அபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்
(Excerpts from the chapter APARA KARMA from the Tamil book titled வேதமும் பண்பாடும் by Sarma Sastrigal. ) இந்த அபர கர்மா மொத்தம் 12 நாட்கள் நடைபெறும் என்பது நாம் அறிந்ததே. சுபஸ்வீகாரத்துடன் சேர்த்தால் இது மொத்தம் 13 நாட்களாகும். * மிகவும் உயர்ந்தது: பித்ருகர்மாவை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். 1. உயிர் பிரிந்த நொடியிலிருந்து 12 நாட்கள் வரை செய்யப்படும் அபர கர்மா, 2. பிறகு தொடர்ந்து வருஷம்தோறும் அதே திதியில் செய்யும் சிராத்தம். முன்னது பிரேதத்திற்குப் பித்ரு நிலையைத் தருவது. இரண்டாவது பித்ரு நிலையில் உள்ளவருக்குத் த்ருப்தி அளிப்பது. * இந்த அபர கர்மாவில் ஜீவநாடியாக இருப்பவைகள் இரண்டு, 1. மந்திரங்களுடன் சேர்ந்த ப்ரயோகங்கள் ச்ரத்தையுடன் ..: முதலாவதைப் பற்றி கர்மாவை நடத்தும் சாஸ்திரிகள் பார்த்துக் கொள்ளுவார், நாம் அவருக்கு முழுமையான ஒத்துழைப்புத் தந்தால் போதுமானது. ஒத்துழைப்பு என்றால் அவர் சொல்லும் மந்திரத்தை கூடுமான வரையில் ஸ்வரத்துடன் திருப்பிச் சொல்ல முயற்சி செய்வதும், அவர் கூறுகிற நோத்தில் நாம் தயாராக இருந்து இடையூறுகள் ஏற்பட்டாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் ச்ரத்தையுடன் ப்ரயோகத்தை அவர் சொல்படி செய்வதும்தான். மனசு வர வேண்டும்: இரண்டாவதாக தானங்கள். இதன் அளவையும் தன்மையையும் கர்த்தா தான் முடிவு செய்ய வேண்டும். இது போதும் என்று யோசிக்காமல் முடிவு எடுத்தால் கர்மா நஷ்டமாக வாய்ப்பு உண்டு. இந்த நேரத்தில் செய்யும் தானங்கள் அளவிட முடியாத பலனைத் தரும் என்பதில் சந்தேகமில்லை. வாங்கியளிக்கும் தான சாமான்கள் நல்லதாகவும். சிறந்ததாகவும் இருத்தல் அவசியம். மேலும் ஒன்று, சென்னை போன்ற மாநகரங்களில் தற்போது இல்லத்தில் இந்த அபர கர்மாவைச் செய்யப் பலருக்கு இடவசதி இல்லாமலிருக்கலாம். அதுபோது 12 நாட்கள் வரை பொதுச் சாவடிகளில் கர்மாவை நடத்தலாம். வசதியுள்ளவர்கள் த்ரவியம் (கைக்காக) செலவழித்தால்தான் கர்மா பூரண பலைத் தரும். இதில் சந்தேகம் வேண்டாம். பணத்தை வைத்துக் கொண்டு. அபரகர்மாவிற்கு செலவழிக்க மனசு வரவில்லை என்றால் இது நன்றி கெட்டச் செயலாகும். பிறகு வருத்தப்பட வேண்டிவரும். * வசதி இல்லாத போது: * மனோபாவம்: * நமது குடும்பம் «க்ஷமமாக இருக்கும்: * வேதங்களும் சூத்திரங்களும்: |
அபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும் (Excerpts from the chapter APARA KARMA from the Tamil book titled வேதமும் பண்பாடும் by Sarma Sastrigal. )இந்த அபர கர்மா மொத்தம் 12 நாட்கள் நடைபெறும் என்பது நாம் அறிந்ததே. சுபஸ்வீகாரத்துடன் சேர்த்தால் இது மொத்தம் 13 நாட்களாகும்.
LikeLike