் சேர்க்கவும். இதனுடன் பச்சரிசி மாவு சேர்த்துக் கலந்து, அடுப்பை அணைத்து கட்டியின்றி கிளறி, இடியாப்ப குழலில் போட்டு பிழிந்து, ஆவியில் 4 நிமிடம் வேகவிட்டு எடுத்து உதிர்க்கவும். இதனுடன் துருவிய சாக்லேட் (அ) சாக்லேட் சாஸ் சேர்த்து, துருவிய முந்திரி தூவி பரிமாறவும்.

ஸ்கூலுக்கு லஞ்ச் பாக்ஸில் கொடுத்து அனுப்புவதற்கு ஏற்ற டிபன் இது.

ரைஸ் பீஸ் பால்ஸ்

தேவையானவை: ஒரு மணி நேரம் ஊறவிட்டு நைஸாக, கெட்டியாக அரைத்த பச்சரிசி மாவு – ஒரு கப், புதினா – கொத்தமல்லி விழுது – 2 டேபிள்ஸ்பூன், நசுக்கிய பச்சை மிளகாய் – 2, பெருங்காயத்தூள், உப்பு – சிறிதளவு.

தாளிக்க: தேங்காய் எண்ணெய், தேங்காய் துருவல் – தலா ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன்.

செய்முறை: அரைத்த பச்சரிசி மாவுடன் உப்பு, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், புதினா – கொத்தமல்லி விழுது சேர்த்து, பட்டாணி அளவு உருண்டைகளாக உருட்டி, ஆவியில் 10 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும். ஆறியபின் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து சேர்த்தால்… சூப்பர் சுவையில், ரைஸ் பீஸ் பால்ஸ் தயார்.

மாதுளம் இலை அடை

தேவையானவை: பச்சரிசி மாவு – ஒரு கப், மாதுளை முத்துக்கள் – ஒரு கப், தூள் வெல்லம் – 2 டீஸ்பூன், எண்ணெய் – அரை டீஸ்பூன், ஏலக்காய்த்தூள், உப்பு – தலா ஒரு சிட்டிகை, வாழை இலை துண்டுகள் – தேவையான அளவு,

செய்முறை: 2 கப் நீருடன் உப்பு, எண்ணெய் சேர்த்து கொதிக்கவிட்டு மாவு, சேர்த்துக் கிளறி ஆறவிடவும். மாதுளை முத்துக்கள், வெல்லம், ஏலக்காய்த்தூள் மூன்றையும் கலந்து வைத்துக்கொள்ளவும். வாழை இலையில் சிறிய சாத்துக்குடி கிளறிய மாவை சிறிய அப்பளம் போல் பரத்தி, கொஞ்சம் மாதுளை கலவையை நிரப்பி அப்படியே ஒட்டி மடித்து ஆவியில் வேகவிட்டு, வெந்த பின் இலை நீக்கி பரிமாறவும்.

அவல் – பாசிப்பருப்பு பிடிகொழுக்கட்டை

தேவையானவை: ரவையாக பொடித்த கெட்டி அவல் – ஒரு கப், வேகவைத்த பாசிப்பருப்பு – கால் கப், உப்பு, மஞ்சள்தூள் – தேவையான அளவு.

தாளிக்க: தேங்காய் எண்ணெய் – 3 டீஸ்பூன், கடுகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன், சிறிய பச்சை மிளகாய் – 3 (நறுக்கவும்), கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, பெருங்காயத்தூள் – சிறிதளவு, வேகவைத்த வேர்க்கடலை – ஒரு கைப்பிடி அளவு.

செய்முறை: ரவையாக பொடித்த அவலை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து அரை கப் வெந்நீர் தெளித்து நன்கு பிசிறி வைக்கவும். தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து ஒரு கப் நீர் சேர்த்து கொதிக்கவிட்டு, வெந்த பாசிப்பருப்பு, பிசிறிய அவல் சேர்த்து கெட்டியாக கிளறி எடுக்கவும். ஆறிய பின் உருண்டை / நீளவாக்கில் உருட்டி 5 – 7 நிமிடம் ஆவியில் வேகவிட்டு எடுத்து, விருப்பமான சட்னியுடன் பரிமாறவும்.

அவல் எளிதில் ஜீரணம் ஆகும். இந்த பிடிகொழுகட்டை விரத நாட்களுக்கு ஏற்றது.

ஆப்பிள் ஸ்டஃப்டு கொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி – ஒரு கப், எண்ணெய் – சிறிதளவு, உப்பு – ஒரு சிட்டிகை.

பூரணத்துக்கு: துருவிய ஆப்பிள் – ஒரு கப், இனிப்பு பால் கோவா – 100 கிராம், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, பொடித்த வெல்லம் – 2 டீஸ்பூன்.

செய்முறை: பச்சரிசியை ஒரு மணி ஊறவிட்டு, உப்பு, 2 கப் நீர் சேர்த்து நைஸாக அரைக்கவும். அடிகனமான வாணலியில் எண்ணெய், அரைத்த மாவு சேர்த்து அடிபிடிக்காது, கட்டியின்றி கைவிடாமல் கிளறி இறக்கவும். பூரணத்துக்கான பொருட்ளை கலந்துகொள்ளவும். மேல் மாவில் கொழுக்கட்டைக்கான சொப்புகள் செய்து, பூரணத்தை நிரப்பி மூடி, ஆவியில் 15 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்.

தேன்குழல் கீர்

தேவையானவை: களைந்து, உலர்த்தி, அரைத்த பச்சரிசி மாவு – ஒரு கப், தேங்காய்ப் பால் – ஒரு கப், வெல்லம் – 150 கிராம், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி – திராட்சை – சிறிதளவு, நெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: அரிசி மாவு, உப்பு, நெய் ஆகியற்றை வெந்நீர் விட்டு முறுக்கு மாவு போல் பிசைந்து, இட்லித் தட்டில் சிறிய சிறிய தேன்குழல்களாக பிழிந்து ஆவியில் வேகவைக்கவும். வெல்லத்துடன் சிறிதளவு நீர் விட்டுக் கரைத்து, கொதிக்கவிட்டு, வடிகட்டி, தேங்காய்ப் பாலுடன் சேர்த்து கொஞ்சம் சூடாக்கவும். வேகவைத்த தேன்குழல்களை சூட்டுடன் இதில் போட்டு, ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி – திராட்சை சேர்க்கவும். ஒரு மணி நேரம் கழித்து பரிமாறவும்.

மிக்ஸ்டு பருப்பு மினி இட்லி

தேவையானவை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா 50 கிராம், அரிசி – 25 கிராம், எலுமிச்சைச் சாறு – சிறிதளவு, தயிர் – 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு – சிறிதளவு.

தாளிக்க: நெய் – ஒரு டீஸ்பூன், கடுகு, பெருங்காயத்துள் – தலா அரை டீஸ்பூன், நறுக்கிய கறிவேப்பிலை – சிறிதளவு, முந்திரி – 25 கிராம், பச்சை மிளகாய் – 2 (நறுக்கவும்), எண்ணெய், நெய் – தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை: பருப்பு வகைகளை அரிசியுடன் சேர்த்து முக்கால் மணி நேரம் ஊறவிட்டு… உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத் தூள் சேர்த்து, தயிர் விட்டு (தண் ணீர் வேண்டாம்) கரகரப்பாக அரைக்கவும். தாளிக்கக் கொடுத் துள்ளவற்றைத் தாளித்து மாவுடன் சேர்த்து, எலுமிச்சைச் சாறு சேர்த் துக் கலக்கவும். உடனடியாக சிறிய மினி இட்லி தட்டில் நெய் / எண் ணெய் தடவி மாவை விட்டு, 10 நிமிடம் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: மாவை புளிக்கவைக் கக் கூடாது. இதற்குத் தொட்டுக் கொள்ள இட்லி மிளகாய்ப் பொடி, தேங்காய் சட்னி மிகவும் ஏற்றது.

ஹனி ரைஸ் காண்வி

தேவையானவை: பச்சரிசியை 2 மணி நேரம் ஊறவிட்டு நைஸாக அரைத்த மாவு – ஒரு கப், தேன் – 2 டேபிள்ஸ்பூன், உப்பு, சர்க்கரை – தலா ஒரு சிட்டிகை, ஏலக்காய்த்தூள், துருவிய சீஸ் – சிறிதளவு.

செய்முறை: அரிசி மாவுடன் உப்பு, சர்க்கரை சேர்த்துக் கரைக்கவும். வாழை இலையில் மெல்லிய சிறிய தோசை போல் மாவை ஊற்றி, ஆவியில் 2 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும் பிறகு, ரிப்பன் போல் நீளவாக்கில் ‘கட்’ செய்து (ஒரு இன்ச் அகலத்துக்கு) பாய் போல் சுருட்டவும். இதுதான் ரைஸ் காண்வி. எல்லாவற்றையும் இதுபோல் செய்துகொள்ளவும். ரைஸ் காண்விகளை தட்டில் வைத்து மேலே தேன், துருவிய சீஸ், ஏலக்காய்த்தூள் சேர்த்து பரிமாறவும்.

குறிப்பு: இலை வடாம் செய்வதற்கான ஸ்டாண்ட் கடைகளில் கிடைக்கிறது. அதைப் பயன்படுத்தியும் இதனை தயாரிக்கலாம்.

ஃப்ரூட் ரைஸ் காண்வி

தேவையானவை: ஹனி ரைஸ் காண்வி செய்முறையில் கொடுக்கப்பட்டுள்ள படி தயாரித்த ரைஸ் காண்வி – 2 கப், மிகவும் பொடிதாக நறுக்கிய பழங்கள் (மாம்பழம், பலாப்பழம், கொய்யா, ஆப்பிள், பைனாப்பிள்) எல்லாம் சேர்ந்து – ஒரு கப், பொடித்த சர்க்கரை – 2 டீஸ்பூன், ரோஸ் எசன்ஸ் அல்லது ஏலக்காய் எசன்ஸ் – சில துளிகள்

செய்முறை: ரைஸ் காண்விகளை ஒரு கிண்ணத்தில் வைத்து, மேலே நறுக்கிய பழங்கள் சர்க்கரை, எசன்ஸ் சேர்த்து உடனே பரிமாறவும்.

மிக்ஸ்டு வெஜ் ரைஸ் காண்வி

தேவையானவை: 117-ம் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளபடி தயாரித்த ரைஸ் காண்வி – ஒரு கப், பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், கோஸ் (சேர்த்து) – அரை கப், வேகவைத்த பச்சைப் பட்டாணி, நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – சிறிதளவு.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்), எண்ணெய் – 2 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு.

செய்முறை: காய்கறிகளுடன் உப்பு சேர்த்து, எண்ணெயில் வதக்கவும். ரைஸ் காண்விகளை தட்டில் பரத்தவும். தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து சேர்த்து, வதக்கிய காய்கறிகள், வேகவைத்த பச்சைப் பட்டாணி சேர்த்து, எலுமிச்சம் பழச்சாறு விட்டுக் கலந்து, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

தயிர் காண்வி

தேவையானவை: 117-ம் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளபடி தயாரித்த ரைஸ் காண்வி – 2 கப், கெட்டித் தயிர் – அரை கப், துருவிய கேரட் – ஒரு டீஸ்பூன், நறுக்கிய வெள்ளரிக்காய், நறுக்கிய கொத்தமல்லி, உப்பு, சர்க்கரை – சிறிதளவு.

தாளிக்க: கடுகு, பெருங்காயத்தூள் – சிறிதளவு, மோர் மிளகாய் – 2, சமையல் எண்ணெய் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: செய்முறை: ரைஸ் காண்விகளின் மேல் தயிரை ஊற்றவும். உப்பு, சர்க்கரையைத் தூவவும். எண்ணெயில் மோர் மிளகாயை வறுத்து… கடுகு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து, ரைஸ் காண்விகளுடன் சேர்க்கவும். துருவிய கேரட், நறுக்கிய வெள்ளரி, கொத்தமல்லி சேர்த்துப் பரிமாறவும்.

மாங்காய் ரைஸ் காண்வி

தேவையானவை: 117-ம் பக்கத் தில் கொடுக்கப்பட்டுள்ளபடி தயா ரித்த ரைஸ் காண்வி – ஒரு கப், துருவிய மாங்காய் (அதிக புளிப்பு இல்லாதது) – கால் கப், உப்பு, மஞ்சள்தூள் – சிறிதளவு.

தாளிக்க: கடுகு, வெள்ளை எள் – தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, சமையல் எண்ணெய் – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு.

செய்முறை: தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து… துருவிய மாங்காய், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, ரைஸ் காண்விகள் மீது கொட்டவும். பரிமாறும் முன் நன்கு கிளறி பரிமாறவும்.

டேட்ஸ் – கசகசா கொழுக்கட்டை

தேவையானவை: களைந்து, உலர்த்தி, அரைத்த பச்சரிசி மாவு – ஒரு கப், எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை.

பூரணத்துக்கு: பொடியாக நறுக்கிய பேரீச்சம்பழம் – அரை கப், வறுத்த கசகசா – 2 டேபிள்ஸ்பூன், கொப்பரைத் துருவல் – ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு.

செய்முறை: பூரணத்துக்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்ளை நன்கு கலந்துகொள்ளவும். இரண்டு கப் நீருடன் உப்பு, எண்ணெய் சேர்த்து கொதிக்கவிட்டு அரிசி மாவு தூவி, கட்டியின்றி கிளறவும். ஆறிய பின் மாவில் கொழுக்கட்டைக்கான சொப்புகள் செய்து, அதில் பூரணத்தை நிரப்பி மூடி, ஆவியில் 5 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.

கேரட் அம்மணி கொழுக்கட்டை

தேவையானவை: களைந்து, உலர்த்தி, அரைத்த பச்சரிசி மாவு – ஒரு கப், எண்ணெய் – ஒரு டீஸ்பூன், கேரட் – ஒன்று (துருவவும்), மஞ்சள்தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, பெருங்காயத்தூள் – சிறிதளவு, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – ஒன்று (நறுக்கவும்), கறிவேப்பிலை, எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்

செய்முறை: இரண்டு கப் நீருடன் உப்பு, எண்ணெய் சேர்த்து கொதிக்கவிட்டு அரிசி மாவு தூவி, கட்டியின்றி கிளறவும். இந்த மாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சிலிண்டர் வடிவத்தில் மிகச் சிறியதாக உருட்டி, இட்லித் தட்டில் வைத்து, ஆவியில் 10 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும். தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து சேர்த்து, கேரட் துருவல், மஞ்சள்தூள் சேர்த்து, எலுமிச்சைச் சாறு விட்டு கலந்து பரிமாறவும்.

தக்காளி இலை வடாம்

தேவையானவை: பச்சரிசி – ஒரு கப், பழுத்த தக்காளி – 3, வாழை இலை துண்டுகள் – தேவையான அளவு, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் – சிறிதளவு.

செய்முறை: பச்சரியை ஒரு மணி நேரம் ஊறவிட்டு உப்பு, தக்காளி சேர்த்து நைஸாக அரைக்கவும். இதனுடன் மிள காய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்க்கவும். வாழை இலையில் மாவை மெல்லிய சிறிய தோசை போல் ஊற்றி, ஆவியில் 2 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும். ஆறியபின் உரித்து, அப்படியே சாப்பிடலாம். இதை வெயிலில் காயவிட்டு எடுத்து… தேவைப்படும்போது பொரித்து சாப்பிடலாம்.

குறிப்பு: இலை வடாம் செய் வதற்கான ஸ்டாண்ட் கடைகளில் கிடைக்கிறது. அதைப் பயன் படுத்தியும் இதனை தயாரிக்கலாம்.

பனீர் பால் கொழுக்கட்டை

தேவையானவை: களைந்து, உலர்த்தி, அரைத்த பச்சரிசி மாவு – அரை கப், நீர் – ஒரு கப், உப்பு – கால் சிட்டிகை, எண்ணெய் 2 சொட்டு, சுண்டக் காய்ச்சிய பால் – ஒரு கப், சிறியதாக நறுக்கிய பனீர் துண்டுகள் – 10, ஏலக்காய்தூள் – சிறிதளவு, சர்க்கரை – 50 கிராம்.

செய்முறை: நீருடன் உப்பு, எண்ணெய் சேர்த்து கொதிக்கவிட்டு, அரிசி மாவு தூவி, கட்டியின்றி கிளறவும். ஆறிய பின் மாவை சீடை போல் உருட்டி ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். சர்க்கரையுடன் கால் கப் நீர் ஊற்றி சூடாக்கி, கொதி வந்தவுடன் பனீர் துண்டுகள். வேகவைத்து எடுத்த சீடைகளைப் போட்டு 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும். இதனுடன் சுண்டக்காய்ச்சிய பால் மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்துப் பரிமாறவும்.

குறிப்பு: பாலுக்குப் பதில் தேங்காய்ப் பால் உபயோகித்தும் இதை செய்யலாம்.

சென்னா – கோதுமை ரவை கொழுக்கட்டை

தேவையானவை: கோதுமை ரவை – ஒரு கப், வேகவைத்த சென்னா – கால் கப், உப்பு – தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, பெருங்காயத்தூள், உளுத்தம்பருப்பு, சீரகம் – தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, எண்ணெய் – 2 டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, முந்திரிப் பருப்பு – 8.

செய்முறை: தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, 2 கப் நீர் சேர்த்து, கொதி வந்தவுடன் உப்பு, கோதுமை ரவை, வேகவைத்த சென்னா சேர்த்து, பாதி வெந்தவுடன் இறக்கவும். ஆறியபின் மாவை உருண்டை / நீளவாக்கில் உருட்டி இட்லித்தட்டில் வைத்து 10 நிமிடம் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். தக்காளி அல்லது புதினா சட்னியுடன் சூடாக பரிமாறவும்.

கேரள பழப்புட்டு

தேவையானவை: பச்சரிசி மாவு – ஒரு கப், தேங்காய்த் துருவல் – அரை கப், சர்க்கரை – 4 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள்- சிறிதளவு, வாழைப்பழம் – 10 (வில்லைகளாக நறுக்கவும்), நெய் – 2 டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: பச்சரிசி மாவை சிவக்க வறுத்து, சிறிது உப்பு கலந்த வெந்நீர் தெளித்து பிசிறவும் (பிசையக் கூடாது). புட்டுக் குழலில் சிறிதளவு மாவு, சிறிதளவு தேங்காய் துருவல் என்று மாற்றி மாற்றி நிரப்பி, 10 மிடம் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். இதனுடன் சர்க்கரை, நெய், ஏலக்காய்த்தூள், நறுக்கிய வாழைப்பழம் கலந்து பரிமாறவும்.

கொத்தமல்லி இடியாப்பம்

தேவையானவை: இடியாப்பம் (உதிர்த்தது) – 2 கப்.

அரைக்க: கொத்தமல்லி, புதினா – தலா அரை கட்டு, சிறிய பச்சை மிளகாய் – 3, எலுமிச்சைச் சாறு – சிறிதளவு, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, பெருங்காயத்தூள், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்து, உதிர்த்த இடியாப்பத்துடன் சேர்த்து நன்கு கலக்கவும். தாளிக்கும் பொருட்க¬ளைத் தாளித்து இதனுடன் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

கார ராகி ரோல்ஸ்

தேவையானவை: கேழ்வரகு மாவு – ஒரு கப், சிறிய பச்சை மிள காய் – 4 (விழுதாக்கவும்), பெருங் காயத்தூள், உப்பு – சிறிதளவு.

பூரணம்: துருவிய சீஸ் – 200 கிராம், மிளகுத்தூள் – அரை டீஸ் பூன், உப்பு – சிறிதளவு, நறுக்கிய கொத்தமல்லி – கைப்பிடி அளவு.

செய்முறை: பூரணத்துக்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை கலந்துகொள்ளவும். கேழ்வரகு மாவுடன் சிறிதளவு நீர், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கரைத்து, பச்சை மிளகாய் விழுது சேர்த்துக் கலக்கவும். ஒரு சிறிய கரண்டி மாவை எடுத்து வாழை இலையில் மெல்லிய சிறிய தோசைகளாக ஊற்றி, ஆவியில் 3 நிடம் வேகவிட்டு எடுக்கவும். வெந்த கேழ்வரகு தோசைகளின் உள்ளே பூரணத்தை நிரப்பி, அப்படியே பாய் போல் சுருட்டி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

ஸ்வீட் ராகி ரோல்ஸ்

தேவையானவை: கேழ்வரகு மாவு – ஒரு கப், சர்க்கரை – கால் கப், தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் – வறுத்த முந்திரி, உலர் திராட்சை – தேவையான அளவு, உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: கேழ்வரகு மாவை சிறிதளவு நீர், உப்பு சேர்த்து தோசை மாவு போல் 3 நிமிடம் கரைத்துக்கொள்ளவும். ஒரு சிறிய கரண்டி மாவு எடுத்து வாழை இலையில் மெல்லிய சிறிய தோசைகளாக ஊற்றி, ஆவியில் 3 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும். சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும். இந்த பூரணத்தை ஆவியில் வெந்த கேழ்வரகு தோசைகளின் உள்ளே நிரப்பி, அப்படியே பாய் போல் சுருட்டி பரிமாறவும்.

தொகுப்பு: பத்மினி
படங்கள்: எம்.உசேன் டெகரேஷன்: ‘செஃப்’ ரஜினி
நன்றி: அவள் விகடன்


ஆரோக்கிய உணவுகள்'s photo.
ஆரோக்கிய உணவுகள்'s photo.

परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

பித்ரு தோஷம் தீர நீங்கள் உங்கள் சௌகரியப் படி செய்துகொள்ளுங்கள்.அதிகம் உள்ளவர்கள், அ திகமாக செய்யுங்கள்……..


பித்ரு தோஷம் தீர நீங்கள் உங்கள் சௌகரியப்படி செய்துகொள்ளுங்கள்.அதிகம் உள்ளவர்கள், அதிகமாக செய்யுங்கள்…………………………………………………………………………………………………………….

…..பட்டினி கிடப்பவனுக்கு காசு கொடுக்காமல் சாப்பாடு போடுதல் -உங்கள் வர்கத்தில் 3 தலைமுறை பித்ருக்கள் திருப்தி அடைவர்………..

நீங்கள் புண்ணிய நதிகளில் நீராடினால், முறையாக, – 3தலைமுரை திருப்தி அடைவார்கள்…………..

ஒரு மிகவும் ஏழை பெண்ணிற்கு,நீங்களே, அனைத்து செலவும் செய்து திருமணம் செய்துவைதீர்கலானால் – 5 தலைமுறை தோஷம் போகும்.

வருமானம் இல்லாத கோயிலில் காலை மாலை முழுவதும் விளக்கு எரிய விட்டால்(கரண்ட் விளக்கு கணக்கில் கிடையாது ) 5 தலைமுறை திருப்தி அடைவார்கள்.

யாராவது ஒருவர், தனது பித்ருவுக்கு, தெவசம், செய்ய இயலாதவராக இருந்தால், அவருக்கு, அன்று ஒரு நாள் மட்டும் ஆகும் செலவை அவருக்கு கொடுத்து, அவரின் தந்தைக்கு தெவசம் செய்ய வைத்தால், உங்கள் பிதுருக்கள் 6 தலைமுறை பாபம் போகவைப்பார்கள்.

பாழடைந்த கோயில்களை, சீரமைப்பு செய்தால், 7 தலைமுறை தோஷம் போகும். புது கோயிலுக்கு கணக்கு வராது.

முன்பின் தெரியாத, ஒரு அனாதை, இறந்துவிட்டால், அந்துடம்பை அந்திமக்கிரியை செய்பவர்களுக்கு 9 தலைமுறை தோஷம் போய்விடும்.

எவென் ஒருவன் பசுவை காப்பாற்றுகிறானோ, அதாவது, அதற்க்கு மருத்துவம் பார்த்தல், ஆகாரம் கொடுத்தல்,(பால் நின்றுபோனபிறகும்) இயற்கையாக இறக்கும்வரை, அதை விற்காமல் பாதுகாத்தல், 15 தலைமுறை தோஷம் விலகி, பித்ரு திருப்தி அடைந்து,சந்தோஷம்வந்துவிடும்.

இந்த உலகத்தில், எந்த பேரன் அல்லது மகன் கயா சென்று எட்டுநாள் தங்கி 64 பிண்டங்கள் இடுகிரானோ, அவன் 21 தலைமுறை பித்ருவை காப்பாற்றுகிறான். இவனும் நலமாக இருப்பன்



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

அரேபிய அடிமையும் அஞ்சு வயது குழந்தையும்.


நேற்று கோவை காந்திபுரத்தில் இஸ்ரேலை எதிர்த்து இவர்களின் மதரீதியான‌ ஆர்பாட்டத்தை பார்த்ததில் இருந்து கொதிப்பாக உள்ளது. மன ஆறுதலுக்கு பழைய பதிவுகளை பகிர்ந்துக் கொள்கிறேன்.

அரேபிய அடிமையும் அஞ்சு வயது குழந்தையும். அரேபிய அடிமைகளின் பல முதிர்ச்சி இல்லாத பாலைவன கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னால் அது பெரும் தவறல்லவா நண்பர்களே ? இவர்களுக்கு பதில் சொல்ல ஒரு குழந்தை போதுமே ? கீழே அரேபிய அடிமையின் கேள்விகளும், அஞ்சு வயது குழந்தையின் பதில்களும். அரேபிய அடிமை : ஏய் பாப்பா, கல்லை போய் வணங்குகிறாயே ? அது தவறல்லவா ? குழந்தை : அப்படியா ? சரி மாமா, எனக்கு உங்கள் பாக்கேட்டில் உள்ள பேப்பர கொடுங்க. நிறைய வெச்சுருக்கீங்களே ? அ அ : அது பேப்பர் இல்லை, ரூபாய்கள் !! குழந்தை : மாமா, ஒரு பேப்பர் மட்டும் ரூபாயா மாறும் போது, ஒரு சிலை நாம செய்ற பிரார்தனையினால் ஏன் தெய்வமாக மாறக் கூடாது ? அ அ : அப்படியா, அவ்வாறு நீ இனை வைத்தால், அல்லா உன்னை நரக நெருப்பில் எரிப்பார் பரவாயில்லையா ? குழந்தை : நல்லவனுக்கு சாமி நல்லவனா தெரியறான். கெட்டவனுக்கோ அவனை மாதிரியே கெட்டவனா தெரியறான். நீங்க நல்லவனா கெட்டவனா மாமா ? அ அ : ஒரே ஒரு இறைவனைத்தான் வணங்க வேண்டும். இப்படியா பல பெயர்களில், பல உருவங்களில் வணங்குவது ? குழந்தை : மாமா, உங்கள் அப்பாக்கு நீங்க பையன், உங்கள் பையனுக்கு நீங்க அப்பா, உங்கள் அண்ணாக்கு தம்பி, உங்க தம்பிக்கு அண்ணன், உங்கள் அண்ணா பையனுக்கு சிற்றப்பா, உங்கள் தம்பி பையனுக்கு பெரியப்பா, உங்க தாத்தாவுக்கு பேரன், உங்க பேரணுக்கு தாத்தா. நீங்கள் ஒருத்தர் தானே ? ஆனால் பல பேருக்கு பலர் மாதிரி இருக்கீங்களே ? அப்ப கோடிக்கணக்கான உலக‌ங்களுக்கு தலைவனை எத்தனை பேர எப்படி எல்லாம் பார்ப்பாங்க ? அதுல என்ன மாமா தவறு ? அ அ : படைத்தவனை தான் வணங்கனும், படைப்புகளை வணங்கக் கூடாது ? குழந்தை : மாமா, படைச்சதும் சாமிதான், படைப்புகளா இருக்கிறதும் சாமிதான். நம்மகுள்ள உண்மையா இருக்கிறது கூட அந்த சாமிதான். இதை தெரிஞ்சுக்கிறது தானே ஆன்மீகம் ? அவன் இல்லாம ஒரு அணுவும் அசையாது மாமா !! நமக்கு சாமி எப்படி இருந்தா நல்லாருக்கும்னு நினைக்கிறோமோ அப்படி ஒரு உருவத்தை செஞ்சு கும்பிட்டா போதும், எல்லா இடத்திலும் இருக்கிற அந்த சாமி அந்த உருவத்துல‌ வந்து நமக்கு அருள் தருவார். உருவத்திற்கு அருவத்திற்கு அப்பாற்பட்ட அந்த‌ சாமியை, ஒரு உருவத்துக்குள்ள வர சொல்லி பிரார்த்தனை செஞ்சு, நாம‌ கும்பிடறதுதான் வணங்குதல். அ அ : உருவ வழிபாடு தவறானது, அருவ வழிபாடே சிறந்தது. குழந்தை : சாமிக்கு ஏது மாமா அருவம், உருவம் எல்லாம் ? நம்ம கண்ணால பார்க்க முடிஞ்சா அது உருவம், கண்ணால பார்க்க முடியாதது அருவம். எல்லையில்லாத அந்த சக்தியை நீங்க உருவப்படுத்தி கண்ணால் பார்கலாம், ஒலிப்படுத்தி அவன் நாமத்தை வாயால் சொல்லலாம், இனிய வாசனையாய் நினைச்சு மூக்கால அவனை நுகரலாம். மத்தவங்க அவன் நாமத்தை சொல்ல நாம காதால கேட்கலாம். அவனை உருவகப்படுத்தி கைகளால் தொட்டு வணங்கலாம். அ அ : மிகப்பெறும் தவறு, இறைவனை கண்களால் பார்க்க முடியாது !! அவனுக்கு உருவம் இல்லை. குழந்தை : உருவமில்லாத இறைவனுக்கு காது மட்டும் கேட்குமா மாமா ? தின‌மும் நீங்க கத்தி கத்தி கும்பிடுறீங்களே ? அ அ : ????????????, இதோ வந்திடுறேன் அவசரமா வேலை இருக்கு.

Sarvam KrishnarpanamDHARM [Dharma & Hindu Awareness Resurgence Movement]

அரேபிய அடிமையும் அஞ்சு வயது குழந்தையும்.

அரேபிய அடிமைகளின் பல முதிர்ச்சி இல்லாத பாலைவன கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னால் அது பெரும் தவறல்லவா நண்பர்களே ? இவர்களுக்கு பதில் சொல்ல ஒரு குழந்தை போதுமே ? கீழே அரேபிய அடிமையின் கேள்விகளும், அஞ்சு வயது குழந்தையின் பதில்களும்.

அரேபிய அடிமை : ஏய் பாப்பா, கல்லை போய் வணங்குகிறாயே ? அது தவறல்லவா ?

குழந்தை : அப்படியா ? சரி மாமா, எனக்கு உங்கள் பாக்கேட்டில் உள்ள பேப்பர கொடுங்க. நிறைய வெச்சுருக்கீங்களே ?

அ அ : அது பேப்பர் இல்லை, ரூபாய்கள் !!

குழந்தை : மாமா, ஒரு பேப்பர் மட்டும் ரூபாயா மாறும் போது, ஒரு சிலை நாம செய்ற பிரார்தனையினால் ஏன் தெய்வமாக மாறக் கூடாது ?

அ அ : அப்படியா, அவ்வாறு நீ இனை வைத்தால், அல்லா உன்னை நரக நெருப்பில் எரிப்பார் பரவாயில்லையா ?

குழந்தை : நல்லவனுக்கு சாமி நல்லவனா தெரியறான். கெட்டவனுக்கோ அவனை மாதிரியே கெட்டவனா தெரியறான். நீங்க நல்லவனா கெட்டவனா மாமா ?

அ அ : ஒரே ஒரு இறைவனைத்தான் வணங்க வேண்டும். இப்படியா பல பெயர்களில், பல உருவங்களில் வணங்குவது ?

குழந்தை : மாமா, உங்கள் அப்பாக்கு நீங்க பையன், உங்கள் பையனுக்கு நீங்க அப்பா, உங்கள் அண்ணாக்கு தம்பி, உங்க தம்பிக்கு அண்ணன், உங்கள் அண்ணா பையனுக்கு சிற்றப்பா, உங்கள் தம்பி பையனுக்கு பெரியப்பா, உங்க தாத்தாவுக்கு பேரன், உங்க பேரணுக்கு தாத்தா. நீங்கள் ஒருத்தர் தானே ? ஆனால் பல பேருக்கு பலர் மாதிரி இருக்கீங்களே ? அப்ப கோடிக்கணக்கான உலக‌ங்களுக்கு தலைவனை எத்தனை பேர எப்படி எல்லாம் பார்ப்பாங்க ? அதுல என்ன மாமா தவறு ?

அ அ : படைத்தவனை தான் வணங்கனும், படைப்புகளை வணங்கக் கூடாது ?

குழந்தை : மாமா, படைச்சதும் சாமிதான், படைப்புகளா இருக்கிறதும் சாமிதான். நம்மகுள்ள உண்மையா இருக்கிறது கூட அந்த சாமிதான். இதை தெரிஞ்சுக்கிறது தானே ஆன்மீகம் ? அவன் இல்லாம ஒரு அணுவும் அசையாது மாமா !! நமக்கு சாமி எப்படி இருந்தா நல்லாருக்கும்னு நினைக்கிறோமோ அப்படி ஒரு உருவத்தை செஞ்சு கும்பிட்டா போதும், எல்லா இடத்திலும் இருக்கிற அந்த சாமி அந்த உருவத்துல‌ வந்து நமக்கு அருள் தருவார். உருவத்திற்கு அருவத்திற்கு அப்பாற்பட்ட அந்த‌ சாமியை, ஒரு உருவத்துக்குள்ள வர சொல்லி பிரார்த்தனை செஞ்சு, நாம‌ கும்பிடறதுதான் வணங்குதல்.

அ அ : உருவ வழிபாடு தவறானது, அருவ வழிபாடே சிறந்தது.

குழந்தை : சாமிக்கு ஏது மாமா அருவம், உருவம் எல்லாம் ? நம்ம கண்ணால பார்க்க முடிஞ்சா அது உருவம், கண்ணால பார்க்க முடியாதது அருவம். எல்லையில்லாத அந்த சக்தியை நீங்க உருவப்படுத்தி கண்ணால் பார்கலாம், ஒலிப்படுத்தி அவன் நாமத்தை வாயால் சொல்லலாம், இனிய வாசனையாய் நினைச்சு மூக்கால அவனை நுகரலாம். மத்தவங்க அவன் நாமத்தை சொல்ல நாம காதால கேட்கலாம். அவனை உருவகப்படுத்தி கைகளால் தொட்டு வணங்கலாம்.

அ அ : மிகப்பெறும் தவறு, இறைவனை கண்களால் பார்க்க முடியாது !! அவனுக்கு உருவம் இல்லை.

குழந்தை : உருவமில்லாத இறைவனுக்கு காது மட்டும் கேட்குமா மாமா ? தின‌மும் நீங்க கத்தி கத்தி கும்பிடுறீங்களே ?

அ அ : ????????????, இதோ வந்திடுறேன் அவசரமா வேலை இருக்கு.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

பொதுஅறிவு:-


பொதுஅறிவு:-

* நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.

* சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால்தான் இந்த முறைக்கு ‘சீசரியன்’ என்று பெயர் வந்தது.

* பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

* நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்கும்.

* கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு – இதயம் மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு – இதயம்.

* மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன.

* ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள்.

* மார்க்கோ போலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல்
உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார்.

* பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம்.
சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும்.

* உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம்
இரண்டே அங்குலம் தான்.

* ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூசணி
பழங்களை உற்பத்தி செய்து விடலாம்.

* பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற
ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது.

* பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு
அதிகமாக இருக்கும்.

* நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.

* நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன்
இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும்.

* யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி
வரும் விடையே – யானையின் உயரம்.

* ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால்
நிரப்ப முடியும்.

* தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் – மனிதன்.

* முன்னால் பின்னால் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும்
பறக்க முடிந்த பறவை – தேன்சிட்டு.

* தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்ற பறவைகளுக்கு நடக்கத் தெரியாது

பொதுஅறிவு:- * நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது. * சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால்தான் இந்த முறைக்கு ‘சீசரியன்’ என்று பெயர் வந்தது. * பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது. * நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்கும். * கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம் மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு - இதயம். * மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன. * ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள். * மார்க்கோ போலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார். * பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும். * உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான். * ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூசணி பழங்களை உற்பத்தி செய்து விடலாம். * பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது. * பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும். * நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை. * நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும். * யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின் உயரம். * ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும். * தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் - மனிதன். * முன்னால் பின்னால் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை - தேன்சிட்டு. * தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்ற பறவைகளுக்கு நடக்கத் தெரியாது



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

जानिए क्या है “रक्षा बंधन”-


जानिए क्या है "रक्षा बंधन"-
==================
रक्षाबंधन कब प्रारम्भ हुआ इसके विषय में कोई निश्चित कथा नहीं है लेकिन जैसा कि भविष्य पुराण में लिखा है, उसके अनुसार सबसे पहले इन्द्र की पत्नी ने देवराज इन्द्र को देवासुर संग्राम में असुरों पर विजय पाने के लिए मंत्र से सिद्ध करके रक्षा सूत्र बंधा था। इससे सूत्र की शक्ति से देवराज युद्ध में विजयी हुए। एक बार बाली रसातल में चला गया तब बलि ने अपनी भक्ति के बल से भगवान को रात-दिन अपने सामने रहने का वचन ले लिया। भगवान के घर न लौटने से परेशान लक्ष्मी जी ने राजा बलि के पास जाकर उसे रक्षाबन्धन बांधकर अपना भाई बनाया और अपने पति भगवान बलि को अपने साथ ले आयीं। उस दिन श्रावण मास की पूर्णिमा तिथि थी।
वैदिक रक्षाबंधन- प्यारे भारतीयो
प्रतिवर्ष श्रावणी-पूर्णिमा को रक्षाबंधन का त्यौहार होता है, इस दिन बहनें अपने भाई को रक्षा-सूत्र बांधती हैं । यह रक्षा सूत्र यदि वैदिक रीति से बनाई जाए तो शास्त्रों में उसका बड़ा महत्व है ।
वैदिक रक्षा सूत्र बनाने की विधि :-
इसके लिए ५ वस्तुओं की आवश्यकता होती है –
(१) दूर्वा (घास) (२) अक्षत (चावल) (३) केसर (४) चन्दन (५) सरसों के दाने
इन ५ वस्तुओं को रेशम के कपड़े में लेकर उसे बांध दें या सिलाई कर दें, फिर उसे कलावा में पिरो दें, इस प्रकार वैदिक राखी तैयार हो जाएगी ।
इन पांच वस्तुओं का महत्त्व –
(१) दूर्वा – जिस प्रकार दूर्वा का एक अंकुर बो देने पर तेज़ी से फैलता है और हज़ारों की संख्या में उग जाता है, उसी प्रकार मेरे भाई का वंश और उसमे सदगुणों का विकास तेज़ी से हो। सदाचार, मन की पवित्रता तीव्रता से बदता जाए । दूर्वा गणेश जी को प्रिय है, अर्थात हम जिसे राखी बाँध रहे हैं, उनके जीवन में विघ्नों का नाश हो जाए ।
(२) अक्षत – हमारी गुरुदेव के प्रति श्रद्धा कभी क्षत-विक्षत ना हो सदा अक्षत रहे।
(३) केसर – केसर की प्रकृति तेज़ होती है अर्थात हम जिसे राखी बाँध रहे हैं, वह तेजस्वी हो । उनके जीवन में आध्यात्मिकता का तेज, भक्ति का तेज कभी कम ना हो।
(४) चन्दन – चन्दन की प्रकृति तेज होती है और यह सुगंध देता है । उसी प्रकार उनके जीवन में शीतलता बनी रहे, कभी मानसिक तनाव ना हो । साथ ही उनके जीवन में परोपकार, सदाचार और संयम की सुगंध फैलती रहे।
(५) सरसों के दाने – सरसों की प्रकृति तीक्ष्ण होती है अर्थात इससे यह संकेत मिलता है कि समाज के दुर्गुणों को, कंटकों को समाप्त करने में हम तीक्ष्ण बनें।
इस प्रकार इन पांच वस्तुओं से बनी हुई एक राखी को सर्वप्रथम गुरुदेव के श्री-चित्र पर अर्पित करें । फिर बहनें अपने भाई को, माता अपने बच्चों को, दादी अपने पोते को शुभ संकल्प करके बांधे।
महाभारत में यह रक्षा सूत्र माता कुंती ने अपने पोते अभिमन्यु को बाँधी थी । जब तक यह धागा अभिमन्यु के हाथ में था तब तक उसकी रक्षा हुई, धागा टूटने पर अभिमन्यु की मृत्यु हुई।
इस प्रकार इन पांच वस्तुओं से बनी हुई वैदिक राखी को शास्त्रोक्त नियमानुसार बांधते हैं हम पुत्र-पौत्र एवं बंधुजनों सहित वर्ष भर सूखी रहते हैं।
रक्षा सूत्र बांधते समय ये श्लोक बोलें –
येन बद्धो बलि राजा, दानवेन्द्रो महाबलः ।
तेन त्वाम रक्ष बध्नामि, रक्षे माचल माचल: ।

http://www.sspujjain.org/ जानिए क्या है "रक्षा बंधन"- ================== रक्षाबंधन कब प्रारम्भ हुआ इसके विषय में कोई निश्चित कथा नहीं है लेकिन जैसा कि भविष्य पुराण में लिखा है, उसके अनुसार सबसे पहले इन्द्र की पत्नी ने देवराज इन्द्र को देवासुर संग्राम में असुरों पर विजय पाने के लिए मंत्र से सिद्ध करके रक्षा सूत्र बंधा था। इससे सूत्र की शक्ति से देवराज युद्ध में विजयी हुए। एक बार बाली रसातल में चला गया तब बलि ने अपनी भक्ति के बल से भगवान को रात-दिन अपने सामने रहने का वचन ले लिया। भगवान के घर न लौटने से परेशान लक्ष्मी जी ने राजा बलि के पास जाकर उसे रक्षाबन्धन बांधकर अपना भाई बनाया और अपने पति भगवान बलि को अपने साथ ले आयीं। उस दिन श्रावण मास की पूर्णिमा तिथि थी। वैदिक रक्षाबंधन- प्यारे भारतीयो प्रतिवर्ष श्रावणी-पूर्णिमा को रक्षाबंधन का त्यौहार होता है, इस दिन बहनें अपने भाई को रक्षा-सूत्र बांधती हैं । यह रक्षा सूत्र यदि वैदिक रीति से बनाई जाए तो शास्त्रों में उसका बड़ा महत्व है । वैदिक रक्षा सूत्र बनाने की विधि :- इसके लिए ५ वस्तुओं की आवश्यकता होती है - (१) दूर्वा (घास) (२) अक्षत (चावल) (३) केसर (४) चन्दन (५) सरसों के दाने इन ५ वस्तुओं को रेशम के कपड़े में लेकर उसे बांध दें या सिलाई कर दें, फिर उसे कलावा में पिरो दें, इस प्रकार वैदिक राखी तैयार हो जाएगी । इन पांच वस्तुओं का महत्त्व - (१) दूर्वा - जिस प्रकार दूर्वा का एक अंकुर बो देने पर तेज़ी से फैलता है और हज़ारों की संख्या में उग जाता है, उसी प्रकार मेरे भाई का वंश और उसमे सदगुणों का विकास तेज़ी से हो। सदाचार, मन की पवित्रता तीव्रता से बदता जाए । दूर्वा गणेश जी को प्रिय है, अर्थात हम जिसे राखी बाँध रहे हैं, उनके जीवन में विघ्नों का नाश हो जाए । (२) अक्षत - हमारी गुरुदेव के प्रति श्रद्धा कभी क्षत-विक्षत ना हो सदा अक्षत रहे। (३) केसर - केसर की प्रकृति तेज़ होती है अर्थात हम जिसे राखी बाँध रहे हैं, वह तेजस्वी हो । उनके जीवन में आध्यात्मिकता का तेज, भक्ति का तेज कभी कम ना हो। (४) चन्दन - चन्दन की प्रकृति तेज होती है और यह सुगंध देता है । उसी प्रकार उनके जीवन में शीतलता बनी रहे, कभी मानसिक तनाव ना हो । साथ ही उनके जीवन में परोपकार, सदाचार और संयम की सुगंध फैलती रहे। (५) सरसों के दाने - सरसों की प्रकृति तीक्ष्ण होती है अर्थात इससे यह संकेत मिलता है कि समाज के दुर्गुणों को, कंटकों को समाप्त करने में हम तीक्ष्ण बनें। इस प्रकार इन पांच वस्तुओं से बनी हुई एक राखी को सर्वप्रथम गुरुदेव के श्री-चित्र पर अर्पित करें । फिर बहनें अपने भाई को, माता अपने बच्चों को, दादी अपने पोते को शुभ संकल्प करके बांधे। महाभारत में यह रक्षा सूत्र माता कुंती ने अपने पोते अभिमन्यु को बाँधी थी । जब तक यह धागा अभिमन्यु के हाथ में था तब तक उसकी रक्षा हुई, धागा टूटने पर अभिमन्यु की मृत्यु हुई। इस प्रकार इन पांच वस्तुओं से बनी हुई वैदिक राखी को शास्त्रोक्त नियमानुसार बांधते हैं हम पुत्र-पौत्र एवं बंधुजनों सहित वर्ष भर सूखी रहते हैं। रक्षा सूत्र बांधते समय ये श्लोक बोलें - येन बद्धो बलि राजा, दानवेन्द्रो महाबलः । तेन त्वाम रक्ष बध्नामि, रक्षे माचल माचल: ।



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

ஸ்ரீ வரலட்சுமி விரதம், பூஜை முறை


ஸ்ரீ வரலட்சுமி விரதம், பூஜை முறை
மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதர், தன் வரலக்ஷ்மி நமஸ்துப்யம் க்ருதியில் இந்த விரதத்தைப் பற்றிப் பாடியிருக்கிறார்.
வரலட்சுமி விரதத்துக்கு புராணக் கதைகள் உண்டு. அன்னை பார்வதியின் சாபத்துக்கு ஆளான தேவர் உலகின் சித்ரநேமி என்ற கணதேவதை, அப்சரஸ் பெண்கள் கடைப்பிடித்த வரலட்சுமி விரதத்தைக் கண்டு அனுஷ்டித்து சாப விமோசனம் பெற்றார்.
பூவுலகில் சௌராஷ்டிர நாட்டின் ராணி சுசந்திரா, செல்வ வளத்தின் மமதையால், மகாலட்சுமியை அவமதித்தாள். அதனால், அனைத்து செல்வங்களையும் இழந்து வருந்தினாள். சுசந்திராவின் மகள் சாருமதி, தெய்வ அனுகூலத்தால் வரலட்சுமி விரதம் பற்றி அறிந்து, அதைக் கடைப்பிடித்தாள். அதனால் மகிழ்ந்த மகாலட்சுமித் தாய், அவளுக்கு சகல நலன்களையும் அருளினாள். சுசந்திராவும் தன் மகளைப் பார்த்து வரலட்சுமி விரதம் கடைப்பிடித்து, இழந்த செல்வத்தை மீண்டும் பெற்று வளமோடு வாழ்ந்தாள்.
இப்படி சகல வளங்களையும் தரும் இந்த வரலட்சுமி விரத பூஜையை, ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும். முக்கியமாகச் செய்ய வேண்டியவர்கள் பெண்கள்! சுமங்கலிகள், தாலி பாக்கியத்துக்காகவும், சுபிட்சம், சௌபாக்கியம் போன்றவற்றுக்காகவும் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
கேட்கும் வரங்களைத் தரும் லட்சுமிதேவியை பூஜித்தல் இதன் சிறப்பு . திருமணமான பெண்கள், தங்கள் திருமணத்தை அடுத்துவரும் வரலட்சுமி பூஜையிலிருந்து இதை ஒவ்வொரு வருடமும் செய்யவேண்டும். வரலட்சுமி விரதத்தின் போது வீட்டுக்கு விலக்காக இருந்தால் அடுத்துவரும் வெள்ளிக்கிழமை இந்த பூஜையைச் செய்யலாம். இதைச் செய்யும்போது, சிறு பெண்களும் உடனிருந்து சரடைக் கட்டிக் கொள்ளலாம். மறுநாள் அம்மனுக்கு ஆரத்தி எடுத்த பின்னர் கலசத்தை அரிசி வைத்திருக்கும் பானையில் வைக்கவேண்டும்.
எல்லோராலும் மிக விரிவாகச் செய்ய இயலாவிட்டாலும், ஈடுபாட்டோ டு தெரிந்த பாடல்களைப் பாடி, மகாலட்சுமி அஷ்டோ த்திரம் சொல்லி, பூக்களால் அர்ச்சனை செய்து, நிவேதனம் செய்து, நோன்பு சரடை கையில் கட்டி நிவேதனத்தை எல்லோருக்கும் கொடுத்து, வயதான சுமங்கலிப் பெண்களை வணங்கி தானங்கள் செய்து இந்த விரத பூஜையை நிறைவு செய்யலாம்.
கொஞ்சம் சாஸ்திரோக்தமாக விரதமிருந்து பூஜையைச் செய்ய விரும்பினால், விக்னேஸ்வர பூஜை தொடங்கி, சங்கல்பம், கலச பூஜை, பிராணப்ரதிஷ்டை, தியானம், ஷோடசோபசாரம், அங்க பூஜை, லட்சுமி அஷ்டோ த்ரம், தோரக்ரந்தி பூஜை, பிரார்த்தனை, ஆரத்தி என்று விரிவாகச் செய்ய வேண்டும்.

பூஜைக்குத் தேவையானவை :
மஞ்சள் பொடி (பிள்ளையார் பிடிக்க), நுனிவாழை இலை, அரிசி, தேங்காய், எலுமிச்சம்பழம், குங்குமம், சந்தனம், புஷ்ப வகைகள், வெற்றிலை, பாக்கு, பழம், கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, அட்சதை, வஸ்திரம், மஞ்சள் சரடுகள், பஞ்சாமிர்தம், குத்துவிளக்கு, திரிநூல், நல்லெண்ணெய், தீப்பெட்டி, தாம்பாளம், பஞ்சபாத்ரம், உத்தரிணி, கிண்ணம், கற்பூரத் தட்டு, தூபக்கால், தீபக்கால், மணி ஆகியவை.
நிவேதனப் பொருள்கள்:
பொங்கல், பாயசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு.

பழ வகைகள்:
ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், வாழை, திராட்சை…

பூஜைக்கான முன்னேற்பாடுகள்:
வீட்டின் கிழக்கு திசையில் ஈசான்ய மூலையில், பூஜைக்கான இடத்தை அமைத்து, நன்றாக மெழுகி, கோலமிட்டு, மண்டபம் அமைத்து, அலங்கரிக்கவும். மண்டபத்தின் கீழ் நுனி வாழை இலையில் நெல்லைப் பரப்பி, அதன் மீது ஒரு தட்டில் அரிசியை வைக்க வேண்டும். அதன் மேல் கலச கும்பத்தை வைக்க வேண்டும். அரிசி, தங்கம், ரத்தினம் ஆகியவற்றை கும்பத்தில் நிரப்பவும் (தீர்த்தத்தையும் நிரப்பலாம்). மேலே மாவிலைக் கொத்தும் தேங்காயும் வைத்து அலங்கரித்து, புதிய வஸ்திரம் சாற்றி, தங்கம் அல்லது வெள்ளியால் செய்யப்பட்ட நான்கு கரங்கள் கொண்ட மகாலட்சுமியின் பிரதிமை பிம்பத்தை (முக பிம்பத்தையும் வைக்கலாம்) மேலே வைத்து பூக்கள் சூட்டி அலங்கரிக்கவும்.
(சில இடங்களில் வீட்டின் பூஜை அறை ஒட்டிய சுவரில் வெள்ளை அடித்து அம்மனின் திருவுருவத்தை எழுதி ஆவாஹணம் செய்கிறார்கள். பூஜைக்காக வைக்கப்படும் கலசத்தில் காதோலை, கருமணி, எலுமிச்சம்பழம் முதலியவையும் போடப்படுகிறது.)
பூஜையின் முடிவில் மஞ்சள் கயிறை(சரடு) கையில் கட்டிக் கொள்கிறார்கள். மஞ்சள் கயிறு மங்கலத்தின் அறிகுறி. அஷ்ட லட்சுமிகளுடன் வரலட்சுமியையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகள் என்று சாஸ்திரம் சொல்கிறது. எனவே, ஒன்பது நூல் இழைகளால் ஆன, ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்புக் கயிறை (சரடை) பூஜையில் வைக்க வேண்டும்.
விரதம் மேற்கொள்ளும் வெள்ளிக்கிழமை காலை 10.30க்கு முன் & ராகு காலத்துக்கு முன் (சிலர் மாலை வேளையிலும் செய்வர்) ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி, அதன் மேல் கலசம் வைத்து, பழம் வெற்றிலை பாக்கு நிவேதனம் வைத்து, வாசலின் உள் நிலைப் படி அருகே நின்று கற்பூரம் காட்டி, ஆரத்தி எடுத்து மகாலட்சுமித் தாயை வீட்டுக்கு அழைத்து வருவதாக பாவனை செய்து, பயபக்தியுடனும் அழைத்து வந்து, அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் உள்ள கலசத்தில் வைத்திருக்கும் மகாலட்சுமி பிரதிமை பிம்பத்தில் இருந்து விரத பூஜையை ஏற்று அருள் புரியுமாறு மகாலட்சுமியை வேண்டிக் கொண்டு, ஆவாஹணம் செய்ய வேண்டும். அப்போது, மங்களகரமான தோத்திரங்களைச் சொல்லி, பாடல்களைப் பாட வேண்டும்.
பூஜைக்குத் தேவையானவற்றை அருகில் வைத்துக்கொண்டு பூஜையைத் தொடங்கவும். பஞ்சாங்கம் பார்த்து, நாள், திதி, வருடம், பட்சம், மாதம் ஆகியவற்றை அறிந்து குறித்துக் கொள்ளவும்.
மேற்கொள்ளப்படும் விரத பூஜை எந்தவித இடையூறுகளும் இல்லாமல் நன்கு நடைபெற வேண்டும் என்பதற்காக, விக்னங்களைக் களையும் விநாயகரை பூஜித்து, பிறகு வரலட்சுமி பூஜையைத் தொடங்க வேண்டும்.

விக்னேஸ்வர பூஜை
உத்தரணியில் தீர்த்தம் எடுத்து, வலது உள்ளங்கையில் விட்டுக் கொண்டு, ஓம் அச்சுதாய நம: / ஓம் அனந்தாய நம: / ஓம் கோவிந்தாய நம: என்று சொல்லி, மூன்றுமுறை உட்கொள்ள வேண்டும். இது ஆசமனம்.
கையில் அட்சதை, புஷ்பம் எடுத்துக் கொண்டு, சங்கல்பம் செய்யவும்.
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்|
ப்ரசன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே||
மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் கரிஷ்யமாணஸ்ய கர்மண: நிர்விக்னேன பரிஸமாப்த்யர்த்தம் ஆதௌ ஸ்ரீ
விக்னேஸ்வர பூஜாம் கரிஷ்யே||
– என்று சொல்லி, அட்சதை, புஷ்பத்தை முன்னால் சேர்க்கவும். விக்னேஸ்வரரை எழுந்தருளச் செய்யும் ஆசனத்தையும் மணியையும் பிரார்த்தனை செய்து புஷ்பத்தை சமர்ப்பிக்கவும். மணி அடிக்கவும். பின், பிடித்து வைத்த மஞ்சள் பிள்ளையாரை, விக்னேஸ்வரராக பாவனை செய்து, அதில் விக்னேஸ்வரர் எழுந்தருள பிரார்த்தனை செய்யவேண்டும்.
அஸ்மின் ஹரித்ரா பிம்பே ஸ்ரீ விக்னேஸ்வரம் த்யாயாமி / ஸ்ரீ மஹாகணபதிம் ஆவாஹயாமி & என்று சொல்லி, புஷ்பத்தை மஞ்சள் பிள்ளையாரிடம் சேர்ப்பிக்கவும்.
இனி ஒவ்வொரு முறையும் ஸ்ரீ மஹாகணபதயே நம: என்று சொல்லி, கீழ்க்காணும் மந்திரம் சொல்லி அந்தந்த செயல்களைச் செய்ய வேண்டும்.
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: ஆஸநம் சமர்ப்பயாமி|
பாதயோ: பாத்யம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்)
அர்க்யம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்)
ஆசமநீயம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்)
ஸ்நபயாமி| (ஸ்நானம் செய்வதாக பாவித்து தீர்த்தம் விடவும்)
ஸ்நானானந்தரம் ஆசமனீயம் சமர்ப்பயாமி| (தீர்த்தம் விடவும்)
வஸ்த்ரம் சமர்ப்பயாமி| (தீர்த்தம் விடவும்)
உபவீதம் சமர்ப்பயாமி| (தீர்த்தம் விடவும்)
திவ்ய பரிமள கந்தான் தாரயாமி| (குங்குமம், சந்தனம் போடவும்)
அட்சதான் சமர்ப்பயாமி| (அட்சதை போடவும்)
புஷ்பை: பூஜயாமி| (புஷ்பத்தை சேர்க்கவும்)
புஷ்பத்தை எடுத்துக்கொண்டு, விக்னேஸ்வர பிம்பத்துக்கு அர்ச்சனை செய்யவும்.
ஓம் சுமுகாய நம: |
ஓம் ஏகதந்தாய நம: |
ஓம் கபிலாய நம: |
ஓம் கஜகர்ணாய நம: |
ஓம் லம்போதராய நம: |
ஓம் விகடாய நம: |
ஓம் விக்னராஜாய நம: |
ஓம் விநாயகாய நம: |
ஓம் தூமகேதவே நம: |
ஓம் கணாத்யக்ஷாய நம: |
ஓம் பாலசந்த்ராய நம: |
ஓம் கஜானனாய நம: |
ஓம் வக்ரதுண்டாய நம: |
ஓம் சூர்ப்பகர்ணாய நம: |
ஓம் ஹேரம்பாய நம: |
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம: |
ஓம் ஸித்திவிநாயகாய நம: |
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம:
அர்ச்சனை செய்த பின், தூபம், தீபம் காட்டி, நிவேதனம் செய்ய வேண்டும்.
அம்ருதோபஸ்தரணமஸி |
ஓம் ப்ராணாய ஸ்வாஹா |
ஓம் அபாநாய ஸ்வாஹா |
ஓம் வ்யாநாய ஸ்வாஹா |
ஓம் உதாநாய ஸ்வாஹா |
ஓம் ஸமாநாய ஸ்வாஹா |
ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா |
மஹாகணபதயே நம:
அம்ருதம் நைவேத்யம் நிவேதயாமி |
அம்ருத பிதாநமஸி என்று நைவேதனம் செய்வித்து, கற்பூர நீராஜனம் செய்ய வேண்டும்…
பின், எல்லாக் காரியங்களிலும் எப்போதும் இடையூறுகள் இல்லாமல் செய்தருள வேண்டும் என்று விக்னேஸ்வரரை பிரார்த்திக்க வேண்டும்.
வக்ர துண்ட மஹாகாய சூர்ய கோடி ஸமப்ரப|
நிர்விக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா||
– என்று சொல்லி பிரார்த்தித்து நமஸ்காரம் செய்துவிட்டு, சங்கல்பம் செய்யவும். அடைப்புக் குறிக்குள்() இருப்பவை இந்த வருடத்துக்கான ( ) நாள் நட்சத்திரங்கள்…
சங்கல்பம்
சுபே சோபனே முஹூர்த்தே ஆத்ய ப்ரஹ்மண: த்விதீயபரார்த்தே, ச்வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வந்தரே, அஷ்டாவிம்சதிதமே, கலி யுகே, ப்ரதமே பாதே, ஜம்பூ த்வீபே, பாரத வர்ஷே, பரத கண்டே, மேரோர்& தக்ஷிணே பார்ச்வே, சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே, ப்ரபவாதி& ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே, ( )நாம ஸம்வத்ஸரே, ( )அயனே, ( )ருதௌ, ( )மாஸே, ( )பக்ஷே, ()சுபதிதௌ, ( )வாஸரயுக்தாயாம், ( )நக்ஷத்ர யுக்தாயாம், சுபயோக சுபகரண ஸகல விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் சுப திதௌ,
மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம், அஸ்மாகம் ஸஹகுடும்பானாம், க்ஷேம ஸ்தைர்ய வீர்ய விஜய ஆயுராரோக்ய ஐச்வர்ய அபிவ்ருத்யர்த்தம், ஸமஸ்த துரிதோப சாந்த்யர்த்தம், உசிதகாலே ஆயுஷ்மத்ஸுரூப சுகுணபுத்ர அவாப்த்யர்த்தம், தீர்க்க ஸௌமாங்கல்ய அவாப்த்யர்த்தம், அரோக திடகாத்ரதா ஸித்யர்த்தம் ஸ்ரீ வரலக்ஷ்மி ப்ரஸாத ஸித்த்யர்த்தம், யாவச்சக்தி த்யான&ஆவாஹனாதி ஷோடச உபசாரை: ஸ்ரீ வரலக்ஷ்மி பூஜாம் கரிஷ்யே| &
– என்று சங்கல்பித்து, அட்சதையை வடக்குப் புறம் சேர்க்கவும். உத்தரணி தீர்த்தத்தால் கையை துடைத்துக் கொண்டு, கையில் புஷ்பத்தை எடுத்துக்கொண்டு,

ஸ்ரீ விக்னேஸ்வரம் யதாஸ்தானம் பிரதிஷ்டாபயாமி |
சோபனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச ||
என்று சொல்லி மஞ்சள் பிள்ளையார் மீது சேர்த்து, மஞ்சள் பிள்ளையாரை வடக்குப் புறம் நகர்த்தி வைக்கவும்.
பின் கலச பூஜை செய்யவும். பஞ்சபாத்திரத்தை சந்தனம் குங்குமம் இட்டு, நீர் விட்டு, புஷ்பம் சேர்த்து, வலது கையால் மூடிக்கொண்டு,
கங்கே ச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி தாம்ரவர்ணீ
ஜலே அஸ்மின் ஸந்நிதிம் குரு||
என்று, புஷ்பார்ச்சனை செய்யவும்.

கங்காயை நம:|
யமுனாயை நம:|
கோதாவர்யை நம:|
ஸரஸ்வத்யை நம:|
நர்மதாயை நம:|
ஸிந்தவே நம:|
காவேர்யை நம:|
தாம்ரவர்ண்யை நம:
என்று பூஜித்து, தீர்த்தத்தை, பூஜைப் பொருள்கள், கும்பம் மற்றும் தங்கள் மீது தெளிக்கவும்.
குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணுர் குருர் தேவோ மஹேச்வர:|
குருஸ்ஸாக்ஷாத் பரம்ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீகுரவே நம:||
– என்று, குருவை தியானித்த பிறகு, ப்ராணப்ரதிஷ்டை செய்யவும்.

அஸ்ய ஸ்ரீ வரலக்ஷ்மி ப்ராணப்ரதிஷ்டா மஹாமந்த்ரஸ்ய,
ப்ரம்ம-விஷ்ணு -மஹேச்வரா ருஷய: (வலது கையை தலை உச்சியில் வைக்கவும்)
ருக் யஜூஸ் ஸாம அதர்வாணிச் சந்தாம்ஸி (கையால் மூக்கு நுனியில் தொடவும்)
ஸகல ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார காரிணீ ப்ராணா சக்தி: பரா தேவதா (ஹ்ருதயத்தில் தொடவும்)
ஆம் பீஜம், ஹ்ரீம் சக்தி:, க்ரோம் கீலகம்||
பிறகு, அங்கந்யாச கரந்யாசங்கள் செய்து தியானித்து, புஷ்பம் அட்சதையை தீர்த்தத்துடன் பின்வரும் மந்திரம் சொல்லி, கும்பத்திலுள்ள லக்ஷ்மி பிம்பத்தில் சேர்க்கவும்.
ஆவாஹிதோ பவ|
ஸ்தாபிதோ பவ|
ஸந்நிஹிதோ பவ|
ஸந்நிருத்தோ பவ|
அவகுண்டிதோ பவ|
ஸுப்ரீதோ பவ|
ஸுப்ரஸன்னோ பவ|
ஸுமுகோ பவ|
வரதோ பவ|
ப்ரஸீத ப்ரஸீத|
தேவி ஸர்வ ஜகன்நாயிகே யாவத் பூஜாவஸானகம்|
தாவத் த்வம் ப்ரீதி- பாவேன பிம்பே அஸ்மின் ஸந்நிதிம் குரு||
– இப்படி ப்ராணப்ரதிஷ்டை செய்து, புஷ்பம் அட்சதை, தீர்த்தம் விட்டு, பால் பழம் நிவேதித்து, வரலக்ஷ்மி பூஜையைத் தொடங்கவும்.

கும்பத்தில் வரலக்ஷ்மியை தியானிக்கவும்.
பத்மாஸனாம் பத்மகராம் பத்மமாலா விபூஷிதாம்|
க்ஷீர ஸாகர ஸம்பூதாம் க்ஷீரவர்ண ஸமப்ரபாம்|
க்ஷீரவர்ணஸமம் வஸ்த்ரம் ததானாம் ஹரிவல்லபாம்|
பாவயே பக்தி யோகேன கலசே அஸ்மின் மனோஹரே|
வரலக்ஷ்ம்யை நம:|
என்று சொல்லி புஷ்பத்தை சேர்க்க வேண்டும்.

பாலபானு பரதீகாசே பூர்ண சந்த்ர நிபானனே ஸூத்ரேஸ்மின் ஸுஸ்திதா
த்வா ப்ரயச்ச பஹுலான் வரான்||
என்று, 9 முடிச்சுகள் போட்ட சரடில் பூ முடித்து, கும்பத்தில் சாற்ற வேண்டும்.
ஸர்வ மங்கல மாங்கல்யே விஷ்ணு வக்ஷ: ஸ்தலாலயே|
ஆவாஹயாமி தேவித்வாம் அபீஷ்ட பலதா பவ||
வரலக்ஷ்மீம் ஆவாஹயாமி|
– என்று சொல்லி புஷ்பத்தை கும்பத்தில் சேர்த்து ஆவாஹனம் செய்யவும்.
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| பாத்யம் ஸமர்ப்பயாமி (தீர்த்தம் விடவும்)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| அர்க்யம் ஸமர்ப்பயாமி (புஷ்பத்துடன் தீர்த்தம் விடவும்)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| ஆசமனீயம் ஸமர்ப்பயாமி (தீர்த்தம் விடவும்)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி (தேன் கலந்த தயிர் நிவேதனம்)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| பஞ்சாம்ருதம் ஸமர்ப்பயாமி (பஞ்சமிர்த நிவேதனம்)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| ஸ்நானம் ஸமர்ப்பயாமி (தீர்த்த ப்ரோக்ஷணம்)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி (வஸ்திரம் அல்லது அட்சதை)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| கண்டஸூத்ரம் ஸமர்ப்பயாமி (கருகமணி/பனைஓலை அணிவிக்க)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| ஆபரணானி ஸமர்ப்பயாமி (ஆபரணங்கள் அணிவிக்கவும்)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| கந்தம் ஸமர்ப்பயாமி (சந்தனம் இடவும்)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| அக்ஷதான் ஸமர்ப்பயாமி ( அட்சதை சேர்க்கவும்)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| புஷ்பமாலாம் ஸமர்ப்பயாமி (புஷ்பம், மாலை சேர்க்கவும்)
பிறகு அங்க பூஜை செய்யவும்.
முழுதாகச் செய்யாவிடினும், மகாலட்சுமி பிம்பத்தின் பாதம் முதல் சிரசு வரை பூஜிப்பதாக பாவனை செய்து, ஓம் ஸர்வமங்களாயை நம: ஸர்வாண் அங்காநி பூஜயாமி என்று சொல்லி புஷ்பம் அட்சதை ஸமர்ப்பிக்கவும்.
பின், நூற்றியெட்டு போற்றி அல்லது அஷ்டோ த்ரசத நாமம் சொல்லி, புஷ்பம் அல்லது குங்கும அர்ச்சனை செய்யவும்.
ஸ்ரீ லக்ஷ்மி அஷ்டோத்ர சத நாமாவளி
(ஒவ்வொரு நாமாவளிக்கு முன்னும் ஓம் என்றும், பின்னர் நம: என்றும் சேர்த்துச் சொல்லவும்)

ஓம் ப்ரக்ருத்யை நம:

விக்ருத்யை

வித்யாயை

ஸர்வபூத ஹிதப்ரதாயை

ச்ரத்தாயை

விபூத்யை

ஸுரப்யை

பரமாத்யை

வாசே

பத்மாலயாயை

பத்மாயை

சுசயே

ஸ்வாஹாயை

ஸ்வதாயை

ஸுதாயை

தன்யாயை

ஹிரண்ம்யை

லக்ஷ்ம்யை

நித்யபுஷ்டாயை

விபாவர்யை

அதித்யை

தித்யை

தீப்தாயை

வஸுதாயை

வஸுதாரிண்யை

கமலாயை

காந்தாயை

காமாக்ஷ்யை

க்ரோதஸம்பவாயை

அனுக்ரஹப்ரதாயை

புத்தயே

அநகாயை

ஹரிவல்லபாயை

அசோகாயை

அம்ருதாயை

தீப்தாயை

லோகசோக விநாசின்யை

தர்மநிலயாயை

கருணாயை

லோகமாத்ரே

பத்மப்ரியாயை

பத்மஹஸ்தாயை

பத்மாக்ஷ்யை

பத்மஸுந்தர்யை

பத்மோத்பவாயை

பத்மமுக்யை

பத்மநாபப்ரியாயை

ரமாயை

பத்மமாலாதராயை

தேவ்யை

பத்மகந்தின்யை

புண்யகந்தாயை

ஸுப்ரஸன்னாயை

ப்ரஸாதாபிமுக்யை

ப்ரபாயை

சந்த்ரவதனாயை

சந்த்ராயை

சந்த்ரஸஹோதர்யை

சதுர்ப்புஜாயை

சந்த்ரரூபாயை

இந்திராயை

இந்துசீதளாயை

ஆஹ்லாத ஜனன்யை

புஷ்ட்யை

சிவாயை

சிவகர்யை

ஸத்யை

விமலாயை

விச்வஜனன்யை

துஷ்ட்யை

தாரிர்ய நாசின்யை

ப்ரீதிபுஷ்கரிண்யை

சாந்தாயை

சுக்லமால்யாம்பராயை

ச்ரியை

பாஸ்கர்யை

பில்வநிலயாயை

வராரோஹாயை

யசஸ்வின்யை

வஸுந்தராயை

உதாராங்காயை

ஹரிண்யை

ஹேமமாலின்யை

தனதான்யகர்யை

ஸித்தயே

ஸ்ரைண ஸெளம்யாயை

சுபப்ரதாயை

ந்ருபவேச்ம கதானந்தாயை

வரலக்ஷ்ம்யை

வஸுப்ரதாயை

சுபாயை

ஹிரண்யப்ராகாராயை

ஸமுத்ரதனயாயை

ஜயாயை

மங்களாதேவ்யை

விஷ்ணுவக்ஷஸ்தல ஸ்திதாயை

விஷ்ணுபத்ன்யை

ப்ரஸன்னாக்ஷ்யை

நாராயண ஸமாச்ரிதாயை

தாரிர்ய த்வம்ஸின்யை

தேவ்யை

ஸர்வோபத்ரவ வாரிண்யை

நவதுர்காயை

மஹாகாள்யை

ப்ரஹ்மவிஷ்ணு சிவாத்மிகாயை

ஸம்பன்னாயை

புவனேஸ்வர்யை

(108 அஷ்டோத்திர சத நாமாவளி முற்றும்)

Krishnamoorthi Balasubaramanian's photo.
Krishnamoorthi Balasubaramanian's photo.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE